அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/28/13

அருங்கலை உணர்த்திய வித்யாதரர்

சிவபெருமான் ஆணைப்படி, மேருமலைச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்த ஏமவருணனின் முன், தேவலர், குழந்தையாகத் தோன்றினார். குழந்தையைக் கண்ட ஏமவருணனும் அவன் மனைவியும் பெருமகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று கமலாட்சன் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவன் வேதாகம சாத்திரங்களை தனது பதினோராவது வயதிலேயே நன்கு கற்றுத்தேர்ந்து சகல கலா வல்லவனாகத் திகழ்ந்தான். நிறை ஞானியான தேவலமுனிவர், இப்பிறப்பில் சிறு வயதிலேயே எல்லாக் கலைகளையும் கற்று வல்லவரானதில் வியப்பொன்றும் இல்லை. "ஒருமைக்கட் டான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்பது மறை மொழியன்றோ! கந்தருவர் வித்யாதரர் தேவர்கள் முதலிய பலரும் கலைஞானம் பெற வேண்டி இவரை அடைந்து மானவராய்த் தொண்டு செய்து கலைஞானம் பெற்றனர். இறைவன் அருளாணைப்படி வித்யாதரர்களுக்கு கலைஞானம் உணர்த்தித் தமது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாராதலால் மீண்டும் கயிலையை அடைந்தார். தாம்பயின்ற இசையை யாழில் வைத்து கயிலைவாசனின் செவியில் அமுதெனப் பாய்ச்சும் பணியில் தலைப்பட்டார், இசைக்கு மயங்கும், ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் விளங்கும் சிவபெருமான், கமலாட்சனின் இனிய யாழிசையை மாந்தி இனிது வீற்றிருந்தார். சிவபெருமான் மட்டுமல்லாமல் கயிலையிலிருந்து எல்லா உயிரினங்களும் அத்தெய்வீக இசைக்கு மயங்கி உருகின. பகை உயிர்கள் பகை மறந்து ஒன்றுபட்டன. பாம்பு மயில் மீது விழுந்தது. சிங்கமும் யானையும் நெருங்கி நின்றன. புலி வாயினருகே மான்கள் அச்சமின்றி நடமாடின. முனிவர்களின் தவங்குலைந்தது. காதலர்கள் காதலால் குழைந்தனர். சூரிய சந்திரர்கள் தாம் செல்லும் திசையை மறந்தனர். கல்லும் உருகியது. காற்றும் மரக்கிளைகளும் அசைவற்று இருந்தன. காட்டாறுகள் ஓடவில்லை. கடலலைகள் ததும்பவில்லை. இவ்வாறு நிற்பனவும் இயங்குவனவுமாயுள்ள எல்லா உயிரினங்களும் பொருள்களும் இசைமயமாய் செயல்மறந்து நின்றன. இத்தகைய இசையால் நாள்தோறும் இறைவனை யாழ் மீட்டிப், பாடி பரவிப் பணிந்த வண்ணம் கமலாட்சன் இருந்தார். இசைவல்ல ஐவர இசைப்பணியோடு அளவற்ற புதிய பாடல்களையும் நல்ல நூல்களையும் இயற்றிச் சிவபெருமான் முன் அரங்கேற்றினார்.

No comments:

Post a Comment