அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/30/13

தேவலர்



94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி புலஸ்திய மகரிஷியின் மாணாக்கர். இவர் பாஞ்சால மன்னனிடம் ஒரு முறை பசுக்களைத் தானம் கேட்டார். மன்னன் இறந்த பசுக்களைக் கொண்டுபோங்கள் எனக்கூறக் கோபம் கொண்டார். அவாகீர்ண சேத்திரத்தில் முனிவர் யாகம் தொடங்கினார். அதனால் மன்னன் ராஜ்யம் வளங்களை இழந்தது. மன்னன் முனிவரைப் பிழைபொறுக்க வேண்டினான். கருணை கொண்ட முனிவர் யாகத்தை நிறுத்தி நாட்டிற்கு நலம் பல புரிந்தார். இம்முனிவருக்குப் பகர் என்று ஒரு பெயரும் உண்டு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குண்டக்கல்லதவரு ;- குண்டக்கல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர். 
சொபகினதவரு :-

7/29/13

தேவாங்க எழுச்சி கீதம் ..

தேவாங்க மக்களே கேளுங்கள் தேவாங்க எழுச்சி கீதம் ...

தேவாங்க இன ஒற்றுமைக்காக எழுதப்பட்ட பாடல். நம் மக்கள் பல ஊர்களில் வாழ்ந்தாலும் ஒற்றுமையின்றி காணப்படுகின்றனர். அனைவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.



நன்றி நிதிஷ் செந்தூர்  எங்களுடன் பகிர்ந்தமைக்கு ......

93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கங்கயதவரு :- கங்காபூசனை செய்பவர். 
மிடியதவரு :- 

7/28/13

92 .தம்ப மகரிஷி கோத்ரம்

அசுவினி தேவர்களுக்குத் தாம் செய்த சையாதி யாகத்தில் சியவன மகரிஷி அவிர்ப்பாகம் கொடுக்க ஆரம்பித்தார். இந்திரன் இதனால் கோபம் கொண்டான். மகரிஷியின் மீது தன் வஜ்ஜிராயுதத்தை ஏவக் கையை உயர்த்தினான். முனிவர் இந்திரன் கையை ஸ்தம்பிக்கச் செய்தார். இதனால் இம்மகரிஷியைத் தம்ப மகரிஷி - ஸ்தம்ப மகரிஷி என்று அழைத்தனர். மேலும் இம்மகரிஷி ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்து தவம் செய்வதில் வல்லவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர். 
லாடதவரு :- லாட பாஷையில் வல்லவர். 
ஸ்தம்பதவரு ;- ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்வதில் வல்லவர். யாகம் செய்து தவவன்மை மிக்கவர். கோத்ர ரிஷியும் ஸ்தம்ப மகரிஷி, வங்குசமும் ஸ்தம்பதவரு.