அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/31/13

62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம்

60. சனக சனந்த மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அரவிந்ததவரு :- அரவிந்தம்-தாமரை. தாமரை மலர் கொண்டு பூசிப்பவர்.
அநந்ததவரு :- அநந்த பத்ம நாப சுவாமியையும் அநந்தனையும் பூசிப்பவர். அநந்தன் - ஆதிசேஷன்.
கோரண்டலதவரு :- கர்நாடகத்தில் உள்ள கோரண்டலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சீதாங்கனதவரு :- அங்கன = பெண்; சீதாதேவியை வழிபடுபவர்.
சோமுகதவரு :- சிவலிங்கத்தின் நடுப்பாகத்திற்குச் சோமுகம் என்று பெயர். சோமுகத்தில் லிங்கம் வைத்தோ அ சாளக்கிராமம் வைத்தோ பூசிப்பவர். இது சோமுகத்தட்டம் எனப்படும். இவர்கள் எந்தத் தானம் செய்தாலும் இத்தட்டில் வைத்துத்தான் தானம் செய்வார்கள்.
தப்படிதவரு :- தப்பு என்னும் வாத்தியம் முழங்கப் பூசனை செய்பவர். தாசர்கள் இவ்வாத்தியத்தினைத் தம் கக்கத்தில் வைத்து வாசிப்பர். இவர்கள் தப்பு வாசிக்கும் தாசர்களாக இருக்கலாம்.
அரளம்தவரு, போளெம்தவரு, அலசதவரு, வும்மடிதவரு

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


வேதாளம் சாப விமோசனம்

கானகத்திடை ஒருபெரிய முருங்கைமரத்தின் மீது முடை நாற்றமும் பேழ்வாயும் கோரப்பற்களும் கனல்கக்கும் கண்களும் சடைமுடியும் உடைய பயங்கரமான வேதாளத்தைக் கண்டான். உடனே அம்மரத்தின் மீதேறி அவ்வேதாளத்தைப் பிடித்துக் கட்டிச் சுமந்து கொண்டு தேவதத்தை இருக்கும் சோலையை நோக்கிச் சென்றான். அப்போது வேதாளம் விக்கிரமாதித்த மன்னனை நோக்கி, 'மன்னா! நான் ஒரு கதையைச் சொல்வேன். அக்கதையில் அமைந்துள்ள பொருளை நீ அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகச் சிதறுண்டு போகும்' என்று கூறிக் கதையைச் சொல்ல துவங்கியது. இவ்வாறு வேதாளம் கதை சொல்வதும் மன்னன் விடை சொல்வதும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கமரம் ஏறுவதுமாய் இருபத்தினான்கு முறை நடந்தது. பின் முடிவில் மன்னன் இருபத்தைந்தாவது முறை வேதாளத்தைக் கட்டிச் சுமந்து கொண்டு வரும் போது வேதாளம் மன்னனுக்கு விடை காணற்கரிய கதை ஒன்றைச் சொன்னது. இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் பாடலிபுரத்து மலர்ச்சோலையிலிருந்த தேவதத்தை முன் போய்ச் சேர்ந்தான். மன்னன் முடிமீது கட்டுண்டிருந்த வேதாளமும் தேவதத்தையும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும், சிவபெருமான் அருளியபடி இருவரும் சாபநீக்கம் பெற்று தெய்வவுரு அடைந்தனர். அச்சமயம் அங்கு திருவருளால் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் சாபநீக்கம் பெற்ற புட்பதந்தனும் தேவதத்தையும் ஏறி அமர்ந்து கொண்டு, விக்கிரமாதித்த மன்னனைப்பார்த்து பலவாறு ஏத்தி ' எங்கள் சாபநீக்கத்துக்குக் காரணமாயிருந்த உனக்கு நாங்கள் செய்யும் உதவி யாதுளது? நீ விரும்பிக் கேட்கும் வரத்தை அளிக்கிறோம். கேட்பாயாக' என்றனர். உடனே விக்கிரமாதித்த மன்னன் புட்பதந்தனைப் பார்த்து ' எனக்கு நீ எப்போதும் உறுதுணையாய் இருந்து நான் நினைக்கும்போது எல்லாம் என்முன் தோன்றி உதவவேண்டும்' என்றான். இதைக்கேட்ட புட்பதந்தன் ஒரு ஆற்றல் மிக்க வேதாளத்தை வரவழைத்து, விக்கிரமாதித்த மன்னனின் உள்ளக்குறிப்பை அறிந்து அவன் சொற்படி நடந்து உதவுமாறு பணித்தான். பின் கயிலையை அடைந்து விமலனடி பணிந்து இனிது இருந்தான்.

அம்மன் படங்கள்


5/30/13

61 .சனத்குமார மகரிஷி கோத்ரம்

60. சனக சனந்த மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சின'வரு :- ஸ்ரீ கன்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாவுராயலதவரு :- புளுவிற்குத் பாவுராயலு என்று பெயர். புறாவிற்குத் தீனி முதலியன தந்தவர். ஜீவகாருண்யம் மிக்கவர்.
பன்திபூவ்வுலதவரு :-
மாசிப்பத்ரிதவரு :- மாசிப்பத்ரி இலையால் பூசனை செய்பவர்.

வேதாள அவதாரம்

இவர்கள் இருவரும் இவ்வாறாக, உச்சினி மாநகரை ஆளும் மன்னன் விக்கிரமாதித்தன் வனசஞ்சாரம் செய்பவன் பாடலிபுரத்தை அடைந்தான். அன்றிரவு ஒரு பூஞ்சோலையில் தங்கினான். அப்போது ஒரு கந்துருவப்பெண் கல்லும் இரும்பும் நெக்குருக யாழ் வாசிக்கக் கேட்டான். இசையில் மயங்கினான். நெஞ்சுருக யாழ்மீட்டி இசையமுதம் பொழியும் அம்மாதரசைச் சந்திக்க எண்ணி அவளிருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவளை அணுகினான். 'அணங்கே! நீ யார்? உன் ஊர் யாது? உன் பெயர் என்ன? இரவுநேரத்தில் நீ இங்கு வரக்காரணம் யாது?' என்று வினவினான். அதற்கு அவள், 'என் பெயர் தேவதத்தை, என் கணவன் பெயர் புட்பதந்தன். இறைவன் இறைவிக்குச் சொன்ன மறைபொருளை என் கணவர் மறைந்திருந்து கேட்டு வெளிபடுத்தினார். அதற்குத் துணையாக நான் இருந்தேன். அதனால் நாங்களிருவரும் இறைவன் சாபத்திற்கு ஆளானோம். சாபத்தின் காரணமாய் என் கணவர் காட்டில் வேதாளமாய்ப் பேய்களுடன் ஒரு பெரிய முருங்கைமரத்தில் வசிக்கின்றார். நான் பகலில் மானாகவும் இரவில் சுயவுருப்பெற்று யாழ் மீட்டிக் கொண்டும் திரிகின்றேன். நானும் என் கணவரும், விக்கிரமாதித்த மன்னன் உதவியால், நேருக்கு நேர் சந்திக்கும் போது எங்கள் சாபம் நீங்கும்' என்று கூறினாள். இதைக் கேட்ட விக்கிரமாதித்த மன்னன், 'நங்கையே இனி உன் கவலையை விடு. நீ எதிர்பார்க்கும் விக்கிரமாதித்த மன்னன் நானே. உன் கணவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை அழைத்து வந்து அவனும் நீயும் சந்திக்குமாறு செய்து நீங்கள் சாபவிமோசனம் பெறும்படி செய்வேன்' என்று உறுதி கூறி அவ்விடத்தை விட்டு அகன்று பாடலிபுரத்தை விட்டு வேதாளம் இருந்த காட்டை அடைந்தான்.

கா. ந. அண்ணாதுரை

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின்ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும்கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியாகுடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
மேலும் விவரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%A8._%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

5/29/13

அம்மன் படங்கள்


அம்மன் அனிமேசன் படங்கள்

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


60. சனக சனந்த மகரிஷி கோத்ரம்

சனக சனந்த, சனத்குமார மற்றும் சனத்து ஜாத ஆகிய இம்மூன்று மகரிஷிகளும் பிரம்மாவின் குமாரர்கள்.

1) சனகர்
2) சனந்தனர்
3) சனத்குமாரர்
4) சந்தஜாதர்

என நால்வரும் பிரம்மாவின் பிள்ளைகள்.இவர்களே சனகாதி முனிவர்கள் என்று அழைக்கப்படுவர். இங்கு 60 எண்ணுள்ள கோத்ரத்தில் சனக சனந்த என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய நூல் ஒன்றில் வந்த பிழை.

இது சனக மகரிஷி கோத்ரம் சனந்தன மகரிஷி கோத்ரம் எனத் தனித்தனியே இருக்க வேண்டும்.

பிரம்ம தேவனின் படைப்பும் பத்து விதங்களாம். அவை;
1) மஹத்
2) அகங்காரம்
3) தன்மாத்திரை
4) இந்திரியங்கள்
5) வைகாரிக தேவதைகள் - மனஸு
6) ஐந்துவகை தாமஸிக சிருஷ்டி
7) தாவரங்கள்
8) மிருகங்கள்
9) மனிதர்
10) குமாரர்கள்
என்பனவாம்.

இந்தத் தாமஸிக சிருஷ்டி பிரும்மாவின் விருப்பப்படி இல்லை. எனவே அவர் தம் மனதைச் சுத்தப்படுத்தித் தியானம் செய்தார். மனத்தூய்மையுடன் பிரும்மா இருந்த போதுதான் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்ஜாதர் என்னும் நால்வரும் உதித்தனர்.

இவர்கள் வினைக்கருமங்களுக்கு உட்படாதவர்களாய் இருந்தனர். இவர்களால் பிரஜா சிருஷ்டி ஏற்படவில்லை. பிரம்மா இவர்களைப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டியும் இவர்களின் மனம் மோட்ச மார்க்கத்திலேயே ஈடுபட்டு விட்டது.

இந்நால்வரும் இயற்கையாகவே மாபெரும் ஞானிகள். ஜீவன்களுடைய புத்தியை ஞானமார்க்கத்திற்குத் திருப்புபவர்கள். மகா யோகிகள் ஸ்வபாவ பிரமச்சாரிகள். இவர்களுக்குத்தான் கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தியாக இருந்து சிவபிரான் சின்முத்திரை மூலமாக ஞானபோதகம் உபதேசித்தார்.

ஒரு காலத்தில் இந்நால்வரும் மஹா விஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். ஏழாவது வாயிலில் ஜயன் விஜயன் என்ற துவார பாலர் தடுக்கவே கோபங்கொண்டு அவர்களைச் சபித்தனர்.

சாபம் பெற்ற ஜயனும் விஜயனும் தான்

1) ஹிரண்ய கசிபு - ஹிரண்யாக்ஷன்
2) இராவணன் - கும்பகருணன்
3) சிசுபாலன் - தந்தவக்ரன்

என்ற மூன்று பிறவிகள் எடுத்துப் பின் பகவானால் சங்கரிக்கப்பட்டு வைகுண்டம் சேர்ந்தனர். சிவபுராணங்களில் துருவாசர் சபித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

கூர்மபுராணம், வான்மீகி இராமாயணம், பாரதம், லிங்கபுராணம் ஆகியனவற்றில் இவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொல்லம்தவரு :- வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள பொல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மங்களம்தவரு :- பெஜவாடா அருகில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பானகாலு நரசிம்ம ஸ்வாமி வீற்றிருக்கும் மலை இம்மலை. ஸ்வாமிக்குப் பானகம் கொண்டு வருவதாக வேண்டிக் கொள்கின்றார். அதனால் பானகாலு நரசிம்மஸ்வாமி என்று திருநாமம்.
சாலமனெயவரு :- தெலுங்கில் தாழ்வாரத்திற்குச் சால என்று பெயர். இது கன்னடத்தில் சாளை என்று வழங்கப்படுகின்றது. இது பற்றி வந்த ஒரு பெயர்.
குபேரதவரு :- முதல் மகனுக்குக் குபேரன், குபேந்திரன் என்ற பெயர் வைப்பவர்கள் வருஷம் இரண்டு முறை குபேரஜயந்தி கொண்டாடுபவர்.
சன்முகியவரு :- பஞ்சமுகங்கள் கொண்ட காயத்ரியுடன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு ஒரு முகமாக ஆறுமுகங்கள் படைத்துப் பூசனை இயற்றுவது இவர்கள் வழக்கம்.

