அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/5/13

தேவாங்க வம்ச வரலாறு

தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு வந்தனர். காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர் வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக் குறையைக் கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம் வந்தது. அதைப்பெற்று மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம் அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர். இவர்கள் யாவரும் சிங்கக் குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700 முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700 கோத்திரங்கள் ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று குலங்களைப் பெருக்கினர். இனி, காளசேன மன்னன் தனதுமக்களில் சிறந்தவனும் மூத்தவனுமாயிருந்த ரூபசேனன் என்பவனுக்கு முடிசூட்டி ஆட்சியை அளித்துவிட்டுத் தவமேற்கொண்டு மனைவியுடன் கானகம் சென்றான். ரூபசேனன் ஆட்சிபீடமேறி செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திவரும் காலத்தில் பரிட்டாணம் என்னும் நகரை சக்திராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அப்போது அந்நகரில் வசித்து வந்த சோமசர்மா என்னும் வேதியன் குழந்தைப் பேறு இல்லாததால் நகரிலிருந்த சந்திரமௌளீஸ்வரர் கோயிலுக்கு போய் குழந்தை வேண்டி இறைவனைப் பூசித்து வந்தான். இரவு பகல் அங்கேயே இருந்து வழிபட்டு வந்தான். இவன் இவ்வாறு இருக்க, ஒருநாள் இரவு தனபாலன் என்னும் வணிகன் திருக்கோயிலுக்கு வந்து பிள்ளைவரம் வேண்டி இரத்தினக்கற்களால் அர்ச்சனை செய்து வழிபட்டான். வணிகனின் பக்தி பூர்வமான வழிபாட்டுக்கு மகிழ்ந்து இறைவன், ' வைசியனே! உனக்கு மகப்பேறு அளித்தனன். நீ உன் வீட்டுக்குப் போ ' என்று அருள் செய்தான். வரம் பெற்ற வணிகன் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க ஆடிப்பாடிய வண்ணம் திருக்கோயிலை வலம் வந்தான். இதைக் கண்ட மறையவன் மூண்ட சினத்தோடு கோயிலுக்குள் போய் இறைவனை நோக்கிப் பரமேஸ்வரா! நீ எத்தகைய பட்சபாதம் உடையவன்? நான் எத்தனை நாட்களாக உன்னைப் பூவும் நீரும் கொண்டு வழிபட்டு வருகிறேன். என் வழிபாட்டுக்கு இரங்கி புத்திரப்பேறு அருளாமல் இன்று வந்து இரத்தினக்கற்களைக் கொண்டு வழிபட்ட வணிகனுக்கு உடனே மகப்பேறும் வரத்தை அருளினையே! நீ நீதி உடையவன் தானா? கருனையற்றவனே! நான் பூக்கொண்டு செய்த பூசை உனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. வைசியன் கல்லால் செய்த பூசை உனக்கு ஆனந்தத்தை அளித்து. நான் நாள்தோறும் பூ பறித்து மாலை தொடுத்துக் கையெல்லாம் காய்த்து விட்டது. வில்வ மூட்டை சுமந்து தலையும் முரடு தட்டிவிட்டது. இவ்வாறு நான் பூக்கொண்டு செய்த அர்ச்சனை வழிபாட்டுக்கு இரங்காது சிறு கற்களால் வைசியன் செய்த வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவனுக்கு பிள்ளைப்பேறு அருளினாயல்லவா? நல்லது. இதோ நானும் நீ மகிழும் கல்லாலேயே உனக்கு பூசனை செய்கிறேன். வணிகன் சிறுகல் கொண்டு வழிபட்டு உன் அருளைப் பெற்றான். நான் பெருங்கல் கொண்டு உன்னை வழிபடுகிறேன். சிருகல்லை விடப்பெருங்கல் உனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்மல்லவா? ' என்று சொல்லிப் பெருங்கல் ஒன்றைக் கொண்டு வந்து சிவலிங்க மூர்த்தியின் மீது