அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/22/14

முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014


 முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014 

இதுவரை எத்தனையோ திருவிழாக்களை  நம் சமூகம் கண்டுள்ளது. ஆனால் E-Festival என்று கூறப்படும் முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014  ஆடி அமாவாசை அம்மன் அவதார திருநாளை  முன்னிட்டு சிறப்பாக நடைபெற உள்ளது . அதிலும் நம் சமூக முகநூல் மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த சவுடேஸ்வரி அம்மன் படங்களை தங்கள் படம் வைக்கும் இடத்தில் வைத்து என் தாய் வருகிறாள் .... நல் அருள் தருவாள் என்று வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் அன்னைக்கு படைக்க பல ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்... இது சவுண்டம்மன் திருவிழாக்களில் ஒரு சகாப்தம் என்றே கூறலாம் ......  அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக!!!


முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 கவிதை

நூல் எடுத்து ஆடை நெய்ய சொன்ன அன்னையே
முகநூலில் உனக்குப் பண்டிகை அம்மா எங்கள் தாயே
முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தெரியவில்லை-உன்
முக்தியாலே ஓன்றுக்கூடினோமே!!!

ஐந்து வர்ண சேலையில்
ஐந்து நாட்கள் முகநூலில்
ஐக்கியம் ஆக வேண்டும் தாயே
எங்கள் குலத் தேவியே
இராமலிங்க சவுடேஸ்வரியே!!!

                             - நிதீஷ் செந்தூர்


நன்றி முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்