புட்பதந்தன் பெற்ற சாபம்

வரம் பெற்ற புட்பதந்தன் நாள்தோறும் காலையில் மலர்களைக் கைக்கொண்டு மனைவியுடன் கயிலைக்குச் சென்று அம்மையையும் அப்பனையும் தொழுது தூமலர்த் தூவித்துதித்து வந்தான். பல நாட்கள் இவ்வாறு நடந்தது. ஒரு நாள் மாலையில் மலர்கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட எண்ணி மலர்களோடு கயிலைக்குச் சென்றான். அப்போது அம்மை அப்பர் இருவரும் தனித்து ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட அவன் அவர்களைப் பார்ப்பதற்கேற்ற சமயம் அது எனத் தெரிந்து தலைவாயிற்புறம் ஒதுங்கி நின்றான். அச்சமயம் பார்வதிதேவியார் சிவபெருமானை வணங்கிப் ' பெருமானே! எவருக்கும் தெரியாத கதை ஒன்றைக் கூறி அருளவேண்டும் ' என வேண்டி நின்றார். சிவபெருமானும் உலகறியாக் கதை ஒன்றைக் கூறினார். இதை வாயிற்புறம் நின்ற புட்பதந்தன் கேட்டுக்கொண்டிருந்தான். பின் இறைவனைக் கண்டு வணங்கும் தருணம் இது அன்று என எண்ணிய புட்பதந்தன் கயிலையை விட்டு நீங்கி தன் மனைவியை அடைந்தான். நேரங்கழித்துவந்த தன்கணவனை தேவதத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்தாள். ஊடல் கொண்டாள். மனைவியின் ஊடலைத் தணிப்பான் வேண்டித் தான் கயிலைக்குப் போனதையும் சிவபெருமான் அம்மைக்குப் புதிய கதை ஒன்றைக் கூரியதையும் அக்கதையைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததையும் எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட தேவதத்தை அக்கதையைத் தனக்குக் கூறுமாறு வற்புறுத்தினாள். அவள் பிணக்கைத் தீர்க்கும் கருத்தால் புட்பதந்தன் தான் கயிலையில் கேட்ட கதையை அப்படியே கூறி அவள் ஊடலைத் தீர்த்து மகிழ்ந்தான். மறுநாள் காலையில் எப்போதும் போல் தேவதத்தையும் புட்பதந்தனும் நறுமணமுள்ள பூக்களையும் பூசா திரவியங்களையும் எடுத்துக் கொண்டு கயிலையை அடைந்தனர். புட்பதந்தன் அப்பனைப் பூக்கொண்டு வழிபட்டான். தேவதத்தை அம்மையின் சன்னிதானத்தை அடைந்து அம்மையை வழிபட்டாள். பின் பெண்மதியால் அம்மையை நோக்கித் ' தேவியே! அரிய கதை ஒன்று உள்ளது. அதைத் தாங்கள் கேட்டருள வேண்டும் என்று பணிந்து கூறினாள். அம்மை அதற்கு இசைய, தத்தை தான் கணவன் பால் கேட்டறிந்த கதையைக் கூறினாள். இதைக் கேட்ட அம்மை, அக்கதை, எவரும் அறியாக்கதை எனச் சிவபெருமான் தனக்குச்சொன்ன கதையாயிருப்பதை அறிந்து, உடனே அவ்விடத்தை விட்டு நீங்கிப் பெருமானிடம் சென்று "புதுக்கதை என்று பழங்கதையைச் சொல்லி ஏமாற்றினீர்களே ! நன்று நன்று " என்று சினந்து நின்றாள். தேவியின் சினக்குறிப்பை அறிந்த சிவபெருமான் "இக்கதையைக் கூரினவர் யாவர்? " என்று வினவ, அம்மை அங்கு வந்து நின்ற தேவதத்தையைச் சுட்டிக் காட்டினார். உடனே தேவதத்தை தன் கணவனை சுட்டிக் காட்டினாள். உடனே சிவபெருமான் புட்பதந்தனை விளித்து ' உனக்கு யார் இந்த கதையைச் சொன்னவர் ? ' என்று கேட்டார். புட்பதந்தன் இறையடியை வணங்கிப் ' பெருமானே! அடியேன் தங்களை அர்ச்சித்து வணங்கப் பூக்களுடன் நேற்று மாலை வந்தேன். அப்போது தாங்கள் அம்மைக்கு இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். தற்செயலாக அங்கு அச்சமயம் வரநேர்ந்த அடியேன் அக்கதையைப் புறத்தே இருந்து கேட்க நேர்ந்தது. இவ்வாறு கேட்டறிந்த கதையைத் தேவதத்தைக்குக் கூறும் கட்டாயம் நேர்ந்து விட்டது' என்று பணிவுடன் கூறினான். இதைக்கேட்ட சிவபெருமான் சினந்து ' யாருமறியாது பிராட்டிக்குச் சொன்ன மறைபொருளை, மறைந்திருந்து கேட்டுப் பிறர் அறியக் கூறியதால், நீ வெறி மனங்கொண்ட வேதாளமாகக் கடவை. மனவடக்கமின்றிக் கேட்டதை வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறந்து உழலக் கடவள் ' என்று சபித்தார். சாபம் பெற்ற புட்பதந்தன் பெரிதும் துயருற்று அஞ்சலி செய்து, "பெருமானே இச்சாபம் எப்போது நீங்கும்" என்று வினவி நின்றான். புட்பதந்தன், பெரிதும் துயருற்று துதித்து வேண்டி நிற்கக் கண்ட சிவபெருமான் மிகவும் இரங்கி, ' அன்பனே! தேவதத்தை பாடலிபுரத்திற்குப் போய் அங்கு பகலில் மான் ஆகித் திரிந்து இரவில் மடந்தையாகி யாழ் மீட்டி எம்மைப் பரவிய வண்ணமிருப்பாள். நீயோ, பாடலிபுரத்துக்கு ஒரு யோஜனைதூரத்திலுள்ள பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தின் மீது வேதாளமாய் இருப்பாய். சிலகாலம் கழித்து விக்கிரமாதித்த மன்னன் பாடலிபுரம் வருவான். அவன் உங்கள் இருவரையும் சந்திக்கும்படி செய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் பழைய நிலையை அடைந்து என்னை அடைவீர்கள்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி புட்பதந்தன் வேதாளமாகிப் பாடலிபுரத்துப் பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தில் பேய்களுக்குத் தலைவனாய் வசித்து வந்தான். தேவதத்தை மான் ஆகிப் பாடலிபுரத்தில் பகலில் மானாகவும் இரவில் மடந்தையாகி யாழ் வாசித்துக் கொண்டும் இருந்தாள்.

5/28/13

59 .சவித்திர மகரிஷி கோத்ரம்

காசியப பிரஜாபதிக்கு அதிதி தேவியிடம் அவதரித்த பன்னிருவரில் ஒருவர்.
1). தாதை 2). மித்ரன் 3). அர்யமான் 4). சுக்ரன் 5). வருணன் 6). அஞ்சுமான் 7). பகன் 8). விலச்வந்தன் 9). பூஷன் 10). சவித்திரன் 11). துவஷ்டா 12). விஷ்ணு எனப்பன்னிருவர்.
இவர்கள் ஆதிதேயர் எனவும் ஐயர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
பிரஜைகளைச் சிருஷ்டிப்பதற்காகப் படைக்கப்பட்டு ஆனால் அதில் ஈடுபடாமல் தவத்திலேயே கருத்து செலுத்திய உத்தமர்கள் இவர்கள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கட்டாரியதவரு :- கட்டாரி - குறுங்கத்தி வழிபாடு செய்பவர். கட்டாரியை எப்போதும் தரித்து இருப்பவர்.
கூபதவரு :- கூபம் - கிணறு. கிணறு வெட்டித் தந்தவர். தண்ணீர்த் தானம் செய்தவர்.
ஆலபல்லியதவரு :- ஆந்திராவில் உள்ள ஆலபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அருங்கலை உணர்த்திய வித்யாதரர்

சிவபெருமான் ஆணைப்படி, மேருமலைச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்த ஏமவருணனின் முன், தேவலர், குழந்தையாகத் தோன்றினார். குழந்தையைக் கண்ட ஏமவருணனும் அவன் மனைவியும் பெருமகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று கமலாட்சன் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவன் வேதாகம சாத்திரங்களை தனது பதினோராவது வயதிலேயே நன்கு கற்றுத்தேர்ந்து சகல கலா வல்லவனாகத் திகழ்ந்தான். நிறை ஞானியான தேவலமுனிவர், இப்பிறப்பில் சிறு வயதிலேயே எல்லாக் கலைகளையும் கற்று வல்லவரானதில் வியப்பொன்றும் இல்லை. "ஒருமைக்கட் டான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்பது மறை மொழியன்றோ! கந்தருவர் வித்யாதரர் தேவர்கள் முதலிய பலரும் கலைஞானம் பெற வேண்டி இவரை அடைந்து மானவராய்த் தொண்டு செய்து கலைஞானம் பெற்றனர். இறைவன் அருளாணைப்படி வித்யாதரர்களுக்கு கலைஞானம் உணர்த்தித் தமது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாராதலால் மீண்டும் கயிலையை அடைந்தார். தாம்பயின்ற இசையை யாழில் வைத்து கயிலைவாசனின் செவியில் அமுதெனப் பாய்ச்சும் பணியில் தலைப்பட்டார், இசைக்கு மயங்கும், ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் விளங்கும் சிவபெருமான், கமலாட்சனின் இனிய யாழிசையை மாந்தி இனிது வீற்றிருந்தார். சிவபெருமான் மட்டுமல்லாமல் கயிலையிலிருந்து எல்லா உயிரினங்களும் அத்தெய்வீக இசைக்கு மயங்கி உருகின. பகை உயிர்கள் பகை மறந்து ஒன்றுபட்டன. பாம்பு மயில் மீது விழுந்தது. சிங்கமும் யானையும் நெருங்கி நின்றன. புலி வாயினருகே மான்கள் அச்சமின்றி நடமாடின. முனிவர்களின் தவங்குலைந்தது. காதலர்கள் காதலால் குழைந்தனர். சூரிய சந்திரர்கள் தாம் செல்லும் திசையை மறந்தனர். கல்லும் உருகியது. காற்றும் மரக்கிளைகளும் அசைவற்று இருந்தன. காட்டாறுகள் ஓடவில்லை. கடலலைகள் ததும்பவில்லை. இவ்வாறு நிற்பனவும் இயங்குவனவுமாயுள்ள எல்லா உயிரினங்களும் பொருள்களும் இசைமயமாய் செயல்மறந்து நின்றன. இத்தகைய இசையால் நாள்தோறும் இறைவனை யாழ் மீட்டிப், பாடி பரவிப் பணிந்த வண்ணம் கமலாட்சன் இருந்தார். இசைவல்ல ஐவர இசைப்பணியோடு அளவற்ற புதிய பாடல்களையும் நல்ல நூல்களையும் இயற்றிச் சிவபெருமான் முன் அரங்கேற்றினார்.

இன்று குருப்பெயர்ச்சி...



இன்று குருப்பெயர்ச்சி...


நிகழும் விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (28.5.13) இரவு 9.15 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார்.

5/27/13

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்



58 .சர்வ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சக்ராலதவரு :- உடம்பில் சங்கசக்ர தரிப்பவர். இவர்களின் சமாதியிலும் சக்கர ஸ்தாபனம் செய்யப்படும்.

புட்பதந்தன் அவதாரம்

கனகமாபுரியை சுருதிகீர்த்தி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவனைச் சோரன் என்னும் அசுரன் பெரிதும் துன்புறுத்தி வந்தான். இவனை வெல்ல இயலாமல் இவனது துன்பப்பிடியினின்றும் மீளக் கருதிக் கயிலை நாதனை நோக்கித் தவங்கிடந்தான். தவத்துக்கிரங்கி சிவபெருமான் மன்னன்முன் தோன்றி அசுரனை வெல்லும் மகன் ஒருவனை அளிப்பதாக வரமருளி மறைந்தருளினார். அதன்படி இறைவன், கமலாட்சனை, மன்னனுக்கு மகனாகப் பிறந்து சோரன் என்னும் அசுரனை அழிக்குமாறு பணித்தார். கமலாட்சனும் இறைவன் ஆணைப்படி சுருதிகீர்த்திக்கு மகனாக அவதரித்தார். இந்தப் பிறப்பில் புட்பதந்தன் என்னும் பெயரும் பெற்றார். சிந்து மன்னனின் மகளாகப் பிறந்திருந்த தேவதத்தையை மணந்தார். ஒருநாள் மன்னன், தன்மகன் புட்பதந்தனை அழைத்து சோரன் என்னும் அசுரனை அழித்து வருமாறு பணித்தார். புட்பதந்தனும் அசுரன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவனுடன் பெரும் போர் செய்து அவனை அழித்து மீண்டான். சின்னாள் கழித்து மன்னன் தன் மகன் புட்பதந்தனுக்கு ஆட்சியை நல்கித் தானும் தன்மனைவியுமாக தவமேற்கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆட்சி பீடமேறிய புட்பதந்தன் செங்கோன் முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிவபக்தனாகவும் திகழ்ந்தான். கோயில் வழிபாடும் அர்ச்சனையின் சிறப்பையும் நன்கு உணர்ந்த புட்பதந்தன் தன் நாட்டில் நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என்னும் கருத்தால் திருக்கோயில்களை கட்டினான். நந்தவனங்களை வைத்தான். தானே பூப்பறித்துக் கொண்டு வந்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து பக்திப் பயிரை வளர்த்தான். இவ்வாறு புட்பதந்தன் அறநெறிப்படி நல்லாட்சியையும் சிவநெறியையும் போற்றி நாட்டைப் புரந்து வரும் போது சிவராத்திரி விழா வந்தது. இவ்வாறு சைவர்களுக்கெல்லாம் ஏற்றதும் முதன்மையானதுமான சிவராத்திரி விரதத்தை ஆகம விதிப்படி முறையாக ஏற்று புட்பதந்தன் சிவ வழிபாடு செய்து வந்தான். புட்பதந்தனின் பூசனையை மகிழ்ந்து ஏற்றுச் சிவபெருமான் அம்மையுடன் இடபவாகனத்தில் தோன்றி, அவன் விரும்பியவாறு, அவர்கள் நாள்தோறும் கயிலைசென்று தம்மை தரிசனம் செய்யும் வரத்தை அளித்து மறைந்தார்.

