அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

11/14/14

சனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2014 -2017

சனி பெயர்ச்சி பலன்கள் 
 கடகம்  2014 -2017

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்

உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு விடா முயற்சியுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே! இது நாள் வரை 4 ஆம் வீட்டில் சனி சஞ்சரித்ததால் உங்களுக்கு நடைபெற்று வந்த அர்;த்தாஷ்டம சனியானது வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் முடிவடைந்து வரும் 19.12.2017 வரை சனிபகவான் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் கடந்தகாலப் பிரச்சினைகள் விலகும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகளும் ப+ர்வீக சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும் என்றாலும் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். கடந்தகாலப் பிரச்சினைகளும் அலைச்சல்களும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையில் உயர்வுகள் உண்டாவதுடன் கௌரவமான நிலைகளும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறுவர். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கடந்த காலங்களிலிருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். அசையா சொத்துகளிலிருந்த பிரச்சினைகள் விலகி பூமி மனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை மேலோங்கும்.
சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு தனஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும்;. எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும்.  02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ள காலத்தில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை உண்டாக்கும் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மனக் கவலைகள் உண்டாகும் என்றாலும், பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களால் மன சங்கடங்கள், வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
     கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் மனக் கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. ப+ர்வீக சொத்து விவகாரங்களிலுள்ள வம்பு வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். பங்காளிகளை அனுசரித்து நடப்பது நன்மையளிக்கும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்
     உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். சில நேரங்களில் வேலைப் பளு அதிகரித்து நிறைய நேரம் உழைக்க வேண்டியிருந்தாலும் அதனால் அடைய வேண்டிய லாபத்தையும் அடைய முடியும். விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையப் பெற்று உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம். சில தடைகளுக்குப் பின் நிறைவேறும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற லாபத்தினை தடையின்றிப் பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலத்தினைப் பெற முடியும். வெளியுர் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடம் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். புதிய நவீனகரமான பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.

பெண்கள்
     உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பிள்ளைகளிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் ஏற்ற இறக்கமான இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையிலிருப்போர்களுக்கும் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.

அரசியல்
     அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக செலவுகளும் செய்வீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்பாராத திடீர் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறும்.

விவசாயிகள்
     பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைக்கு விற்று பட்ட பாட்டிற்கான பலனை அடைந்து விடுவீர்கள். வங்கியிலிருந்தும் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பழம்,  பூ காய் போன்றவற்றாலும் கால்நடைகளாலும் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திக்க நேரிடும்.

