அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/24/13

விடைக் கொடி தந்த வெற்றி

தோற்றோடிய அரக்கர்கள் வியாக்ரமுகன் இறந்த செய்தியை வச்சிரதந்தனுக்குச் சொன்னார்கள். இதைக்கேட்ட அவன் மிகவும் துயருற்றான். பின் சினங்கொண்டு தேவாங்கனைக் கொள்வதாகச் சூளுரைத்து நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் தங்கியருந்த ஏமகூடம் என்னும் மலைச்சாரலுக்கு வந்தான். வச்சிரதந்தன் போருக்கு வந்திருப்பதை அறிந்த தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் போர்க்கோலம் பூண்டு தேவப் படைகளுடன் போர்க்களம் சேர்ந்தனர். பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி நீண்டநேரம் போர் நடந்தது. வச்சிரதந்தன் விட்ட ஒரு அரிய மந்திரப்படை தேவர்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவித்தது. இதைக்கண்ட தேவாங்க மன்னன் மந்திரப்படையை அழித்துப் போரை முடிவிக்குக் கொண்டு வர எண்ணினார். விடைக்கொடியை எடுத்தார். பூசை செய்து மந்திரபலத்தை ஊட்டி அதைப் பகைவர்கள் மீது ஏவினார். இப்படையிலிருந்து யானை சிங்கம் புலி கரடி பன்றி யாளி சரபம் பூதகணங்கள் முதலியன தோன்றி அரக்கர் படைகளைச் சின்னா பின்னப்படுத்தின. இந்த ஆயுதம் விளைவித்த பயங்கரமான சேதத்தை எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றலையும் கண்ட வச்சிரதந்தனும் அவன் துணைவர்களும் செய்வது அறியாது அஞ்சி நடுங்கிப் போர்க்களம் விட்டு ஓடோடி மகேந்திரம் அடைந்தனர். தோற்று ஓடிய வச்சிரதந்தன் போரில், விடைக்கொடியால், உடன் பிறந்தாரும் மைந்தரும் மருமக்களும் துணைவரும் இறந்ததை எண்ணி ஊணுறக்கமின்றி வருந்தினான். இறந்தவர்களின் மனைவியர்கள் நாணிழந்து துன்புற்று அழுத குரல் கேட்டு உள்ளம் உருகினான். எங்கும் துக்கம்; எங்கும் அழுகுரல், துக்கத்தை மாற்றிக் கொள்ளும் வகையறியாது துன்புற்றான். தனக்கேற்பட்ட துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழுது சிறிது ஆறுதல் பெறலாமென எண்ணினான். இவனுக்கு வித்தையுத்தேசன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். நேராக அவனிடம் போனான். தன் துன்பத்தை அவனிடம் சொன்னான். தேவாங்க மன்னனின் தீரத்தையும் போர்த்திறத்தையும் வல்லமையையும் அவனிடம் உள்ள விடைக்கொடியின் ஆற்றலையும் கூறி, ' தேவாங்கனிடம் விடைக்கொடி இருக்கு மட்டும் தேவாங்கனின் துணைபெற்றிருக்கும் தேவர்களை வெல்ல முடியாது. நீயோ பெரிய மாயாவி. பலவகையான வேடங்களைக் கொள்வதிலும் வல்லவன். நீ நினைத்தால் அந்த விடைக் கொடியைக் கவர்ந்து கொண்டு வந்துவிட முடியும். அவ்வாறு செய்வாய? தேவாங்கனிடமுள்ள விடைக்கொடியை கவர்ந்து கொண்டு வந்து விட்டால் தேவர்களை எளிதில் வென்று விடலாம் ' என்றான். இதைக் கேட்ட வித்தையுத்தேசன் அவ்வாறே செய்வதாக நண்பனுக்கு உறுதி கூறி வஞ்ச வேடம் பூண்டு ஆமோத நகருக்குச் சென்றான்.

No comments:

Post a Comment