5/26/13

கங்கா தேவி


அருள்மிகு சூடாம்பிகையம்மன்- ஏந்தேலார் குலததெய்வம்....பெரிய வதம்பச்சேரி

Nithish Senthur அருள்மிகு சூடாம்பிகையம்மன்- ஏந்தேலார் குலததெய்வம்....பெரிய வதம்பச்சேரி

தேவாங்கர்


மன்னன் இலிங்க வடிவு அடைதல்

ஒருநாள் வித்யாதரர்கள் யாவரும் ஒன்று கூடிக் கயிலைக்குப் போய்ச் சிவபெருமானை அணுகிப் ' பெருமானே நாங்கள் தங்கள் அருளால் அறுபத்து நான்கு கலைகளில் சிலவற்றையே உணர்ந்துள்ளோம். மற்றுள்ள கலைகளையும் உணர்த்தி எங்கள் உள்ளங்களைத் திருத்தியருளுதல் வேண்டும் எனப் பணிந்து நின்றனர். அதற்குச் சிவபெருமான் 'உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச்சாரலில் எம்மை நோக்கித் தவஞ்செய்கின்றான். அவனுக்கு நாம் ஓர் மகனை அருள் செய்வோம். அவன் உங்களுக்கு வேண்டும் கலைகள் யாவற்றையும் விரித்துக் கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக ' என்று அருள் செய்தார். அவர்களும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். பின் சிவபெருமான் ஆமோத நகரிலிருக்கும் தேவாங்க மன்னனை நினைத்தார். அவரும் சிவபரமபொருளின் உள்ளக்கருத்தை உணர்ந்து கயிலையில் சிவபெருமான் முன் தோன்றித் தாழ்ந்து எழுந்து தொழுது நின்றார். வந்தவரைச் சிவபெருமான் இனிது நோக்கி 'மேருமலைச் சாரலில் தவஞ்செய்யும் ஏமவருணனுக்குப் பிள்ளையாய்ப் போய் வித்யாதரர்களுக்கு அறுபத்து நான்கு கலைகளையும் உணர்த்தி வா' என்று பணித்து விடை தந்து அனுப்பினார். தேவாங்க மன்னனும் இறைவன் பணியை ஏற்றுக் கொண்டு ஆமோத நகரை அடைந்தார். தனது குமாரர்கள் மூவருக்கும் நல்லுரை கூறித் தனது மனைவியர் இருவரின் உள்ளத்தை தேற்றித் தனது தூய உடம்பைச் சிவலிங்க வடிவில் விட்டு விட்டு விண்ணுலகடைந்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூத்தமகன் திவ்யாங்கன் தனது தந்தையின் இலிங்கவடிவத்துக்குத் திருக்கோயில் எழுப்பி, அதில் நாள்தோறும் பூசனைகள் செய்து வந்தான். ஏற்றுக்கொண்ட ஆட்சியையும் செங்கோன் முறைப்படி நீதி வழுவாமல் பகை நீக்கி வளம் பெருக்கி ஆட்சிசெய்து வந்தான்.

57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உக்கந்ததவரு :- ஆந்திராவில் உள்ள உக்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

5/25/13

பொஜெலாறு வங்குசம், ரெட்டை கம்ப ராயர் கோவில் / கொங்குபட்டி





மனு மகரிஷி


147 .மநு மகரிஷி கோத்ரம்

சிருஷ்டியின் ஆதியில் பூமியைக் காக்க இறைவனால் நியமிக்கப்பட்டவர். இவரால் செய்யப்பட்டது மநுதர்ம சாஸ்திரம்.

ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்திரங்கள் நடைபெறும். மன்வந்திரம் என்பது மநுவின் ஆட்சிக்காலம். ஒரு கல்பத்தினுள் பதினான்கு மநுக்களின் ஆட்சி முடிவுற்றபின் பிரளயம் நடைபெறும்.

தற்பொழுது நடைபெறும் கல்பம் ஸ்வேத வராக கல்பம்.

இக்கல்பத்தின் மநுக்களாவார்.
1) ஸ்வாயம்புவர்
2) ஸ்வாரோசிஷர்
3) உத்தமர்
4) தாமஸர்
5) ரைவதர்
6) சாக்ஷூஷர்
7) வைவஸ்வதர்
8) ஸாவர்ணி
9) தக்ஷஸாவர்ணி
10) ப்ரஹ்மஸாவர்ணி
11) தர்மஸாவர்ணி
12) ருத்ரஸாவர்ணி
13) ரெளச்யர்
14) பௌத்யர் என்போர்
தற்பொழுது நடைபெறும் மன்வந்திரம் ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம் ஆகும். "ஸ்வேத வராக கல்பே வைவஸ்வத மன்வந்ரே ", என்னும் மஹா சங்கல்ப மந்திரத்தினால் இதனை உணரலாம்.

விவஸ்வானு என்னும் சூரியனுக்கும், ஸம்க்ஞைக்கும் பிறந்தவர் சிராத்ததேவர் என்ற பெயர் கொண்ட வைவஸ்வதர். இவருடன் யமனும் யமுனையும் பிறந்தனர்.

சென்ற கல்பத்தில் பிரம்மதேவர் யோக நித்திரை அடையும் பொழுது வேதங்கள் நழுவிக் கீழே விழ அவற்றை ஹயக்ரீவன் என்ற அசுரன் கவர்ந்து கொண்டான். சத்தியவிரதன் என்ற அரசன் தர்ப்பணம் செய்து கொண்டு இருக்கையில் அவனுடைய கையில் இருக்கும் தண்ணீரில், சிறு மீன் ஒன்று தோன்றியது. அம்மீனைத் தண்ணீரில் விட மன்னன் முயன்றான். ஆனால் மீனோ தன்னை எடுத்துக்கொண்டு போகும்படி கேட்டது. அரசன் மீனை எடுத்துச் சென்றான். ஒரு பாத்திரத்தில் அதனை விட்டான். உடனே மீன் பாத்திரத்தின் அளவாகப் பெருத்தது.

அது வரவரப் பருத்து ஏரிகள் நதிகள் ஒன்றிலும் அடங்காமல் வளந்தது. இம்மீன் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மச்சாவதாரம் என அரசன் உணர்ந்தான். அவதாரமான மீனை எடுத்துக்கொண்டு அதனைச் சமுத்திரத்தில் விடச் சென்றான் சத்தியவிரதன்.

மீன் அவனைத் தடுத்தது. சத்தியவிரதா! இன்றைக்கு ஏழாவது நாள் மூன்று லோகங்களும் ஜலப்பிரளயத்தால் மூடப்பெரும். அப்போது ஒரு படகு நீ இருக்கும் இடத்திற்கு வரும். சகல ஒளஷதிகள், விதைகள் மிருகங்கள், ஸப்தரிஷிகளுடன் நீ படகில் போய் இரு! படகு காற்றால் அசைக்கப்படும் பொழுது நீ ஒரு சாப்பத்தால் படகை என் தேகத்தில் இணைத்துக் கட்டு. நான் பிரளய ஜலத்தில் சஞ்சரித்துக் கொண்டே பிரம்மா விழிக்கும் வரை உன்னைக் காப்பாற்றுவேன். உத்தமமான பிரம்மவித்தையை உனக்கு உபதேசிக்கின்றேன். சூட்சுமமான அவ்வித்தையை உணர்ந்து கொள்! என்று அருளி மறைந்தது.

இந்தச் சத்திய விரதனே! சிரார்த்த தேவர் ஆகி இம் மன்வந்திரத்தின் மநுவாக ஆட்சி புரிகின்றனர்.

இனி சென்ற கல்பத்தில் சிவபிரானின் பாலநேத்திரம் எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து அக்நிமது என்பவர் அவதாரம் செய்து தேவர்கள் மகரிஷிகள் முதலான அனைவருக்கும் ஆடையும், பூநூலும் வழங்கினார். இந்த ஸ்வேதவராக கல்பத்தின் துவக்கத்தில் ஆடையற்றிருந்த தேவர்கள் பிரம்மாவை வேண்ட பிரம்மா அனைவரயும் சிவபிரானிடம் அழைத்துச் சென்று பெருமானே! உம் இதயத்தில் சாயுஜ்ஜியம் பெற்று இருக்கின்ற அக்நி மநுவை வஸ்திரங்களும், பூநுலூம் தருதற்கு அனுப்ப வேண்டும் என்று சிவபிரானிடம் வேண்டிக் கொண்டார்.

எனவே தேவாங்க அவதாரம் முன் கல்பத்தில் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த அக்நிமது.

இந்தக் கல்பத்தில் தேவர் முதலான ஏழு அவதாரங்கள் எனத் தெளிந்து உணர்தல் வேண்டும்.

இக்காரணத்தால் தேவாங்கர் மநுர்குல தேவாங்கர் என அழைக்கப்படுகின்றனர்.

மநீஷ : பாலசசஷூம்ச அக்நிநாமநூருத்தித: பிரபதிஸ் ஸூர்ய கோவிந்தோ தேவாங்கோ தேவப்ராஹ்மண;

என்ற பிரம்மாண்ட புராணச் சுலோகம் காண்க.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொஜ்ஜேலாரு :- போஜள்ளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கஞ்சுகாவடியவரு :- கஞ்சுகா - ரவிக்கை. கஞ்சுகாதானம், ரவிக்கை தானம் செய்தவர். ஸ்ரீ சைலத்தில் இவர்கள் தெய்வங்களுக்கு ரவிக்கைத் துண்டு இன்றும் தருகின்றனர்.

ஆவுலபல்லிதவரு :- ஆவுனஹள்ளி என்னும் ஊரினர்.

உங்குராலதவரு :- மோதிரம் அணிந்தவர்.

கன்னிகாதானதவரு :- கன்னிகாதானம் நடக்க உதவியவர். திருமணம் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களுக்குப் பொருள் உதவி செய்து திருமணம் நடக்க உதவியவர்.

இத்தருமத்தினை மாபெரும் தருமமாகத் தேவாங்கர் கருதினர். இன்றும் தேவாங்கர் பலர் திருமணச் சேலை, வேட்டிகள் எடுத்துத் தருவது, தாலி செய்து தருவது முதலான பல திருமணம் தொடர்பான தருமங்களை ஜாதி வேறுபாடு கருதாமல் செய்து வருகின்றனர்.

இந்நூற்றாண்டில் இத்தருமத்தினைத் தம் வாழ்நாளில் செய்து பெரும் பெயர் பெற்ற பெருந்தகை. சர்.பிட்டி.தியாகராஜ செட்டியார் ஆவார். இப்பெருமானின் இல்லத்தில் புது வேட்டிகளும் சேலைகளும் எப்பொழுதும் தயாராக இருக்கும். திருமணம் என்று யார் சென்றாலும் மணமகனுக்கு வேட்டி துண்டு ஆகியனவும், மணமகளுக்குச் சேலை, ரவிக்கை, தாலி ஆகியனவும் வேறுபாடு கருதாமல் தானம் செய்த உத்தமர் இவர்.

குண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அக்நி குண்டம் இறங்க முன்னுரிமை பெற்றவர். தம் இல்லத்தில் அக்நிஹோத்ரம் முதலான யாககுண்ட காரியங்களைத் தவறாது செய்பவர்.

கொண்டதவரு :- வடகர்நாடகம் தென்மகாராஷ்டிரம் பகுதிகளில் கொண்டதவரு வங்குசத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தெய்வ வழிபாடு செய்கின்றனர்.

கோகலதவரு :- வஸ்திர தானம் செய்தவர்.

சாமந்திதவரு :- குலதெய்வத்திற்குச் சாமந்திப் பூ மாலை சாத்தி வழிபடுபவர்.

சிருங்காரதவரு :- அலங்காரத்தில் விருப்பம் மிக்கவர்.

சிவஞானதவரு :- சிவ ஞானம் பெற்றவர்.

தட்டிதவரு :- தட்டி நெய்பவர்.

