அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/11/13

73 .சிருங்கி மகரிஷி கோத்ரம்

விபண்டக மகரிஷியின் குமாரர் இம்மகரிஷி. வேதம் எனும் கொடி தன் மீது படர் கொழுகொம்பாக இருந்தவர். வேதங்களில் மிகவும் வல்லவர். சிறந்த தவசி. இவர்க்குத் தலையில் மான் கொம்பு ஒன்று முளைத்து இருந்தது. மான் வயிற்றிலிருந்து பிறந்தார்.

சிருங்கம் = மான்.

அங்க நாட்டை உரோமபாத மன்னன் அரசாண்டு வந்தான். அவன் நாட்டில் மழை இன்றிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ரிஷ்ய சிருங்கர் அங்க நாட்டில் காலடிவைத்தால் மழை பொழியும் என்று கூறினர். தவசிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் இம் மகரிஷி அவரை எப்படி அழைத்து வருவது என்று புரியாமல் அனைவரும் தடுமாறி நின்றனர்.

இரண்டு வேசையர் அப்பெரும் பணியை ஏற்றனர். தவசிகளைப் போன்ற வேடம் இட்டனர். விபண்டகமுனிவர் இல்லாத நேரம் பார்த்து ரிஷ்ய சிருங்கரின் ஆசிரமம் சென்றனர். ரிஷ்ய சிருங்கர் இவர்களைத் தவசியாக எண்ணி வரவேற்றார். நன்றாக உபதேசித்தார்.

இங்ஙனமே விபண்டகர் இல்லாத நேரம் பார்த்து ஆசிரமம் சென்று ரிஷ்ய சிருங்கரின் நட்பினைப் பெற்றனர். அவரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆயினர்.

தம் ஆசிரமத்திற்கு வருகை தந்து தம் உபசரிப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினர் போலித்தவசிகள். ரிஷ்ய சிருங்கர் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் கிளம்ப அவர்கள் முனிவரை அங்க நாட்டு எல்லைக்குள் அழைத்துச் சென்றனர்.

முனிவரின் திருவடிப்பட்டவுடன் நாடு மலிய மழை பொழிந்தது. உரோ'மபாதன் முனிவரின் வருகையைப் பெய்த மழையால் உணர்ந்தான். முனிவரைத் தன் நாட்டு எல்லையில் வரவேற்றான். வேசையரின் சூழ்ச்சியை எண்ணி சினம் கொண்ட அவரை மன்னன் சமாதானப்படுத்தினான். பெருமானே! தங்கள் வருகையால் இந்நாட்டு மக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் மழை பெற்று உயிர் பிழைத்தனர் என்று பணிந்த மன்னனை மணம் மகிழ்ந்து ஆசிகள் வழங்கினார் முனிவர். அரண்மனைக்கும் விஜயம் செய்தார்.

உரோமபாதன் தன் வளர்ப்பு மகள் சாந்தையை முனிவருக்கு மணம் முடித்துத் தந்தான். இச்சாந்தை தசரத மன்னரின் மகள். இப்பெண்ணை உரோமபாதன் தத்தெடுத்து வளர்த்து வந்தான்.

தசரத மன்னன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ரிஷ்ய சிருங்கரை அழைத்துச் சென்றான். ரிஷ்ய சிருங்கர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய அதனால் இராமன், பரதன், இலக்குவன் சத்ருக்கனன் ஆகியோர் பிறந்தனர் என்பன போன்ற வரலாற்றினை இராமாயணத்துள் காணாலாம்,

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு :- உறுதி உடையவர்.
கடுபுலதவரு :- இப்பெயர்தான் கடுபேலாரு என்று வழங்கப்படுகின்றது. கடுப்பு என்றால் தெலுங்கில் வயிறு. இதனைப்பற்றி வந்த ஒரு பெயர்.
குக்கிள்ளதவரு :- அவரை முதலிய நவதான்யங்களைச் சுண்டலாகச் செய்து நிவேதனம் செய்பவர்.
சந்தாதவரு :-
துக்குலதவரு :- துக்குக்கெச்சாள. துக்கு வியாபாரம் செய்தவர். - கெச்சாள வியாபாரம் செய்தவர்.
புட்டாதவரு :-
பூடிதவரு :- சென்னைக்கு அருகில் உள்ள பூடி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
முச்சளதவரு :-
கட்டியதவரு :-
காடலதவரு, சல்லாதவரு, ரூகலதவரு, கண்டுபலதவரு, மாசந்ததவரு, முகலிதவரு, குன்ச்சதவரு, மாடதவரு, கடபியதவரு - கடப்பா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர், குக்கேதவரு, முவ்வலதவரு.

No comments:

Post a Comment