போட்டான். கல் பட்டு சிவலிங்கம் உடைந்தது. மறையவனின் இத்தீயச்செயல் எவ்வளவு மதியீனமானது? இறைவனின் செயல்களை நம் சிறுமதி கொண்டு அளக்கக் கூடாது என்று அருளாளர்கள் கூறினர். " ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்கவேண்டாம் " என்று ஞானக்குழந்தை அருளியது. இறைவன் நீதிக்கிருப்பிடம். சொன்ன சொல்லுக்குமாறாகத் தன் தோழனே போனபோது கண்களைப் பறித்துக் கொண்டவரல்லவா இவர். அதனால் மறையவனின் செயல் அவனது பக்குவமின்மையைக் காட்டுகின்றது. முன்னைப் பிறவியில் வணிகன் தவஞ்செய்திருந்தான் தவத்தின் பயனாய் இப்பிறவியில் செல்வனாகவும் பக்தியுடையவனாகவும் பிறந்தான். அத்தவம் அவனுக்கு இப்போது மகப்பேற்றை அளித்து. மறையவன் வழிபட்டானேயன்றி பக்தியின் முதிர்ச்சியும் அருட்பக்குவமும் பெறவில்லை. அதனால் வணிகனின் பக்குவத்தையும் இறைவனின் அருட்குறிப்பையும் உணரவில்லை. அறியாமையால் அருள்பெற்ற வணிகன் மீது பொறாமையும் இறைவன் மீது சினமும் கொண்டு தகாத செயலைச் செய்தான். வேதியனின் தீச்செயலைக்கண்டும் கருணாமூர்த்தியாகிய இறைவன் அவன் செய்த வழிபாட்டுக்காக அவனுக்கும் பிள்ளைவரத்தை நல்கினான். அதோடு அவனது தீச்செயலுக்கு தண்டனையாக குழந்தை பிறந்ததும் அவன் தலைவெடித்து மரணம் அடையும் படியும், பிறந்த குழந்தை ஒழுக்கத்தால் சூத்திரன் ஆகும்படியும் விதித்தான். இவ்வாறு வரத்தைப் பெற்ற வேதியன், குழந்தை பேற்றுக்காக மகிழ்ச்சியும் தண்டனையையும் எண்ணி வேதனையும் அடைந்தவனாய் வீட்டுக்குப் போனான். அவன் மனைவியும் வரத்தின்படிக் கருவுற்று உரிய காலத்தில் ஒரு மகவை ஈன்றாள். அப்போதே வேதியனும் தலை வெடித்து மரணம் அடைந்தான். அவன் மனைவி இதுகண்டுக் கணவன் போன வழித் தானும் போனாள். பெற்றோரை இழந்த குழந்தை தாய்மாமன் ஆதரவில் துருமளன் என்னும் பெயரைப் பெற்று வளர்ந்தது. குழந்தை பெரியவனாக வளரும் போதே எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுணர்ந்து கலை வல்லோனாய் விளங்கியது. துருமளன் நாள்தோறும் காட்டுக்குப் போய் மாமன் செய்யும் வேள்விக்குச் சமயத்துக் குச்சிகளை பொருக்கிக் கொண்டு வந்து கொடுப்பான். இவ்வாறு நடந்துவரும்போது ஒரு நாள் காட்டில், பெண் நாய் ஒன்றை ஆண்சிங்கம் புணரக் கண்டான். அதிசயித்து நின்றான். பின் பெண் நாய் அங்கிருந்து ஊருக்குள் போகவும், அதை அவன் பின் தொடர்ந்து போனான். நாய் சக்திராஜன் அரண்மனைக்குள் புகக்கண்டு அகன்றான். அந்த நாய் கருமுதிர்ந்து சிங்கத்தின் சாயலோடு கூடிய இரண்டு நாயக் குட்டிகளை ஈன்றது. ஒருநாள் சக்திராஜன் தனது தோட்டத்திலிருந்த பனைமரங்கள் ஏழின் முடிகளை ஒரே அம்பால் இறுத்து வீழ்த்தினான். அப்போது அங்கிருந்த மக்கள் அதைக்கண்டு மன்னனின் வீரத்தைப் பலவாறு பாராட்டி ஆரவாரம் செய்தனர். அந்நேரத்தில் அங்கு கூட்டத்தில் ஒருவனாய் இருந்த துருமளன், முன்வந்து, ' பனைகளின் முடிகளை விட மரங்களையே வேரோடு சாய்ப்பது புகழுக்குரியதாகும்' என்றான். இதைக்கேட்ட சக்திராஜன் ' நீ கூறும் வீரச்செயலை நீ செய்து காட்டவல்லையா? என்று கேட்டான். துருமளன் அவ்வாறே செய்வதாகக் கூறி, வில்லைவாங்கி அம்பு தொடுத்து ஏழு பனைமரங்களையும் வேரோடு வீழ்த்தினான். இதைக்கண்ட மன்னன் துருமளனைப் பாராட்டி, ' நீ விரும்பும் பொருளைக் கேள் தருகிறேன்' என்றான். உடனே துருமளன் அரண்மனையில் வளரும் அதிசய நாய்க்குட்டிகளைத் தருமாறு கேட்டான். மன்னனும் மகிழ்ச்சியோடு அந்த நாய்க்குட்டிகளை