தாசுமையதவரு :- பெருமாளை வழிபடுபவர். தாசர்களை வழிபடுபவர்.

தாலீபத்ரதவரு :- தாலீபத்ரம் - பனை ஓலை. ஓலைச்சுவடிகள் வைத்து இருந்தவர். முன் நாட்களில் ஜாதகம், திருமண நிச்சயங்கள் முதாலானவை ஓலைகளில் எழுதப்படும். அதற்கான ஓலைகளை வைத்து இருந்தவர்.

துபாகினவரு ;- அம்மனுக்குரிய 32 விருதுகளில் துப்பாக்கியும் ஒன்று, துப்பாக்கி விருது பிடிப்பவர்.

நாகார்ஜூனதவரு :- நாகார்ஜூன மழைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பாபகதவரு :- நேர்வகிடு எடுத்துக் கொள்பவர்.

பாபட்லதவரு :- வகிடு எடுத்துத் தலை அலங்காரம் செய்து கொள்பவர்.

பால்யதவரு :- பாலர்களுக்கு உணவு தானம் செய்தவர். இன்னும் ஸ்ரீ ராமநவமி முதலான விழாக் காலங்களில் " அயிக்குளு விருந்து " என சிறுவர்களுக்கு விருந்திடும் பழக்கம் உள்ளது.

பாலேலாரு :- பாலபரமேஸ்வரியை வழிபடுபவர்.

பிண்டிகூரதவரு :- பிண்டி - மாவு, கூரம் - பதார்த்தம் மாவுப் பதார்த்தங்களை விரும்பி உண்பவர்.

பிருந்தாவனதவரு :- துளசி மடம் - வீட்டில் பிருந்தாவனம் கட்டி வழிபடுபவர்.

பில்வபத்ரதவரு :- வில்வ தளைகளால் பூசனை செய்பவர்.

புல்லகதவரு :- ஆண்மை மிக்கவர்.

பென்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரினர்.

போஜனதவரு :- போஜன மரத்தடியில் வழிபாடு செய்பவர்.

முக்கரதவரு :- மூக்குத்தி அணிபவர்.

முத்யாலதவரு :- முத்துக்களை அணிபவர். முத்து வணிகர்.

முத்கலதவரு :- முத்கலம் - ஒரு வகைச் செடிப்பூ. இப்பூ பூத்து இருக்கும் செடிக்கடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.

ரெட்டிபல்லிதவரு :- அநந்தபூர் கதிரி செல்லும் வழியில் உள்ள ரெட்டிபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோசலதவரு :- கோசல தேசத்தைச் சேர்ந்தவர்.

தத்வதவரு :- தத்துவ ஞானம் மிக்கவர்.

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர்.

பட்டாதவரு :- மன்னர்களிடம் பட்டயம் பெற்றவர். பட்டக்காரராக இருக்க குருபீடாதிபதிகளிடமும், சிம்மாசனாதிபதிகளிடமும் பட்டயம் பெற்றவர்.

அச்சாச்சாரிதவரு, கம்மிகாவனதவரு, கரெதவரு, குந்தியம்தவரு, கூகடிதவரு, தாளம்தவரு, நாகாப்பரதவரு, பீரம்தவரு, போஜிதவரு, போஜூலதவரு, முடெதவரு, ரட்டிதவரு, ரெட்டிதவரு, விய்யாதிதவரு, சில்வாரொளி பாலிதாரு.

தேவாங்கர்களின் திருமண முறைகள்

திருமண உறவுமுறைகள்


தேவாங்கர் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களின் குழந்தைகள் தந்தை சார்ந்துள்ள வங்குசம் (வம்சம்) அவர்களுடைய வங்குசமாகக் கொளளப்படுகிறது. தங்கள் வங்குசம் தவிர பிற வங்குசத்தைச் சேர்ந்தவர்களை திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.


திருமண நிச்சயதார்த்த சடங்குகள்

* மணமகள் இல்லத்தில் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. * மணமகன் வீட்டார் சீர்வரிசைத் தட்டுகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்து மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். * தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரரிடம் மணமகன் வீட்டார் அந்த ஊர் தேவாங்கர் சாதி அமைப்பில் நிர்ணயித்துள்ள பணம் செலுத்தி மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். * மணபெண்ணுக்கு மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சீர்வரிசைகள் செய்து நலுங்கு வைக்க வேண்டும். * இதன் பின்பு மணப்பெண் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்களிடம் வணங்கி வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். * இதன் பிறகு மணமகன் வீட்டார் மணப்பெண் உறவினர்களைத் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரது முன்னிலையிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

திருமணச் சடங்குகள்

முகூர்த்த நாளின் முதல் நாள் இரவு மணமக்கள் தாய்மாமன்களால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வரவேண்டும். இப்போது இது வழக்கத்தில் அருகி வருகிறது.

வீரமாஸ்தி கும்பிடுதல்

தேவையான பொருட்கள்

மணமக்கள் அணிந்து கொள்ள தலா 2 ஜதை வேஷ்டிகள் வீதம் – 4 ஜதைகள் ஈரிழை சிவப்பு துண்டுகள் – 4 கூரை புடவை ( கோலமல சேலை ) – 1 செட் தாலி, கால் மிஞ்சு அங்குநூல், காதோலை கருமணி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி முதலியன.. - பூஜை முடிந்தபின் மணமகனுக்கு தாய்மாமன் மிஞ்சு அணிவிக்க வேண்டும்.

இரவு விருந்து (கை நீர் சொம்பு வழங்குவது)

மணமகன் வீட்டினர் தன்னுடைய தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் கை நீர் சொம்பு வழங்க வேண்டும். செட்டிமைக்காரர் ஸ்தல பெத்தருக்கும், மணப்பெண் வீட்டார் சொந்தக்காரருக்கும் தங்களிடம் உள்ள கைநீர் சொம்பைக் கொடுத்து விருந்துக்கு அழைக்க வேண்டும். மணமகன் வீட்டினர் தன்னுடைய சொந்தக்காரருக்குக் கை நீர் சொம்பு கொடுத்து உறவினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.

பூஜை

தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் அமர கம்பளி விரித்து வைக்க வேண்டும். அவரிடம் மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்குரிய பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

அரணை முட்டிகள் - 6 முச்சளம் - 6 மொந்தை - 4 ஊசி மூடிகள் - 2 மண் தீபங்கள் - 7 மண் தூபக்கால்- 2 * பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும். * அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். * கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும். * கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். * முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும். * கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

கங்கணம் கட்ட தேவையான பொருட்கள்

மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.

கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்

* மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும். * மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும். * செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும். * மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும். * மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. * அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

ஸ்தலது கொம்பு விவரம்

அரச மரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே ஸ்தலது கொம்பு திருமூர்த்திகளுக்கு வணக்கம் செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகும். மணமகன் மணவறையில் அமர்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

அரசமரக் கொம்பு, மஞ்சள் கொம்பு, மண் தீபம், அச்சு வெல்லம், பச்சரிசி 1 படி, தேங்காய் -3, பழம் -2, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழை இலை, குங்குமம்

பூஜை முறை

* கோவிலில் அரச இலையில் பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும். * மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது மணமகனின் சகோதரி மேற்கண்ட பூஜைப் பொருட்களுடன் புது கூடையில் மணமகன் அணிந்து கொள்ளும் மஞ்சள் வேஷ்டி, பணம் மற்றும் புது பாய் எடுத்துச் செல்ல வேண்டும். * பூஜைக்கு கொண்டு செல்லும் 3 தேங்காய்களில் 1 பிள்ளையாருக்கும், 2 வது தேங்காய் பஜனை கோவிலுக்கும், 3 வது தேங்காய் மணமகளின் மடியில் பச்சரிசியுடன் வைத்து கட்டிக் கொள்ளவும் வேண்டும். * மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு போகும்போது தாய்மாமன் கொடுத்த அங்கவஸ்திரத்தை வலது தோள் மீதும், மஞ்சள் வேஷ்டியை இடது தோள் மீதும் அணிந்து செல்ல வேண்டும். பூஜை முடித்து வரும்போது மணமகளின் சகோதரி மணமகனுக்கு பாத பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமகனுக்கு பால், பழம் கொடுக்க வேண்டும். தாலி கட்டிய பின் கம்பளி விரித்தல் * செட்டிமைக்காரர் உறவினர் முன்னிலையில் மணமக்களின் தாய்மாமன்கள் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து அதையும் ஜம்புதாடி கத்தியையும் செட்டிமைக்காரர் வசம் ஒப்படைத்தல், செட்டிமைக்காரர் மணமகன் வீட்டாரிடம் பணம் பெற்று கங்கண துணியில் வைத்து மஞ்சள் முடிப்பை மணமகள் வீட்டாரிடம் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். காலி மஞ்சள் முடிப்பை மணமகன் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். பின் இரு வீட்டாரிடமிருந்தும் கங்கண முடிப்பை செட்டிமைக்காரர் பெற்றுக் கொள்ள வேண்டும். * செட்டிமைக்காரர் வரிசைப்படி வங்குசதாரர்களை அழைத்து செலவு சம்பாரம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.

56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அனந்ததவரு :- அநந்த பத்மநாப சுவாமியை வழிபடுபவர். அநந்தன் - ஆதிசேஷன். அவன்மீது பள்ளிகொண்டபெருமாளை வணங்குபவர்.
தம்பதிதவரு :- வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் தம்பதிபூசனை செய்து, அவர்களுக்கு வேண்டியனவற்றைத் தான தர்மமாக வழங்குபவர்.
போளெம்தவரு :-

ஸ்ரீ காயத்ரி வீரகுமாரர்கள் சேவா சங்கம், சேலம்.


55 .சம்பு மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜானதவரு :- கீர்த்தி உடையவர். அறிவு நுணுக்கம் உள்ளவர்.
அங்கதவரு :-

காயத்ரி தேவி சின்னாலபட்டி


சின்னாலபட்டி ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன்


54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம்

இவர் ஸ்ருங்கி ரிஷியாவார். சேலத்தில் கடுபுலதவரு என்னும் கடுபேலாரு தங்களைச் சந்திர மகரிஷி கோத்ரம் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் சந்திர ஜடாதர மூர்த்தியையும் சந்திரனையும் வழிபடும் பழக்கம் கொண்டு இருக்கின்றனர். சந்திரஜடாதரனை; சந்திரன் வழிபடுவதால் தங்கள் ரிஷியும் அவரே என எண்ணி இருக்கலாம். இக்கோத்ர ரிஷி கலைக்கோட்டு மாமுனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்கர் ஆவார்.
மகரிஷியின் வரலாறு ஸ்ருங்கி மகரிஷி கோத்ரத்தில் காண்க. இம் மகரிஷியும் ஸ்ருங்கி ரிஷியும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடுபேலாரு :- கடுப்பு - வயிறு. வயிறு பற்றி வந்த ஒரு பெயர்.
சன்னமொசலிதவரு :- தெலுங்கில் முதலைக்கு மொசலி என்று பெயர். இவர்கள் மகராசனம் இட்டு யோகம் செய்வார்கள்.
கூர்மதவரு :- கூர்மாவதாரத்தை வழிபடுபவர்.
கொஜ்ஜம்தவரு :- கொஜ்ஜனதவரு என்பது மருவி கொஜ்ஜம் என வழங்குகின்றது. ஆந்திராவில் உள்ள கொஜ்ஜனம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தர்மபுரம்தவரு :- அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நந்தவரம்தவரு :- ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் நந்தியால் தாலுக்கா பானியம் புகை வண்டி நிலையத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ள ஓர் ஊர் நந்தவரம்.
" சௌடேஸ்வரி நின்னு சாலபூஜலு சேய " என்னும் தண்டகத்தில் " நந்தவரமந்து நெலெ கொன்ன நைகதாம்ப " என்று நந்தவரம் என்னும் ஊர் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
நரசிம்மதவரு :- நரசிம்மமூர்த்தியை வழிபடுபவர்.
பாரததவரு :- மஹாபாரதத்தில் வல்லவர். பாரதப் பிரசங்கம் செய்பவர்.
பர்வத வஸ்திராலதவரு :- பர்வதம் எனில் ஸ்ரீ சைலம். ஸ்ரீ சைலத்திற்குக் கொடித் துணி நெய்து கொண்டு செல்லும் திருப்பணி செய்பவர்.
குறிப்பு : - ஒரு முழ அகலத்தில் தினம் ஒரு முழமாக நெய்து 365 நாட்களில் 365 முழம் நெய்து முடித்து அதனை எடுத்துக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொடித்துணியாக வழங்குபவர். தேவாங்கரின் ஏழாவது அவதாரம் முதற்கொண்டு இன்றளவும் இத்திருப்பணி நடைபெறுகின்றது.
மாணிக்யதவரு :- மாணிக்க நகை அணிபவர். மாணிக்க வியாபாரம் செய்தவர்.
ருத்திராட்சினவரு :- குடும்பத்தில் ஆண் பெண் இருபாலரும் ருத்திராட்சம் தரிப்பவர்.
ஷடாட்சரிதவரு :- ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பவர். சுப்ரமண்ய சுவாமியை வழிபடுபவர்.
அந்தெலதவரு, அந்தேதவரு, தவனதவரு, துஸ்ஸாதவரு, தூஸெம்தவரு, நுன்காதவரு, பீரதம்தவரு, ஜினகதவரு.