மாணவ மாணவியர்
     கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபகமறதி ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுது போக்கும் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றும் என்பதால் பெற்றோர் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஜென்ம இராசியில் குரு வக்ர கதியிலும். 3 இல் இராகுவும் இருப்பதால்  பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் லாபமும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சுய நட்சத்திரத்தில் சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில்; குரு வக்ர கதியிலும், 3 இல் இராகுவும் இருப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிள்ளைகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும், எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். சனிக்கும் குருபார்வை இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.. அலைச்சல் டென்ஷன் குறையும். அசையும் அசையா சொத்துகளாலும் 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
பஞ்சம ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் மனசஞ்சலங்களாலும் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவி எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் நண்பர்களின் உதவியும் திடீர் தன வரவுகளும் உண்டாவதால் நிலைமையை சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என்றாலும் இராகு 3 இல் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  5 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 4 இல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு மீன்டும் அர்த்தாஷ்டம சனி நடைபெறவுள்ளது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. பொன், பொருள் சேரும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.குடும்பத்தில் திருமணம் போன்ற மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 6,9 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 5 லும். குரு 2 லும், ராகு 3 லும் சஞ்சரிப்பதால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் சற்றே கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். குடும்பத்தில் தடைபட்ட மங்கள கரமான சுபகாரியங்கள் தடை விலகி தட புடலாக கை கூடும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள்.  கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை நிலவும். மற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து பாராட்டுதல்களை பெறுவீர்கள.;; தொழில் வியாபாரம் போன்றவற்றிலும் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  2 ஆம் வீட்டில், சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்கும் யோகம் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல் படுவார்கள். சிலருக்கு ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு சாதகப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நிர்வாகத் திறனும் திறமைக்கேற்ற பதவி உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 5 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் குரு 2 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களை   சில தடைகளுக்குப்பின் நிறைவேற்ற முடியும்.  பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும்;. திருமணம் போன்ற மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். வம்பு வழக்குகளில் இழூபறியான நிலை இருக்கும்.  கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாக கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும். 8.1.2016 முதல் இராகு 2 லும் கேது 8 லும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து லாபம் பெருகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
பஞ்சம ஸ்தானத்தில் சனியும், 3 இல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். சர்ப கிரகங்களான ராகு 2 லும், கேது 8 லும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்க மாகத்தான் இருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை சற்றே தவிர்க்கவும்;. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்;து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சந்று தள்ளி வைக்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில்; வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன் அமையும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 3,12 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 3 இல் குருவும் சஞ்சரிப்பதால்; பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாடுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை  தவிர்ப்பது நல்லது.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 5 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் 2 இல் இராகு, 8 இல் கேது  சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். நெருக்கியவர்களிடையே வீண் வாக்குவாதங்களும் தேவையற்ற பகைமையுணர்வும் உண்டாகும். குடும்பத் தேவைகளை ப+ர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ப+ர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் ஒரளவுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் சற்றே மருத்துவ செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதார நிலையும் ஏற்றத்தாழ்வுடன் அமைவதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 5 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 4 இல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருந்தாலும் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நிலவும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளிய+ர் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான உயர்வுகளைப் பெறுவார்கள். கடன்கள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்

புனர்பூச 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     கூர்மையான அறிவுத்திறனும் தான தர்மம் செய்யும் பண்பும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நன்மையளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். புதிய ப+மி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் சிந்தித்துக் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     தன்னடக்கமும், ஒழுக்கமும், சந்தோஷமான வாழ்வும் ஒருங்கே அமையப் பெற்ற உங்களுக்கு சனி 5 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலுள்ள வர்களையும் உற்றார் உறவினர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருந்தாலே வாழ்வில் பல முன்னேற்றங்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் வீண் பழிச்சொற்களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     நல்ல பேச்சாற்றலும், கலை, இசை, போன்றவற்றில் ஆர்வமும் கொண்ட, உங்களுக்கு சனி பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்  நன்மை தீமை கலந்த பலன்களே உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். கடன்கள் குறையும். எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கம் அடையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை  : திங்கள், செவ்வாய்
நிறம் : சிவப்பு, வெள்ளை
கல் :         முத்து
திசை : வடகிழக்கு
தெய்வம் : வெங்கடாசலபதி

11/13/14

சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம்: (2014 -2017)

சனி பெயர்ச்சி பலன்கள்
 மிதுனம்: (2014 -2017)




மிதுனம்: மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் கொண்டு அனைவரிடமும் அன்பாகப் பழக்கக்கூடிய சுபாவம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! உங்கள் இராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளது  அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக் கூடிய அமைப்பாகும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியமானது சுறுசுறுப்புடன் அமைந்து எல்லா பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சனி பார்வை  3,8,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் சிறுசிறு இடைய+றுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். இது வரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் ஒடும் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று அவர்களின் திறமைகளும் வெளிப்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, உங்களுக்கு இருந்து வந்த வம்பு,வழக்குகள் யாவும் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் கூட அனைத்தும் நினைவாகும். வரும் நாட்கள் ஒரு பொற்காலமாக இருக்கும். 

சனி 6 இல் பலமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு முயற்சி ஸ்தானமான 3 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சியில் சில இடையுறுகள் ஏற்படும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 4 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு 5 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உங்களின் உடல் நிலையானது மிகவும் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். மனைவி பிள்ளைகளும் நலமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் நலமாக இருப்பார்கள்.