அவனுக்கு அளித்தான். துருமளன், பெற்ற நாய்க்குட்டிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரியமாய் வளர்த்தான். நாய்களை வளர்ப்பது சூத்திர ஆசாரம் என்று கருதிய பிராமணன் துருமளனை வீட்டை விட்டே துரத்திவிட்டான். இதிலிருந்து துருமளன் சூத்திரன் என்றே அழைக்கப்பட்டான். மாமன் வீட்டைத் துறந்த துருமளன் நாய்களுடன் சக்திராஜன் அரண்மனையை அடைந்து மன்னனின் அன்பைப் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தான். ஒருநாள் பௌத்த மதத்தைச் சார்ந்த நேபாள நாட்டு மன்னன் சுதாகரன், சக்திராஜனைக் காண பரிட்டாண நகரம் வந்தான். மன்னனைக் கண்டான். பின் அவன் துருமளனிடம் வந்து, ' உனக்கும் சக்திராஜனுக்கும் இடையே உள்ள நட்பு ஆறு திங்களில் பகையாக மாறும். நான் நிமித்த நூல் வல்லவன். ஆகையால் இது பொய்க்காது. பகை வந்துற்ற போது என்னை நீ வந்து அடைவாயக' என்று கூறிச் சென்றான். இது நடந்து சிலதிங்களுக்குப் பின் துருமளனும் சக்திராஜனும் காட்டுக்கு வேட்டையாடப் போயினர். வேட்டையினிடையே இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். அப்போது சிங்கம் ஒன்று இவர்களை எதிர்த்தது. அதைச் சூத்திரன் அச்சமின்றி எதிர்த்து நின்று பாணம் ஒன்றால் கொன்றான். மன்னனைப் பெருமைப்படுத்த எண்ணிச் சூத்திரன், சிங்கத்தை மன்னன் கொன்றதாக வேட்டைக்காரரிடம் சொன்னான். அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஊரில் மக்களிடையே அறிவித்தனர். மக்களும் மன்னனின் வீரத்தைப் பாராட்டி அவரைக் கோலாகலமாக வரவேற்க ஆயுத்தம் செய்தனர். அரசியும் மாவீரனாக வரும் தன் கணவனை வரவேற்கத் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தலையில் சூடிக்கொள்ள பூவை எதிர்பார்த்து நின்றாள். பூக்காரி காலந்தாழ்ந்து வந்தாள். வந்தவளை அரசி மிகவும் கடிந்து கொண்டாள். " ஊரார் ஒன்றுதிரண்டு வரவேற்கும் போது நான் அரண்மனை வாயிலில் சரியான நேரத்தில் மன்னனை வரவேற்க வேண்டாமா? நல்ல சமயத்தில் இவ்வாறு தாமதம் செய்கின்றாயே? இது உனக்குச் சரியா? " என்று கோபித்துக் கொண்டாள். இதைக் கேட்ட பூக்காரி ஏளனமாகச் சிரித்த வண்ணம் ' அரசியே! உண்மையில் சிங்கத்தைக் கொன்றது உன்கணவன் அல்ல. கொன்றவன் சூத்திரன் என்னும் துருமளன் ஆகும். மன்னன் மீதுள்ள மதிப்பின் காரணமாகத் துருமளன், வேட்டைக்காரரிடம் மன்னன் சிங்கத்தை கொன்றான் என்று உபசாரமாகச் சொன்னான். அதை நம்பி வேட்டைக்காரர் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் வரவேற்பில் ஈடுபட்டுள்ளனர். அதைப் பார்த்துத் தாங்களும் உபசரிக்கப் பரபரக்கின்றீர்கள். இச்செய்தி உனக்கெப்படித் தெரியும் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். என் கணவன் பூக்கொய்யக் கானகம் சென்றிருந்தார். அப்போது கானகத்தில் சூத்திரன் சிங்கத்தை எதிர்த்து அம்பு தொடுத்து சிங்கத்தைக் கொன்றதைப் பார்த்தார். அதை அவர் எனக்குச் சொல்லக் கேட்டறிந்தேன். அதன் பிறகு அவர் கொணர்ந்த பூவை எடுத்துக்கொண்டு இங்கு வருகிறேன். இதனால் தான் நான் தங்களுக்கு பூக்கொண்டு வருவதற்குத் தாமதம் ஆயிற்று என்றாள். சிங்கத்தைக் கொன்றது மன்னன் அல்ல என்பதை அறிந்த அரசி வரவேற்கும் எண்ணத்தைக் கைவிட்டு அந்தப்புரத்திலேயே இருந்து விட்டாள். மன்னனை ஊர்மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். மகிழ்ச்சியோடு வரவேற்பை ஏற்றுக்கொண்ட மன்னன் அரண்மனையை அடைந்தான். அரண்மனை