விடைக் கொடியை இழத்தல்

வித்தையுத்தேசன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி ஆமோத நகரை அடைந்தான். தேவாங்க மன்னனின் முன் போய் நின்று வணங்கி, ' மன்னர் மன்னா! நான் தேவேந்திரனின் தூதுவன் வச்சிரதந்தன் மீண்டும் பெரும் படைகளுடன் பொன்னகரம் வந்து வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் தேவர்கள் யாவரும் தோற்று ஓடி மறைந்து வாழ்கின்றனர். அரக்கரை வென்று பொன்னகரைக் காப்பதற்கு விடைக் கொடியாலன்றி வேறெதனாலும் முடியாது. அதனால் அதை தங்களிடமிருந்து பெற்றுவருமாறு தேவேந்திரன் அனுப்பியுள்ளான். அருள் கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவ வேண்டும்' என்று வணங்கி நின்றான். அசுரன் சொன்ன சொல்லை உண்மை என நம்பிய தேவாங்க மன்னன் நந்திக்கொடியை அவனிடம் கொடுத்தனுப்பிவிட்டார். கொடியைப் பெற்ற அசுரன் பெருமகிழ்ச்சியோடு விரைந்து சென்று கொடியை வச்சிரதந்தனிடம் சேர்ப்பித்தான். நந்திக்கொடியைப் பெற்ற அசுரமன்னன் பெருங்களிப்பில் மூழ்கினான். சேனைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் தேவர்கள் மீது போருக்குப் போனான். விண்ணாட்டை அடைந்தான். அமராவதி நகரை வளைத்துக் கொண்டு போர்ப்பறை அறைவித்தான். இதை அறிந்த தேவேந்திரன் படைகளுடன் அசுரரை எதிர்த்தான். அசுரர் படை பலமிக்கதாயிருப்பதை அறிந்து தேவல மன்னனை உதவிக்கு வருமாறு, ஓலை கொடுத்து தூதனை அனுப்பினான். தூதுவன் சொன்ன செய்திகளை அறிந்த தேவாங்கன் " நேற்றனுப்பிய நந்திக்கொடிகையிலிருக்க நம்மை ஏன் இந்திரன் அழைக்கின்றான்? இதில் ஏதோ சூது இருக்கிரது' என்று ஐயுற்றார். உடனே படைகளுடன் அமராவதி நகருக்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற பின் அசுரர்களின் கபடநாடகம் வெளிப்பட்டது. போரில் தேவர்கள் தோற்றனர். தேவாங்க மன்னன் அசுரர்களிடம் சிறைப்பட்டார். சிறை பிடித்த தேவலமுனிவரை அசுரன் கொல்லாது தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றான். அரம்பையின் சாபம் பலித்துவிட்டது. நாட்டை அடைந்த அசுரமன்னன் தேவலமுனிவரைக் கொண்டு தனது குலமக்களும் ஆடைகளைப் பெறவேண்டும் என்று திட்டமிட்டான். அதனால் அவரைச் சிறைக் கைதியாக நடத்தாமல் மரியாதைக்குரிய ஒருவராக வைத்து நடத்தினான். தலைமைப் பதவியையும் கொடுத்தான். பின் தன் வளர்ப்பு மகள் பத்மினியை மணக்குமாறு வேண்டினான். அரக்க மகளை மணக்க முனிவர் தயங்கினார். அப்போது அக்னி தேவன் அங்கு தோன்றி பத்மினி என்னுடயை மகள். அக்னி தத்தை என்பது அவள் பெயர். இம்மன்னன் என்னுடயை நண்பன். அதனால் என் மகளை இங்கு நான் வளர்க்க விட்டேன். அவளும் வளர்ந்து வருகின்றாள். தாங்கள் தயங்காது இவளை மணக்கலாம். என்று கூறித் தானே முன்னின்று மணத்தை முடித்து வைத்தான். இம்மணத்தில் இவர்களுக்கு சாலன் அலன் பெலன் என்னும் மூன்று மக்கள் பிறந்தனர். இவர்களுக்குத் தேவலர் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்களும் நெய்யும் தொழிலை நன்கு கற்று ஆடைகளை அழகாக நெய்து அசுரர்களுக்கு வழங்கினார்கள். இந்நிலையில் தேவலர் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார். தமது விருப்பத்தை அசுரமன்னனுக்கு அறிவித்தார். அவனும், ஆடைகளைத் தனது மக்களும் பெற வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி விட்டதால் தடை சொல்லாமல் விடை கொடுத்து அனுப்பினான். தேவலமுனிவரும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நாட்டை அடைந்தார். ஆமோத நகரை சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.

5/24/13

53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம்

இவர் பிரம்மாவின் குமாரர். விஷ்ணுவின் அம்சம். யோகத்தில் ஆநந்தம் கொண்டவர். சநகருக்குச் சகோதரர். இக்கோத்ரத்தைச் சநாகரதேவ மகரிஷி கோத்ரம் எனவும் வழங்குகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பெள்ளுள்ளிதவரு :- உள்ளி - வெங்காயம். பெள்ளுள்ளி - வெள்ளை வெங்காயம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.

52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சன்னபுலியதவரு :- சிறுத்தைப் புலி பற்றி வந்த ஒரு பெயர். சிறுத்தைப் புலி வேட்டை ஆடி இருக்கலாம்.
வீரதவரு :- வீரதீர பராக்கிரமம் மிக்கவர்.
வீரணதவரு :- அம்மன் திருவிழாக்களில் வீர்முஷ்டிக வேடம் தரிப்பவர்.
அஸ்வவைத்யதவரு :-
தம்பூரதவரு :-
சங்சாவிளபிதவரு :-
நுன்னுதவரு :-

51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொடகியதவரு :- குடகுப் பகுதியில் வாழ்ந்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கரடியதவரு :- கெரடியதவரு என்பது மருவி உள்ளது. கெரடி - சிலம்பு விளையாட்டு. சிலம்பம் ஆடுவதில் வல்லவர். கெரடி வஸ்தாத் என்று இன்று அழைக்கின்றனர்.
ஹசபியதவரு :-

வியாக்ரமுகன் வீழ்ச்சி

மகேந்திர நகரை அடைந்த வச்சிரதந்தன் அரக்கர்களை ஒன்று கூட்டி மந்திராலோசனை செய்தான். அதில் வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன் 'கேவலம் ஒரு அற்ப மனிதனிடம் நாம் தோற்று ஓடி வருவதா ? இது மகா கேவலம். நானே போர் முகத்துக்குப் போய் தேவாங்கனுடன் போர் செய்து அவனை அழித்து வருகிறேன். விடை தாருங்கள்' என்று வீரம் பேசினான். அண்ணனும் அவனுக்கு ஆசி கூறிப் பெரும் படைகளுடன் போருக்கு அனுப்பினான். வியாக்ரமுகன் போர்முனைக்கு வந்து பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு தேவலரை எதிர்த்துக் கடுமையாக போரிட்டான். முடிவில் தேவாங்கரின் கணைகளால் தலை துண்டிக்கப்பட்டு வீழ்ந்திறந்தான். "ஒரு கணை யாற்குய வுலைய வாட்டி மற் றிரூ கணையாற்சிலை யிறுத்து வெம்பொறி தரு கனை யு'டைநிசா சரன்சி ரத்தையும் அரு கனை தாக்கனத் தகற்றி னானரோ" இதைக் கண்ட அரக்கர்கள் புலிமுகன் வீழ்ச்சியை வச்சிரதந்தனுக்குக் கூற மகேந்திரம் நோக்கி ஓடினர். வெற்றி வாகை சூடிய தேவல மன்னனும் இந்திரனும் பெருமகிழ்ச்சியோடு தம் தம் நகருக்கு ஏகினர்.

தேவலர் தேவதத்தை மணம்

திருக்கயிலையில் சிவபெருமான் தேவலருக்கு மணஞ்செய்து வைக்கத் திருவுளம் பற்றினார். ஏழு முனிவர்களை - சப்தரிஷிகள் கயிலைக்கு வந்து சேருமாறு திருவுளத்தே எண்ணினார். முனிவர்கள் எழுவரும் இறைவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்து திருக்கயிலையை அடைந்து சிவபெருமான் திருமுன் போய் அவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்றனர். வந்த முனிவர்களை நோக்கிச் சிவபெருமான் " முனிவர்களே! தேவாங்க முனிவருக்குச் சூரிய தேவனின் தங்கையை மணமுடிக்க வேண்டும். நீங்கள் சூரியதேவனிடம் சென்று மணவினைக்குரிய நன்னாளைக்கூறி, அவனது ஒப்புதலைப் பெற்று வாருங்கள்!" என்று பணித்தார். முனிவர்களும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சூரிய உலகம் சென்றனர். சூரியபகவானை அணுகி, வந்த காரியத்தைச் சொல்ல அவனும் தன் சம்மதத்தை மகிழ்ச்சியோடு அளித்தான். வைகாசித் திங்கள் பூர்வபட்சம் சத்தமி நாள் புதன் கிழமையன்று ஆறு நாழிகைக்கு மேல் முகூர்த்த நாளைக் குறித்தனர். இம்முடிவை முனிவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தம் தம் இடம் ஏகினர். சூரியன் தன் தங்கை தேவதத்தையின் திருமணத்தை பற்றிய செய்திகளை எல்லாம் தனது அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் சொல்லி, இம்மங்கல முடிவை ஆமோத நகரம் சென்று தேவாங்க மன்னனுக்கு அறிவித்து அவரை குறித்த மணநாளில் மணமுடிக்க உற்றார் உறவினருடன் சூரிய உலகம் வருமாறு கூறி, அழைப்பை விடுத்துத் திரும்பும்படி அனுப்பினான். அமைச்சன் மார்த்தாண்டனும் தேவாங்க மன்னனிடம் சென்று மணவினைபற்றிய முடிவுகளைச் சொல்லி குறித்த நாளில் சூரிய உலகம் வந்து சேருமாறு கூறி, விடை பெற்றுக்கொண்டு சூரிய உலகம் மீண்டான். சூரியனிடம் தான் ஆமோத நகரம் போய் வந்த விபரங்களைச் சொன்னான். உடனே சூரியன் மயனைக் கொண்டு இரத்தினங்களால் ஆன திருமண மண்டபத்தை அமைத்தான். முளைப்பாலிகைகள் தோற்றுவித்தான். நகரைத் தோரணங்களால் அழகுபடுத்தினான். வரும் விருந்தினர் தகுதிக்கேற்றவாறு தங்குவதற்கு வசதி மிக்க மாளிகைகளை நிர்மானித்தான். பின் சிவபெருமானுக்கும் திருமால் நான்முகனுக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதர்கள் மூலம் திருமண அழைப்பை அனுப்பினான். அழைப்பை ஏற்ற எல்லா தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் திருமணங் காண சூரிய உலகம் வந்து கூடினர். தேவாங்க மன்னனும் தனது திருமணத்துக்கு வருமாறு திருமண திருமுகத்தை உலக மன்னர்கள் யாவருக்கும் அனுப்பினார். அழைப்பை பெற்ற எல்லா மன்னர்களும் உரிய காலத்தில் அமைச்சர்கள் புடைசூழ ஆமோதநகரை வந்தடைந்தனர். அவர்களை எல்லாம் தேவாங்க மன்னன் தக்கவாறு வரவேற்று விருந்து முதலியன வைத்து உபசரித்து அமர்த்தினார். நல்லநேரத்தில் மன்னர்களும் நால்வகைப் படையினரும், விருதுகள் பலரும் ஏந்த, எக்காளம் துந்துபி பேரிகை முதலியன முழங்க, வாத்தியங்கள் ஒழிக்க அழகிய பெண்கள் ஆடல் பாடல் நிகழ்த்த தேர்மீது அமர்ந்து சூரியவுலகம் வந்தடைந்தார். சூரிய தேவன் மணமகனைத் தக்கவாறு வரவேற்று திருமணமண்டபத்துக்கு அழைத்துச் சென்றான். மணமகன் மணக்கோலம் பூண்டு மனையில் அமர்ந்தான். அழகில் தனக்கு நிகர் தானே என விளங்கிய தேவதத்தை இயற்கை அழகும் செயற்கை வனப்பும் பெற்று அன்னமென தேவமாதர்கள் புடைசூழ திருமணமண்டபம் வந்தடைந்தாள். மணமகன் அருகில் மனைமீது அமர்ந்தாள். பலவகை வாத்திய கீதங்கள் முழங்க, வேதகீதங்கள் ஒழிக்க தேவதத்தையின் கழுத்தில் தேவாங்க மன்னன் மங்கல நாண் சூட்டினார். அம்மை அப்பரும் சூழ்ந்திருந்த மற்ற தேவர்களும், முனிவர் முதலியோரும் மலர் தூவி வாழ்த்தி அருளினர். சூரிய பகவான் தாம்பூலத்தை எல்லோருக்கும் இரத்தினப் பேழைகளில் வைத்துக் கொடுத்தான். இந்நேரத்தில் தேவல மன்னன் தான் கொண்டு வந்திருந்த அழகான ஆடைகளை மூவருக்கும் அவர்கள் தேவிமார்களுக்கும், தேவர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆண் பெண் அனைவருக்கும் அவர்கள் மகிழுமாறு அளித்தார். அப்போது அங்கு வந்திருந்த பைரவக் கடவுளுக்கும் நல்லாடை ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து " எல்லோருக்கும் நல்ல நல்ல ஆடைகளைக் கொடுத்து விட்டு கடைசியில் மிஞ்சியிருந்த கழிசல் ஆடையை எனக்குக் கொடுத்தாயல்லவா ? இதோ இந்த ஆடையின் கதியைப் பார் " என்று சொல்லி அந்த ஆடையைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தார். அதற்குப் பிறகு நல்லதோர் ஆடையைத் தமக்கு அளிக்குமாறு கேட்டார். பைரவரின் தகாத செயலைக் கண்ட தேவலர் இன்னொரு ஆடையை அவருக்கு அளிக்க மறுத்தார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தமக்கு ஆடை கொடுக்க மறுக்கிறார் என்று கூறினார். பெருமான் தேவலரிடம் நடந்த செய்தியைக் கேட்டறிந்து பைரவரை நோக்கி, " தேவலர் அளித்த ஆடைகளை நாங்களெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்று உடுத்திப் போற்றினோம். நீயோ கொடுத்த ஆடையை மதிக்காது பெற்று கிழித்து எறிந்தனை. அதனால் இன்று முதல் நீ கிழிந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் இருக்கக் கடவை" என்று சபித்தார் சாபம் பெற்ற பைரவர் அங்கிருந்து நீங்கினார். திருமணம் நான்கு நாட்கள் நடைபெற்றன. வந்திருந்த யாவருக்கும் நான்கு நாட்களும் விருந்து உபசாரங்கள் நடைபெற்றன. நான்காவது நாள் திருமணத்துக்கு வந்திருந்த யாவரும், தேவலமன்னன் தம்பதிகளுக்கு ஆசி கூறி சூரிய தேவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் இருப்பிடம் சென்றனர். தேவலமன்னன், தானும் தன் மனைவியுமாக சில நாட்கள் அங்கு தங்கி இன்புற்றிருந்தார். அதன் பின் சூரியதேவன் அளித்த ஏராளமான சீர் வரிசைகளைப் பெற்றுக் கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மன்னர்களும் நால்வகைப் படைகளும் புடை சூழ்ந்து வர தேவதத்தையை அழைத்துக் கொண்டு சூரியதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நகர் அடைந்தார்.