குடும்பம்  பொருளாதார நிலை
     குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களும் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர் காதல் கைகூடுமா என ஏங்குபவர்களுக்கும் பெற்றோர்களே திருமணம் முடித்து வைப்பார்கள். பொன், பொருள், ஆடை, அபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும். புதிய மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

உத்தியோகம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு சனி பகவான் 6 இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் குடும்பத்தோடு சேருவதற்கான இட மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் நிலுவைத் தொகைகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உடன் பணிபுரிவர்களின்; ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த நல்ல லாபத்தினைப் பெற முடியும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும், நல்ல லாபம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புடன் மகிழ்ச்சியினை உண்டாக்குவதோடு அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய நவீன கருவிகளையும் வாங்கி சேர்க்க முடியும்.

பெண்கள்
     பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றக் கூடிய பொற்காலமாக அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள், சேர்க்கைகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் ப+ர்த்தியாகும். பணியில் உயர்பதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை பெற முடியும்.

அரசியல்
     அரசியல்வாதிகள் மக்களின் அமோகமான ஆதரவினைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள்  அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகளைப் பெற முடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

விவசாயிகள்
     விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் உண்டாகும். மழை வளமும் மண் வளமும் விளைச்சலுக்கு கை கொடுக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கி விளைச்சலையும் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய பூமி நிலம் வாங்ககூடிய வாய்ப்பும் உண்டாகும். கால் நடைகளாலும் நல்ல லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.

மாணவ மாணவியர்
     கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மேலும் ஊக்கமளிப்பதாக அமையும். நண்பர்களின் ஆதரவு நற்பலன்களை உண்டாக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 7,10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 2 இல் குரு வக்ர கதியிலும். 4 இல் இராகுவும் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும்.  கடந்த காலத்திலிருந்த சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் விலகி நல்ல தீர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும்;. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற முடியும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய யோகமும் உண்டாகும்;.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சுய நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நிங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 2 இல் குரு வக்ர கதியிலும் 4 இல் இராகு இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்,டென்சன் ஏற்படுமே தவிர தொழில் உத்தியோக ரீதியாக வெற்றிகள் தொடர்ந்தபடி இருக்கும்.பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இதனால் சாதகமான பலன்களைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. நல்ல நட்புகளால் அனுகூலப்பலனையும் பெற முடியும். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் 05.07.2015 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய பூமி மனை, வண்டி வாகனம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். உற்றார்  உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபங்கள் சிறப்பாகவே இருக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.  பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் லாபம் தரும். மாணவர்கள் கல்வியில் சற்றே ஈடுபாட்டுடன் செயல்படுவதும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  6 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 5 இல் சஞ்சரிக்க இருப்பதாலும். 3 இல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் அனுகூலமாகவே அமைவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 7.10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.குரு 3 இல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்களும் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  குரு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன் மனைவியிடையே சிறந்த அன்யோன்னியமும் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் சிறு தடைக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு ஓடி ஒளிவார்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். 

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 3 லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் இராகு 3 ஆம் வீட்டில் வீட்டில் சஞ்சரிப்பதால்  பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்ககள் கௌரவமான நிலையினைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும்.உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை பெற முடியும். கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல் சனி வலுவாக சஞ்சரிப்பதும், இராகு 3 இல்; சஞ்சரிப்பதும்  உங்களின் பலத்தை அதிகரிக்கக் கூடிய அமைப்பாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற முடியும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு மூலம் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். குரு  4 இல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசியாதிபதியான புதனின் சாரத்தில் சனியும், 3 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். குருபகவான் இக்காலங்களில் 4 இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதையும் உயரும். 

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும்  இராகு 3 இல் இருப்பதால்  பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.  வீடுமனை போன்றவை வாங்கக் கூடிய யோகம் போன்ற யாவும் அமையும். கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 02.09.2017 முதல் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதால்  நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும்.  ப+மி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். ப+ர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த போட்டிகளோ, மறைமுக எதிர்ப்புகளோ இன்றி எதையும் சமாளிப்பார்கள். 

மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     தனக்குள்ள வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றியினைப் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். கடன்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்திலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாவதோடு உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியுர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     நல்ல புத்திக் கூர்மையுடன் காரியத்தில் கண்ணாக விளங்கும் உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் வேலையாட்களின் ஆதரவாலும் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு மனை, கார், பங்களா போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் பதவி உயர்வும் கிட்டும்.

புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இளகிய மனம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை; நிலவும். கணவன் மனைவியிடையே  அன்யோன்னியமும் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 5,6,7,8,14,15
கிழமை : புதன்,வெள்ளி
நிறம் : பச்சை, வெள்ளை
கல் : மரகதம்
திசை : வடக்கு
தெய்வம் : விஷ்ணு

11/12/14

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம (2014 -2017)

சனி பெயர்ச்சி பலன்கள்  
ரிஷபம (2014 -2017)


ரிஷபம் , கார்த்திகை 2,3,4, ரோகினி, மிருக சீரிஷம் 1,2ம் பாதம்

தியாக மனப்பான்மையும் சுயநலமில்லாத குணமும், பெருந்தன்மையும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். சனி 7 இல் சஞ்சரிப்பது கண்ட சனியாகும். 

இக்காலங்களில் உங்கள் ஜென்ம ராசியையும், சுகஸ்தானமான 4 ஆம் வீட்டையும், பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனி 7 ல் சஞ்சரிப்பது கண்டச் சனி அமைப்பு என்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4,9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். பொருளாதார நிலையிலும் இடைய+றுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சனி உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டார். வீடுமனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் 05.07.2015  வரை  3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் குரு சந்திப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் தேவையற்ற அலைச்சல்கள் சுக வாழ்வில் பாதிப்புகள் ஏற்படும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை பஞ்சம  ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள்  கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும்.

உடல் ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். ஜென்ம ராசிக்கு 7 இல் சனி சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்வை செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது கண்டச் சனி அமைப்பாகும். இதனால் உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத அளவிற்கு மந்த நிலை ஏற்படும். மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும் முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. 

குடும்பம் பொருளாதார நிலை
     சனி ஜென்ம ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் கணவன்  மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.; பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங் கள் தோன்றி மறையும்.

உத்தியோகம்
     ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி 7 இல் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும். நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக்  தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.

பெண்கள்
     பெண்களுக்கு உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணி புரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல்  வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும்.

அரசியல்
     மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி சமசப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும்.

விவசாயிகள்
     மகசூல் சிறப்பாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். காய், கனி, ப+ போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளால் சிறு சிறு விரயங்களும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வீண் வம்பு வழக்குகளும் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். புதிய நவீனகரமான உபகரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வேலையாட்கள் அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்
     கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவதுடன் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான  குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும்.  குரு  3 இல் வக்ர கதியிலும். கேது 11 லும் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5 இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, ப+ர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியிலும், 11 இல் கேது  இருப்பதாலும் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சமசப்தம ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 லும்; சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.; சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  7 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 6 இல் சஞ்சரிக்க இருப்பதும் 11 இல் கேது  சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 8.11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின்; கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த ப+மி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.  ப+ர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.; தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதியான  சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  4 ம் வீட்டிலும், 11 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்  கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 7 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கடந்த காலங்களில் இருந்த தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும்.  முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 2.5 இக்கு அதிபதியான  யோககாரகன் புதனின்  நட்சத்திரத்தி;;ல் சனியும், 5 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும்.  நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 7 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும். குரு 5 லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப் பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும்; யோகம் உண்டாகும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  இராகு 3 இல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். 02.09.2017 இல் ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு 6 இல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள்; உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோட்டுப் பழகக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
கடுமைனான உழைப்பாற்றலும் நல்ல பண்புகளையும் கொண்ட உங்களுக்கு சனி 7ல்  சஞ்சரிப்பதால் கண்டச் சனி நடைபெறுகிறது. இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும் என்றாலும் உங்கள் ராசியாதிபதிசுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் தேவையற்ற  வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
நல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பல்ல. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். வேலைப் பளுவும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 5,6,7,8,14,15,16
கிழமை : வெள்ளி, புதன்
நிறம் : வெள்ளை, பச்சை
கல் : வைரம்
திசை : தென்கிழக்கு
தெய்வம் : லட்சுமி