அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

தேவர்களுக்கு ஆடைகள் அளித்தது

தேவல முனிவர் தாம் நெய்த விதவிதமான கண்கவர் வனப்புமிக்க ஆடைகளைத் தேவர்களுக்கு அளிக்க விரும்பினார். முதலில், நூலைக் கொடுத்துதவிய திருமாலுக்குக் கொடுக்க எண்ணி அழகிய அம்பரங்களை எடுத்துக் கொண்டு வைகுந்தம் போனார். அங்கு பாம்பணையில் பள்ளி கொண்டிருந்த பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி பூதேவிகளுக்கும் மற்றுமுள்ள வைகுண்ட வாசிகளுக்கும், கொண்டு சென்ற அபூர்வமான ஆடைகளை அணியத் தந்தார். அவர்களும் அவற்றை அணிந்து பெருமகிழ்ச்சியுற்றுக் கைமாறாக ஏராளமான அரிய பொருள்களைப் பரிசாக அளித்தனர். முனிவரும் பெற்ற வெகுமதிகளை எடுத்துக் கொண்டு சத்தியலோகம் போனார். அங்குள்ள பிரம்மாவுக்கும் அவர் மனைவிகள் நாமகளுக்கும் சாவித்திரிக்கும் செந்நிறம் வெண்ணிறம் பசுமைநிறமுள்ள ஆடைகளை முறையே நல்கி மகிழ்வித்தார். மற்றும் அவ்வுலகில் வசிக்கும் புலத்தியர் கின்னரர் கிம்புருடர் சித்தர் முதலியோருக்கும் ஆடைகளை அளித்தார். பின் பிரம்மாவை அணுகி வணங்கி அண்ணலே திருமால் அளித்த நூலைக்கொண்டு அடியேன் ஆடைகளைத் தயாரிக்கிறேன். எனக்குப் பின் என் சந்ததியார் நூலுக்கு என்ன செய்வர்? என வினவினார். அதற்கு நான்முகன், திருமாலின் உந்தியிலிருந்து தோன்றிய மானி அபிமானி என்னும் இரு பெண்களை உலகத்திற்கு அனுப்பி அவர்களைப் பருத்திச் செடியாக முளைக்கும்படி செய்கிறேன். அதில்பெரும் பருத்தியை நூலாக்கி ஆடைகளை நெய்து உன் சந்ததியார் எல்லோருக்கும் அளிக்கட்டும் என்று வரமருளி அனுப்பினார். பிறகு தேவல முனிவர் இந்திர உலகம், அட்ட திக்குப்பாலகரின் உலகங்கள், உருத்திர உலகங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் ஏற்ற ஆடைகளை அளித்து அவர்கள் விரும்பியளித்த பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார். இவ்வாறு தேவர்களின் அங்கங்களை ஆடைகளால் அலங்கரித்ததால் தேவல முனிவர் தேவாங்கன் என்ற பெயரையும் பெற்றார்,

No comments:

Post a Comment