விடைக் கொடி தந்த வெற்றி

தோற்றோடிய அரக்கர்கள் வியாக்ரமுகன் இறந்த செய்தியை வச்சிரதந்தனுக்குச் சொன்னார்கள். இதைக்கேட்ட அவன் மிகவும் துயருற்றான். பின் சினங்கொண்டு தேவாங்கனைக் கொள்வதாகச் சூளுரைத்து நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் தங்கியருந்த ஏமகூடம் என்னும் மலைச்சாரலுக்கு வந்தான். வச்சிரதந்தன் போருக்கு வந்திருப்பதை அறிந்த தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் போர்க்கோலம் பூண்டு தேவப் படைகளுடன் போர்க்களம் சேர்ந்தனர். பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி நீண்டநேரம் போர் நடந்தது. வச்சிரதந்தன் விட்ட ஒரு அரிய மந்திரப்படை தேவர்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவித்தது. இதைக்கண்ட தேவாங்க மன்னன் மந்திரப்படையை அழித்துப் போரை முடிவிக்குக் கொண்டு வர எண்ணினார். விடைக்கொடியை எடுத்தார். பூசை செய்து மந்திரபலத்தை ஊட்டி அதைப் பகைவர்கள் மீது ஏவினார். இப்படையிலிருந்து யானை சிங்கம் புலி கரடி பன்றி யாளி சரபம் பூதகணங்கள் முதலியன தோன்றி அரக்கர் படைகளைச் சின்னா பின்னப்படுத்தின. இந்த ஆயுதம் விளைவித்த பயங்கரமான சேதத்தை எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றலையும் கண்ட வச்சிரதந்தனும் அவன் துணைவர்களும் செய்வது அறியாது அஞ்சி நடுங்கிப் போர்க்களம் விட்டு ஓடோடி மகேந்திரம் அடைந்தனர். தோற்று ஓடிய வச்சிரதந்தன் போரில், விடைக்கொடியால், உடன் பிறந்தாரும் மைந்தரும் மருமக்களும் துணைவரும் இறந்ததை எண்ணி ஊணுறக்கமின்றி வருந்தினான். இறந்தவர்களின் மனைவியர்கள் நாணிழந்து துன்புற்று அழுத குரல் கேட்டு உள்ளம் உருகினான். எங்கும் துக்கம்; எங்கும் அழுகுரல், துக்கத்தை மாற்றிக் கொள்ளும் வகையறியாது துன்புற்றான். தனக்கேற்பட்ட துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழுது சிறிது ஆறுதல் பெறலாமென எண்ணினான். இவனுக்கு வித்தையுத்தேசன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். நேராக அவனிடம் போனான். தன் துன்பத்தை அவனிடம் சொன்னான். தேவாங்க மன்னனின் தீரத்தையும் போர்த்திறத்தையும் வல்லமையையும் அவனிடம் உள்ள விடைக்கொடியின் ஆற்றலையும் கூறி, ' தேவாங்கனிடம் விடைக்கொடி இருக்கு மட்டும் தேவாங்கனின் துணைபெற்றிருக்கும் தேவர்களை வெல்ல முடியாது. நீயோ பெரிய மாயாவி. பலவகையான வேடங்களைக் கொள்வதிலும் வல்லவன். நீ நினைத்தால் அந்த விடைக் கொடியைக் கவர்ந்து கொண்டு வந்துவிட முடியும். அவ்வாறு செய்வாய? தேவாங்கனிடமுள்ள விடைக்கொடியை கவர்ந்து கொண்டு வந்து விட்டால் தேவர்களை எளிதில் வென்று விடலாம் ' என்றான். இதைக் கேட்ட வித்தையுத்தேசன் அவ்வாறே செய்வதாக நண்பனுக்கு உறுதி கூறி வஞ்ச வேடம் பூண்டு ஆமோத நகருக்குச் சென்றான்.

5/23/13

தேவலமன்னன் செய்த போர்கள்

தேவாங்க மன்னன் இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வீற்றிருக்கும் நாளில், தேவர்கள், அணிவதற்கு அழகான ஆடைகள் பெற்ற மகிழ்ச்சியில் குதூகலமுற்று ஆடைகளை அணிந்து கொண்டு, ஆடையின்றி நிர்வாணத்தோடு இருந்த அரக்கர்கள் முன்போய் சிரித்துப்பேசி கேலி செய்தனர். இதைப் பொறுக்காத அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தன் பால் சென்று அரசே! தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் " நிர்வாணிகள் நாணமற்றவர்கள் " என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்பிகளே ! ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் "அண்ணலே! தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை " என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது? ' என்று கேட்டார். அரக்கர்கள் " சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் " என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் " பெருமானே! ஒரு ஆண்டு காலமேனும் உலகம் இருளில் இருக்குமாறு அருள் செய்யுங்கள் " என்றனர். சிவ பரம் பொருள் ' அவ்வாறே தந்தோம் ' என்று அருளி மறந்தார். அப்போதே உலகம் இருண்டு விட்டது. அதைக்கண்ட அரக்கர்கள் மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வீரமகேந்திரம் என்னும் தமது நகரை அடைந்தனர். அரக்கர் தலைவன் வச்சிரதந்தன் அரக்கர்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி அரக்கர் சேனைகளை வரவழைத்தான். எல்லா அரக்கப் படைகளும் வீரமகேந்திரபுரியில் ஒன்று கூடி போர்க்கோலம் கொண்டன. படைபலத்தைக் கண்ட வச்சிரதந்தன் வெற்றி உறுதி எனத்துணிந்து போர்க்கோலம் பூண்டு தம்பியர் இருவரும் அவர்கள் மக்கள் நால்வருமாக நால்வகைப் படைகளுடன் போர் முரசு முழங்க வானநாடு சென்று அமராவதி நகரைச் சூழ்ந்து கொண்டான். இதையறிந்த இந்திரனும் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களம் போந்து அரக்கரை எதிர்த்தான். இருபடைகளுக்கும் இடையே பெரும் போர் நடந்தது. போரில் தேவர்கள் தோற்று ஓடினர். வெற்றிவாகை சூடிய வச்சிரதந்தன் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் படைகளோடு வீரமகேந்திரம் அடைந்தான். அரக்கர்களிடம் தோற்று ஓடிய அமரர் தலைவனும் அமரர்களும் ஒன்று திரண்டு யாவருக்கும் பதியாம் பசுபதியைக் காணத் திருக்கயிலையை அடைந்தனர். பெருமான் முன் சென்று பணிந்து இனிது ஏத்தி. அரக்கரிடம் போரிட்டுத் தோற்று ஓடிய துன்பச் செய்தியைச் சொல்லி, அத்துன்பத்தினின்றும் காத்து ரட்சிக்குமாறு வேண்டினார். அவர்கள் வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்து தேவாங்க மன்னனை உள்ளத்தே எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்க மன்னன் அக்கணம் அங்கு வந்து சேர்ந்தார்.அரனடி பணிந்து நின்றார்.நின்ற தேவலனை நோக்கிச் சிவபெருமான் " தேவர்களை வருத்தும் அசுரர்களைப் போரில் வென்று மீள்க " என்று பணித்தார். இறைவனிடம் இக்கட்டளையை பெற்ற தேவலர் இறைவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, இந்திரனை நோக்கி " இனி அஞ்சவேண்டாம். உன் படைகளுடன் நீ அமர நாட்டுக்குப் போ. நான் ஆமோத நகரம் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் இங்கு வருகிறேன் " என்றார். இந்திரன் அமரநாடு செல்ல, தேவாங்க மன்னன் தன் நாட்டுக்குச் சென்று பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார். தேவேந்திரனையும் தேவபடைகளையும் கூட்டிக்கொண்டு கயிலைச் சாரலை அடைந்து போர் முரசங் கொட்டினார். போர்ப்பறை கேட்டதும் வச்சிரதந்தன் தனது படைகளுடன் போர்க்களம் அடைந்தான். இருவரிடைப் பெரும் போர் மூண்டது. போரில் வச்சிரதந்தன் தோல்வியுற்றுப் புறமுதுகு காட்டி ஓடித் தனது படைகளுடன் மகேந்திரம் சேர்ந்தான்.

தேவலரின் ஆட்சியும் மக்கட்பேறும்

தேவாங்க மன்னனின் ஆட்சியில் பகைவர்கள் வணங்கினர். நால்வகை வருணத்தாரும் தமக்குரிய நெறியில் நின்றனர். அறநூல் முறைப்படி யாவரும் வாழ்ந்தனர். முப்பத்திரண்டு அறங்கள் எங்கும் சிறந்தன. நாட்டில் பகையே இல்லை. புலியும் மானும், எலியும் பாம்பும் பகை மறந்து நட்போடு பழகின. தவக்குறைவும் மகப்பேறின்மையும் எவரிடத்தும் இல்லை. நற்குணம், அன்பு, நன்மை, உறுதி, கருணை, மெய்யுணர்வு, கல்வி நாளுக்கு நாள் நாட்டில் ஓங்கி வளர்ந்தன. அதனால் நாட்டில் அழிவோ வறுமையோ அலைச்சலோ இல்லை. இவ்வாறு எல்லாச் சிறப்புகளும்பெற்று விளங்கிய சகர நாட்டைத் தேவலமன்னன், தன் கீழ் வாழும் முடிமன்னர்கள் அன்புடன் திறை செலுத்த, நீதியோடு ஆட்சி புரிந்து வந்தார். அந்நாளில் தேவதத்தை கருத்தரித்து மூன்று மக்களை ஈன்றாள். இவர்களுக்குத் திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தார். இவர்களும் மணப்பருவம் எய்தியதும் இவர்களுக்கு சூரியதேவனின் புதல்விகள் பிரபை பத்மாட்சி கமலாட்சி என்பவர்களை மணமுடித்து வைத்தார். பின் மூத்தமகன் திவ்யாங்கனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியை நல்கி மகிழ்ந்தார். மன்னனின் மற்றோர் மனைவி நாககன்னி சந்திரரேகையும் ஒரு மகவை ஈன்றாள். அக்குழந்தைக்குச் சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனும் எல்லா கலைகளையும் கற்றுணர்ந்து வல்லவனானான். அது சமயம் குசைத் தீவை ஆளும் சூரசேனன் என்னும் மன்னன் ஆமோத நகர் மீது பெரும் படையோடு போருக்கு வந்தான். தேவாங்க மன்னன் பெரும் படை கொண்டு எதிரியுடன் போரிட்டு சூரசேனனைக் கொன்று அவன் ஆண்ட குசைத் தீவையும் கைப்பற்றித் தன் மகன் சுதர்மனை அந்நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டி ஆட்சியில் அமர்த்தினார். பின் சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னனின் மகள் புட்கலையை மணம் செய்வித்தார். இவ்வாறு மக்கள் சிறக்கத் தவம்புரி மறையவரும் உலக மக்களும் போற்றும்படியாக குபேரனை ஒத்துச் செல்வ வாழ்வில் சிறப்புற்று ஓங்கி இருந்தார்.

