அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/9/13

திருமண வரன் பதிவு

நண்பர்களே !.

உங்கள் வேண்டுகோளுக்கினங்க இந்த பகுதி துவங்கப்பட்டுள்ளாது . முதன்மை இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது தேவாங்க சழூக மக்களுக்கான இலவச பகுதியாகும் ஆகையால் அனைவரும் பயன்படுத்தி பலன் பெறவும்.

அனைவருக்கும் தெரியபடுத்தவும் . உங்கள் ஆதரவு மட்டுமே இத்தளத்தை மேன்படுத்த உதவும். எனவே வரன் தேடும் உங்கள் உறவினர்களுக்கும் பதிவு செய்து உதவுங்கள்.


71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சீரியதவரு ;- கர்நாடகாவில் உள்ள சீரிய என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துண்டதவரு ;- துடுக்குத்தனம் நிறைந்தவர்.
புட்டாலதவரு ;- கர்நாடகாவில் உள்ள புட்டால பட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூஷணதவரு ;- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர்.
மைத்ரேயிதவரு ;- மைத்ரேய மகரிஷியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
முடுகிதவரு ;- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் செய்கின்றனர்.
குல்லுபத்திதவரு, பிரிணதவரு, புண்டகுத்திதவரு, ரத்காரதவரு.

சிம்மாசனங்கள் குருபீடங்கள்

தேவாங்கக்குலத்தில் சமயத்துறைக்கும் சில அமைப்புக்கள் உள்ளன. அவை சிம்மாசனங்கள் குருபீடங்கள் மடங்கள் முதலியனவாகும்.

சிம்மாசனாபதிகள் பட்டங்கள் செட்டிமைகள் வழங்குவார்கள்.

குருபீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள். மடத்து குருக்கள் இளைஞர்களுக்குத் தீட்சை செய்து பூணூல் அணிவித்து உபதேசம் செய்வார்கள். இவ்வாறுள்ள அமைப்புக்களில் சிம்மாசனங்கள் நான்காகும்.

இவை

1. சகரை

2. முதுநூரு

3. பெனுகொண்டா

4. படவேடு

என்னும் ஊர்களில் உள்ளன.

சகரை காசிக்கு அருகிலும் முதுநூரு கோதாவரிக்கு அருகிலும், பெனுகொண்டா அனந்தப்பூர் வட்டத்திலும், படவேடு வடாற்காடு வட்டத்திலும் இருக்கின்றன. இப்போது இச்சிம்மாசனபீடங்கள் அழிந்து போயின.

குருபீடங்கள்

1. காசி

2. ஸ்ரீ சைலம்

3. ஹேமகூடம்

4. சோணசலம்

5. சம்புசைலம்

என்னும் ஐந்து இடங்களில் இருந்தன. இவையும் சிதைந்து போயின. இதன் உரிமையாளர்கள் பல ஊர்களுக்குப் போய்விட்டனர்.

காசிமடம் : உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. இதை நிறுவியவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ரேவணாராத்யர் ஆவார். இம்மடம் இப்போது இல்லை.

ஸ்ரீசைலம்: ஸ்ரீசைலமடம் மல்லிகார்ச்சுன சுவாமி தேவஸ்தானத்துக்கு வடபால் உள்ளது. இம்மடத்தின் குருமார் மேற்கு கோதாவரி மேரி தாலூக்காவில் ஜக்கன்னா பேட்டையில் உள்ளனர். தேவாங்க மக்கள் சிவராத்திரியின் போது மல்லிகார்ச்சுன சுவாமி கோயிலில் கோபுரங்களுக்கு ஆடையை இணைத்துக் கொடி கட்டுகின்றனர்.

ஹேமகூடம்: இது பல்லாரி ஹொசப்பேட்டைக்கு 7 கல் தொலைவிலுள்ள பம்பா நதிக்கரையில் விருபாட்சசுவாமி கோயிலுக்குத் தெற்கே இருக்கின்றது. இம்மடத்தின் ருகுசந்ததியார் ஹொசப்பேட்டையில் உள்ளனர்.

சோணாசலமடம்: இது முன் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது படவேட்டில் இருக்கின்றது. இம்மடத்தைச் சார்ந்த குருவம்சத்தார் ஒண்ணுபுரத்தில் இருக்கின்றார்கள்.

சம்புசைலமடம்: இது கொள்ளேகாலத்துக்கு அருகில் உள்ள சம்புலிங்கன் பேட்டாவில் இருக்கின்றது. இதை நிறுவியவர் கஹனாராத்யர்.

இடைக்காடர்


குரு:போகர், கருவூரார்

காலம்:600 ஆண்டுகள், 18 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:திருவண்ணாமலை

இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையனதாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.