வாயிலில் தாதிகள் ஆரத்தி எடுக்க மந்திரி பிரதானிகள் முதலியோர் வரவேற்றனர். வரவேற்புக் கூட்டத்தில் அரசியைக் காணாது மன்னன் விரைந்து அரண்மனைக்குள் போனான். அரசியைக் கண்டான். வரவேற்பில் நீ ஏன் கலந்து கொள்ளவில்லை' என்று அரசியைக் கேட்டான். அதற்கு அரசி ' சிங்கத்தைக் கொன்ற சூத்திரன் அன்றோ பாராட்டுக்குரியவன்! தாங்கள் அல்லவே? போலி ஆரவாரம் எதற்கு? ' என்றாள். இதைக்கேட்ட மன்னன் துணுக்குற்று உள்ளத்துள்ளே சினம் பொங்க அவ்விடத்தை விட்டு அகன்றான். சூத்திரன் சிங்கத்தைக் கொன்ற செய்தி சூத்திரனும் மன்னனும் மட்டும் அறிந்த செய்தியாகும். இதை வேறெவரும் அறியார். அப்படியிருக்க, அந்தப்புரத்திலிருந்த அரசி இச்செய்தியை எப்படி அறிந்தாள்? என்று மன்னன் சிந்தித்தான். சூத்திரனுக்கும் அரசிக்கும் இரகசியத் தொடர்பு ஏதேனும் இருக்குமோ? என்று ஐயுற்றான். உள்ளக் கொதிப்போடு இரவைக் கழித்தான். விடிந்ததும் மன்னன் சூத்திரனை வரவழைத்து ' நீ என் நண்பனல்ல, ஊரைவிட்டப் போய்விடு' என்று உத்திரவு இட்டான். மன்னன் சினத்துக்குக் காரணமறியாமல் சூத்திரன் திகைத்தான். என்றாலும் மன்னன் உத்தரவு ஆதலால் மாறுபேசாமல் உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்போது, நேபாள மன்னன், முன்னாள் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன. நேராக நேபாள நாட்டின் தலைநகரான ஜெயந்தி நகருக்குப் போனான். மன்னன் சுதாகரன் முன் போய் நின்றான். சுதாகரமன்னனும் மகிழ்ச்சியோடு சூத்திரனை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டான். குற்றமற்ற தன்னைக் காரணமின்றி நாடு கடத்திய சக்திராஜனைப் பழிவாங்கச் சூத்திரன் எண்ணினான். சுதாகரமன்னனைச் சக்திராஜன் மீது படையெடுக்கும்படி செய்தான். பெரும்படைகளோடு சுதாகரன் துருமளனுடன் சக்திராஜனின் நாட்டை அடைந்து தலை நகரை முற்றுகையிட்டான். இதை அறிந்த சக்திராஜன் சூத்திரனது வீரத்தை எண்ணி தேவாங்க மரபில் வந்த ஆமோத நகர மன்னன் காலசேன மன்னனைத் தனக்கு உதவியாகக் கொள்ள அவனுக்கு அழைப்பை விடுத்தான். காலசேன மன்னனும் அழைப்பை ஏற்றுத் தன் மக்களுடன் நால்வகைப் படைகளோடு பரிட்டாண நகருக்கு வந்தான். இதை அறிந்த சுதாகரன் சூத்திரனுடன் ஆலோசித்து, மேலும் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்வான் வேண்டி சாஹ்யபர்வதத்திலுள்ள மகா மாயாவியும் பலசாலியுமான பஞ்சபுடன் என்னும் பௌத்தனைத் துணை சேர்த்துக் கொண்டான். போர் துவங்கியது. போர் கடுமையாக இருந்தது. போரில் சூத்திரனால் சக்திராஜனும் பஞ்சபுடனால் காலசேனனும் மாண்டனர். காலசேனன் மடியக் கண்ட அவன் மகன் ரூபசேனன் தன்தந்தையைக் கொன்ற பஞ்சபுடனை எதிர்த்துப் போரிட்டுப் போரில் அவனைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான். சூத்திரன், தன் பகைவனான சக்திராஜனைக் கொன்றதோடு திருப்தியுற்று நேபாள மன்னனை அழைத்துக்கொண்டு நேபாள நாட்டை அடைந்தான். போரில் வெற்றி கண்ட ரூபசேனன் சக்திராஜன் மகனை பரிட்டாண பட்டணத்துக்குத் தலைவனாக நியமித்து விட்டு நேபாள நாட்டின் மீது போருக்குப் போனான். அப்போது நேபாள மன்னன் போருக்கு வராததால் ரூபசேனன், நேபாள நாட்டைத் தனதாக்கிக் கொண்டு ஆட்சிபீடத்தில் தன் சகோதரன் ஒருவனை வைத்து விட்டு ஆமோத நகரம் திரும்பினான். ரூபசேனன் ஆட்சியில் சகரநாடு செழித்தது. அறம் வளர்ந்தது. மக்கள் குறைவின்றி வாழ்ந்தனர். நலம்.

No comments:

Post a Comment