அரம்பையின் சாபம்

இனி தேவல முனிவர் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலையை விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினார். திரும்பி வரும் வழயில் எழில் மிகுந்த சோலையும் அதில் பன்னிறப் பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றும் இருக்கக் கண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு களைப்புத் தீர அந்த தடாகத்தில் குளித்து விட்டு அதன் கரை மீது அமர்ந்தார். கயிலையில் தேவலரும் தேவர்களும் கூடியிருந்த தேவசபையில் நாட்டியமாடிய தேவ கன்னியரில் ஒருவளான அரம்பை, தேவலரின் பேரழகில் ஈடுபட்டு மனதைப் பறிகொடுத்திருந்தாள். தேவலரைத் தனிமையில் சந்திக்கக் காலம் எதிர்நோக்கி இருந்தாள். தேவலர் பூஞ்சோலையில் தனித்து இருப்பதை அறிந்து அவர் முன் தோன்றினாள். பக்கத்திற் சென்றாள். அமுதொழுகப் பேசி தன் காதலைப் புலப்படுத்தினாள். இவளது காதலையும் காதற் பேச்சுக்களையும் கேட்ட தேவலர் சிவ சிவ என்று காதுகளைப் பொத்திக் கொண்டார். 'அரம்பையே! நான் ஒரு பிரம்மச்சாரி. காம இச்சை சிறிதும் இல்லாதவன். உன் காதலுக்கு நான் உரியவன் அல்லன். உன்னை நாடும், உன் விருப்பத்திற்கு ஏற்ற தேவேந்திரனும் தேவர்களும் தேவ உலகில் உள்ளனர். அவர்களிடம் போ. மேலும் கணிகையர் உறவு, புகழ், புண்ணியம், அறிவு, மனவுறுதி, குணம், தவம் யாவற்றையும் அழித்து பாவக்கடலில் ஆழ்த்தும். ஆதலால் என்னை விட்டு நீங்கி உன்னை விரும்பும் தேவர்களிடம் போய் உன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்' என்று மொழிந்தார். இதைக் கேட்ட அரம்பை மனம் புழுங்கி, என்னைச் சாதாரண அரம்பை மகளிரில் ஒருவளென எண்ணி என் பெருமையை அறியாதவர் போல் பேசுகின்றீர்கள். பற்பல யாகங்களை முறையாகச் செய்து முடித்த முனிவர்களுக்கே என்னுடைய போக இன்பம் கைகூடும். என்று ஆதிநூல்கள் பகர்வதை அறியீர் போலும். தவத்தின் மிக்க அத்திரி முனிவர் போன்ற தவசிரேட்டா்களெல்லாம் என்னை விரும்பி மோன நிட்டையை விட்டு என்னை அணுகினர். எனினும் நான் அவர்களைக் கூடினேன் அல்லேன். நீரோ வலிய வந்த என்னைப் புறக்கணிக்கின்றீர். இது முறையல்ல என்று வாதிட்டாள். இவ்வாறு அரம்பை கூறிய பேச்சுகளுக்கும் வாதங்களுக்கும் முனிவர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அரம்பை முனிந்து " நீ பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புருவாயாக" என்று சாபமிட்டு அமரருலகம் சென்றடைந்தாள். சாபம் பெற்ற தேவலமுனிவர் இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணி மனங்கலங்காது ஆமோத நகரை அடைந்தார்.

50 .சங்கு மகரிஷி கோத்ரம்

இம் மகரிஷி சாங்கியாயன மகரிஷி என அழைக்கப்படுகின்றார். ஓயாது ரிக்வேதம் ஓதிக் கொண்டு இருந்த மகரிஷி இவர். பராசரருக்கும் தேவகுருவான பிருஹஸ்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குடகோலதவரு அ குடிகேலாரு ;- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.

49 .சதாநந்த மகரிஷி கோத்ரம்

பிரம்மதேவனின் பேரர். கௌதம மகரிஷிக்கும் அகலிகைக்கும் பிறந்தவர். இவர் மிகச்சிறந்த தவசி. இவர் தவம் செய்யுங்கால்; எங்கே இந்திர பதவி அடைந்து விடுவாரோ என்று பயந்த இந்திரன் இவர் தவத்தை கெடுக்க ஊர்வசியை அனுப்பினான்.

சதாநந்தரின் மகன் கிருபாச்சாரி, மகள் கிருபி, இக்கிருபியைத் துரோணாச்சாரியார் மணந்து கொண்டார். அஸ்வத்தாமன் என்னும் மகனைப் பெற்றனர் துரோணர் தம்பதிகள். பாரதப் போர் முடிந்த பின்னும் சாகாது இருந்தவர்களுள் கிருபாச்சாரி ஒருவர்.

இராமபிரான் மிதிலைக்குச் சென்ற போது விசுவாமித்திரர் புகழை இராமமூர்த்திக்கும்; ஜனகருக்கு இராமபிரான் புகழையும் கூறியவர் சதாநந்தர். ஜனக மன்னருடைய புரோகிதர் இச்சதாநந்தர். சீதாபிராட்டிக்கு இவர் குலகுரு ஆகிறார்.

சதாநந்தரின் இன்னொரு மகன் சத்தியத்திருதி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹிரேமனெயவரு - இருமனேரு :- பெரியவர்கள்; பெரியவீட்டுக்காரர்கள். புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்த பத்தாயிரம் குழுந்தைகளில் முதல் குழந்தைக்குச் சதாநந்தர் தீட்சை செய்து இருக்கலாம்.

செட்டிகாரரிடம் மரியாதைகள் பெறும்போது மற்ற கோத்ரத்தார் எழுந்து நின்று] மரியாதை பெறுகின்றனர். ஆனால் ஹிரேமனெயவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் சென்று மரியாதை கொடுக்கப்படும் சம்பிரதாயம் மேற்கண்ட கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

வங்குசப் பெயரினையும், சம்பிரதாயத்தையும் இணைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் முதல் குழந்தையின் வம்சாவழியினர் என்பது விளங்கும்.

ஹிரேமனெயவரு என்ற பெயர்தான் இருமனெயவரு என்று மாறியிருக்கின்றது.
அங்கடிதவரு :- அங்கடி - கடை; கடைகட்டி வியாபாரம் செய்தவர்.
அங்கப்பதவரு :- இவ்வங்குசத்தோர் மூத்த மகனுக்கு அங்கப்பன் என்றும், மகளுக்கு அங்கம்மா என்றும் பெயர் சூட்டுவர். அங்கப்பன் என்பவர் வம்சம்.
ஆரேதவரு :- ஆராக்கீரையைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
அம்பட்டிதவரு :- சித்தூர் மாவட்டம் மதபல்லி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர் அம்பட்டி. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அஸ்வபதிதவரு :- ஏராளமான குதிரைச் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டவர். இவ்வங்குசத்தினர் குதிரேனாரு என்ற பெயருடன் தொட்டுபெல்லாபுரத்தில் இன்றும் வாழ்கின்றனர்.
கடிகெலதவரு :- கடகம் என்னும் நகை அணிந்தவர்.
கணபதிதவரு :- விநாயக விரத கல்ப முறைப்படி விரதம் இருப்பவர்.
கோகர்ணதவரு :- கோகர்ண சேஷத்திரத்தைப் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோடம்தவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். தன் செயலாலும் சொல்லாலும் சிரிக்கச் செய்பவர்.
கோடூரிதவரு :- நெல்லூர் ஜில்லாவில் உள்ள கோடூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கௌரீஜனதவரு :- கௌரி தேவியைப் பூசித்து ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்றவர்.
தாராபுரதவரு :- தாராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துர்க்கதவரு :- துர்க்கம் - மலை; மலையைச் சார்ந்து வாழ்ந்தவர். பெட்டதாரு என்று கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது.
கொணபர்த்திதவரு :- சித்தூர் ஜில்லாவில் உள்ள கொணாபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொம்மனதவரு :- பொம்மண்ண சுவாமியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
ராகதவரு :- அம்மன் திருவிழாவில் எடுக்கும் ஜோதிக்கு ராகதீபம் என்று பெயர்.

ராகம் - பிரீதி, ஆசை என்பது பொருள். ஆசையுடன் விரும்பி ஜோதி எடுப்பவர் என்று பொருள்.

நம் குலத்தின் ஆதிபுருஷர் தேவலர். அவர் ஜோதிஸ்வரூபமாக அவதாரம் செய்தார். அதனை எண்ணிப் பார்க்கும் வகையிலும் தேவலப் பரப்பிரம்மத்தினின்றும் சௌடேஸ்வரி என்னும் சிற்ஜோதி பிறந்தது என்று வேதங்கள் முழங்குவதையும் கருத்திற்கொண்டு ஜோதி எடுத்து வழிபடுகிறோம்.

ஹிரேமனெயவரு :- சக்தி

அந்தலதவரு :- எந்தேலாரு - சாமுண்டி

லத்திகார்ரு :- லதாலதவரு - ஜோதி

கப்பேலாரு :- குண்டம்

என சேலம் நகரில் தற்போது நடைமுறை இருந்து வருகின்றது.

ஆனால் ஹிரேமனெயவரு ஜோதி எடுப்பவர்என வங்குசம் வருகின்றது.

ஐந்து கத்திகை மனைகாரர்களில் யார் வேண்டுமானாலும் சக்தி அழைக்கலாம். சாமுண்டி அழைக்கலாம். ஜோதி எடுக்கலாம், குண்டம் மிதிக்கலாம் என்று புலப்படுகிறது.

இவற்றைக் கவனிக்கும் போது கத்திமனைக்காரர்கள் இன்னின்னார் இன்னின்னவற்றைத்தான் அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லையென்று தெரிகின்றது.
உங்குதவரு :- உங்குகிண்ணம் - குழந்தைக்குப் பால் ஊற்றும் கிண்ணம். இவ்வங்குசத்தார் குழந்தைகட்குப் பால் வழங்கும் தருமம் செய்தவர்கள்.
ஹிமத்கேதாரதவரு :- இமயமலையில் உள்ள கேதாரநாத் என்னும் தலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொட்டமனெயவரு :- பெரிய வீட்டுக்காரர். ஹிரேமனெயவரு என்பதுவும் இதுவும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு பெயர்கள்.
பாணிலாறு : - பாணதவரு :- 32 விதமான விருதுகளில் பாணம் ஒன்று.
கர்னாதவரு :- கோகர்ணதவரு என்ற வந்குசம்தான் கர்னாதவரு என்று வழங்கப்பட்டிருக்கிறது.
பதகதவரு :- மன்னர்களிடம் பரிசுப் பதக்கங்கள் பெற்றவர். பதக்கம்என்பது பதகம் என மருவி வந்துள்ளது.
பன்தெனதவரு, பாகடிதவரு, பிடிதவரு, மாடலிதவரு, வாபட்ணதவரு, ஜன்தினதவரு, ஜாதினதவரு, ஜீவகட்டுதவரு, பீரணெயவரு, மாமனியதவரு, சுருகியவரு, சூரிமெயதவரு, அங்கபந்துனிதவரு, இங்குதவரு, கோரஸதவரு, கோரண்டதவரு, கோரேதவரு, தேவசதவரு, பட்டுதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

48 .சதுமுக மகரிஷி கோத்ரம்

இவர் சதுமுக மகரிஷி என்று அழைக்கப்படுகின்றார். பராசர மகரிஷியின் குமாரர்கள் அறுவருள் இவர் ஒருவர். இவருடைய மற்ற சகோதரர்கள் தத்தன், அநந்தன், நந்தி, பருதிபாணி, மாலி என்போராவார்.

சகோதரர்கள் அறுவரும் சிருபிராயத்தில் முதலை உருக்கொண்டு சரவணப் பொய்கையுள் புகுந்து விளையாடினர். பொய்கையில் இருந்த மீன்கள் சில இறந்து மிதந்தன. பொய்கைக்கு நீராட வந்தார் பராசரர். தம்மக்களின் விளையாட்டைக் கண்டு கோபம் கொண்டார்.

தகாதவை செய்து மீன்களைக் கொல்வித்தமையால் நீர் சரவணப் பொய்கையிலேயே மீன்களாக மாறுவீர் எனச் சபித்தார். தந்தையால் சாபம் பெற்ற அறுவரும் சாபவிமோசனம் வேண்ட, சரவணப் பொய்கையில் குமரக்கடவுள் அவதாரம் செய்வார். அவர் பொருட்டு உலக நாயகியாகிய உமையம்மை தரும் பால் இப்பொய்கையில் சிந்தும். அப்பாலை உண்ண உங்கட்குச் சாபம் விமோசனம் ஆகும் என அருள் செய்தார் பராசரர்.

குமரக் கடவுள் ஆறுதிருமேனிகளுடன் சரவணப் பொய்கையில் திருவிளையாடல் புரிந்தருளினான். மகனை அள்ளி அணைக்க ஆர்வம் கொண்ட பார்வதிதேவியார் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி, ஆறுதிருமேனிகளையும் அள்ளி அணைத்து ஒரு திருமேனி ஆக்கினாள். எனவே அன்று முதல் முருகனும் கந்தன் என்னும் திருநாமம் பெற்றனன். அன்னை அருளுடன் அவனுக்கு ஊட்டிய ஞானப்பால் பொய்கையில் சேர அதனை மீன் வடிவம் கொண்ட அறுவரும் உண்டு சாபம் நீங்கினர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கத்திதவரு :- கத்தி வழிபாடு செய்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு வீரகுமாரர்கள் கத்தி போட்டுக் கொண்டு அலகு சேவை செய்வது மரபு. இக்கத்திகள் புனிதம் வாய்ந்தவை ஆதலின், இன்றும் பலர் பூசனை அறையில் கத்திகளை வைத்து வழிபடுகின்றனர்.
குலபக்திதவரு :- தம்குல பக்தி மிக்கவர்.
புலிபாகலதவரு :- துர்க்கையின் வாகனமான புலி வழிபாடு செய்பவர்.
பூஷணந்தவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் மிக்கவர்.
போகதவரு :- சுகபோகமாக வாழ்பவர்.
முலிகினதவரு :- கோபம் மிக்கவர்.
பூசம்தவரு :- பூச நட்சத்திரத்தில் தவறாது விழா நடத்தி வழிபாடு செய்பவர்.
அட்யம்தவரு, அவன்டதவரு, ஆட்ரதவரு, ஆண்ட்ரதவரு, தும்மினிதவரு, பிசனதவரு, பிச்சினதவரு, புச்சகிஞ்சிதவரு, புச்சலதவரு, ரெட்ளதவரு.

47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு ;- சூரியதேவனைப் பூசிக்கும் முறையினையும், சூரிய அர்ச்சனை மந்திரங்களையும் ரிஷிகளுக்குக் கூறியவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ காகுளதவரு :- ஆந்திராவில் உள்ள ஸ்ரீ காகுளம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாகரதவரு :- சாகரம் - சமுத்திரம்; சமுத்திரக்கரை நகரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சன்னுகிடுசுதவரு :-

தேவாங்கர் குல ஜெகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்


5/22/13

பேசும் படம்


பேசும் படம்


பேசும் படம்


பேசும் படம்


கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!


காதல்

ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு
இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி
சோகமா இருக்க?ன்னா.

அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்
அடடே
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
கண்டிப்பா
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற


ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t25755-topic#ixzz2U1cYi76q
Under Creative Commons License: Attribution

அபராதம்

ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள
போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க
முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள்
எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா
கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா
500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு
சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா
பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது

ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"

பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,

"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"

யக்ஞோபவீதம் வழங்கல்

பிறகு தேவலர் இறைவனைநோக்கிப் "பெருமானே! அடியேன் தங்கள் திருவுளப்பாங்கின்படி ஆடைகளை நெய்து மூவுலகிலுள்ளோர் யாவருக்கும் அணியக்கொடுத்து அவர்கள் மானத்தைக் காக்கும் பேற்றைப் பெற்றேன். ஆடைகள் நெய்து அளித்தது போக மீதியாக நூல் எஞ்சியுள்ளது. அதை என்ன செய்ய?" என்று வினயமாகக் கேட்டார். அது கேட்ட சிவபெருமான் "மைந்தனே! எஞ்சியுள்ள நூலைக்கொண்டு யக்ஞோபவீதம், மாங்கல்யம், கங்கணம், கடிசஞ்சாதம் என்னும் ஐந்து சூத்திரங்களைத் தயாரிக்கவும். யக்ஞோபவீதத்தை பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், பிராமணர்கள் ஆகிய இவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து அணியக்கொடுக்கவும். மாங்கல்ய சூத்திரத்தை கற்புடைய மகளிருக்கும், கங்கண சூத்திரத்தை உபநயன காலத்திலும், சஞ்சாத சூத்திரத்தைப் பெண்களின் பிரசவ காலத்திலும் அணியக் கொடுக்கவும் எனப் பணிந்தார். தேவலமுனிவரும் இறைவன் பணித்தபடி சூத்திரங்களைத் தயார் செய்து உரியவர்க்களித்தார். இதனால் இவர் இவர்களால் சூத்திரகர்த்தா என்று துதிக்கப்பெற்றார்.

அரனிடம் வாளும் நந்திகொடியும் பெற்றது

அடுத்து தேவல முனிவர் சிவபெருமானை வணங்கி அவருடைய நல்லாசிகளைப் பெற விரும்பினார். பல நிறங்களில் அழகிய ஆடைகளை எடுத்துக் கொண்டு, தேவரும் முனிவரும் புடை சூழ்ந்து பெருமானின் புகழைப்பாட, இடப்பாகத்தில் அம்மை வீற்றிருக்கக் கொலுவிருந்த கயிலை மால்வரையை நண்ணினார். பெருமானின் முன் சென்றார். அம்மை அப்பரின் அடிவணங்கிப் பல்வாறு துதித்துப் பரவினர். தாம் எடுத்துச் சென்ற அழகான அம்பரங்களைத் திருமுன் எடுத்து வைத்துப் " பெருமானே! தங்கள் திருவருட்டுணையால் இந்த ஆடைகளை வனைந்தேன். இவற்றைத் தாங்கள் ஏற்று அணிந்து அருள வேண்டும் என்று இருகை கூப்பி வணங்கிப் பணிந்தார். தேவலரின் வேண்டுகோளுக்கு இசைந்து சிவபெருமானும் அம்மை பராசக்தியும் மகிழ்ந்தேற்று அணிந்து பொலிவுடன் விளங்கினர். பின் மூத்தபிள்ளைக்கும் முருகனுக்கும் வீரபத்திரருக்கும் நந்தியம் பெருமானுக்கும் மற்றும் அங்குள்ள முனிகணங்களுக்கும் அவரவர்களுக்கு உரிய ஆடைகளை வழங்கி அவர்களது அன்புக்கும் ஆசிகளுக்கும் உரியவரானார். அதன் பின் சவுடநாயகியை எண்ணித் துதித்தார். சௌடேஸ்வரியும் எழுந்தருளி முனிவர் அளித்த ஆடைகளை மகிழ்வோடு அணிந்தருளி ஆசி கூறி மறைந்தருளினார். அதன் பிறகு தேவலர் சிவபெருமானின் திருமுன் போய்ச் சேர்ந்து வணங்கி நின்றார். வணங்கிய தேவலரைப் பெருமானும் ஆதரவோடு அருகே அமரச் செய்தார். அப்போது தேவசபை நடனமாதுக்கள் அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலியோர் அங்கு வந்து நடனம் ஆடினர். நடன முடிவில் சிவபெருமானின் குறிப்பறிந்து, முனிவர் வண்ண ஆடைகள் பலவற்றைப் பெருமான் முன் வைத்தார். சிவபெருமான் அந்த ஆடைகளை அங்கிருந்த இருடிகளுக்கும், நடனமாதர்களுக்கும் வழங்கி மகிழ்வித்தார். பிறகு சிவபெருமான் தேவலரை அருகழைத்து சக்திவாய்ந்த இடபக் கொடியையும் ஒப்பற்ற வாள் ஒன்றையும் அளித்து "இவை உள்ளளவும் உனக்குப் போரில் தோல்வியும் அச்சமும் உண்டாகாது " என்று ஆசி கூறி அருளினார். அப்போது அங்கு வந்திருந்த சூரிய பகவானை நோக்கி " நீ உன்தங்கை தேவதத்தையை ஆணழகனாயுள்ள இத்தேவாங்க மன்னனுக்கு மணஞ்செய்து கொடு " என்று பணித்தார். அதற்கு சூரிய தேவனும் இசைந்தான். அதன் பின் யாவருக்கும் விடை தந்தருள அனைவரும் தம் தம் இருப்பிடம் ஏகினர்.

மக்களுக்கும் நாகர்க்கும் அம்பரம் நல்கியது

பின்னர் முனிவர் நாவலந் தீவை அடைந்து அந்நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் ஆடைகளை வழங்கிப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு இறலித் தீவு, கிரெளஞ்சத் தீவு, சாகத் தீவு, புட்கரத் தீவு முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் அம்பரங்களை நல்கிப் பின் பாதாள உலகம் சென்றார். அங்குள்ள தக்கன், வாசுகி, கார்க்கோடகன், சங்கன் முதாலன நாகர்களுக்கும் நாக கன்னியர்க்கும் தக்க உடைகளை அளித்து மகிழ்வித்தார். அவர்கள் தந்த மாணிக்கங்களையும் மற்ற பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது நாக மன்னன் அனந்தன், தன்மகள் சந்திரரேகையை தேவலருக்கு மணஞ்செய்து கொடுத்துச் சீதனமாக பல அரிய பொருள்களையும் கொடுத்தான். முனிவர் சின்னாள் அங்கு தங்கிப் பின் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மனைவியுடனும் சீர்வரிசைகளுடனும் நாடு திரும்பினார்.

தேவர்களுக்கு ஆடைகள் அளித்தது

தேவல முனிவர் தாம் நெய்த விதவிதமான கண்கவர் வனப்புமிக்க ஆடைகளைத் தேவர்களுக்கு அளிக்க விரும்பினார். முதலில், நூலைக் கொடுத்துதவிய திருமாலுக்குக் கொடுக்க எண்ணி அழகிய அம்பரங்களை எடுத்துக் கொண்டு வைகுந்தம் போனார். அங்கு பாம்பணையில் பள்ளி கொண்டிருந்த பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி பூதேவிகளுக்கும் மற்றுமுள்ள வைகுண்ட வாசிகளுக்கும், கொண்டு சென்ற அபூர்வமான ஆடைகளை அணியத் தந்தார். அவர்களும் அவற்றை அணிந்து பெருமகிழ்ச்சியுற்றுக் கைமாறாக ஏராளமான அரிய பொருள்களைப் பரிசாக அளித்தனர். முனிவரும் பெற்ற வெகுமதிகளை எடுத்துக் கொண்டு சத்தியலோகம் போனார். அங்குள்ள பிரம்மாவுக்கும் அவர் மனைவிகள் நாமகளுக்கும் சாவித்திரிக்கும் செந்நிறம் வெண்ணிறம் பசுமைநிறமுள்ள ஆடைகளை முறையே நல்கி மகிழ்வித்தார். மற்றும் அவ்வுலகில் வசிக்கும் புலத்தியர் கின்னரர் கிம்புருடர் சித்தர் முதலியோருக்கும் ஆடைகளை அளித்தார். பின் பிரம்மாவை அணுகி வணங்கி அண்ணலே திருமால் அளித்த நூலைக்கொண்டு அடியேன் ஆடைகளைத் தயாரிக்கிறேன். எனக்குப் பின் என் சந்ததியார் நூலுக்கு என்ன செய்வர்? என வினவினார். அதற்கு நான்முகன், திருமாலின் உந்தியிலிருந்து தோன்றிய மானி அபிமானி என்னும் இரு பெண்களை உலகத்திற்கு அனுப்பி அவர்களைப் பருத்திச் செடியாக முளைக்கும்படி செய்கிறேன். அதில்பெரும் பருத்தியை நூலாக்கி ஆடைகளை நெய்து உன் சந்ததியார் எல்லோருக்கும் அளிக்கட்டும் என்று வரமருளி அனுப்பினார். பிறகு தேவல முனிவர் இந்திர உலகம், அட்ட திக்குப்பாலகரின் உலகங்கள், உருத்திர உலகங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் ஏற்ற ஆடைகளை அளித்து அவர்கள் விரும்பியளித்த பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார். இவ்வாறு தேவர்களின் அங்கங்களை ஆடைகளால் அலங்கரித்ததால் தேவல முனிவர் தேவாங்கன் என்ற பெயரையும் பெற்றார்,