அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/24/13

53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம்

இவர் பிரம்மாவின் குமாரர். விஷ்ணுவின் அம்சம். யோகத்தில் ஆநந்தம் கொண்டவர். சநகருக்குச் சகோதரர். இக்கோத்ரத்தைச் சநாகரதேவ மகரிஷி கோத்ரம் எனவும் வழங்குகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பெள்ளுள்ளிதவரு :- உள்ளி - வெங்காயம். பெள்ளுள்ளி - வெள்ளை வெங்காயம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.

52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சன்னபுலியதவரு :- சிறுத்தைப் புலி பற்றி வந்த ஒரு பெயர். சிறுத்தைப் புலி வேட்டை ஆடி இருக்கலாம்.
வீரதவரு :- வீரதீர பராக்கிரமம் மிக்கவர்.
வீரணதவரு :- அம்மன் திருவிழாக்களில் வீர்முஷ்டிக வேடம் தரிப்பவர்.
அஸ்வவைத்யதவரு :-
தம்பூரதவரு :-
சங்சாவிளபிதவரு :-
நுன்னுதவரு :-

51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொடகியதவரு :- குடகுப் பகுதியில் வாழ்ந்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கரடியதவரு :- கெரடியதவரு என்பது மருவி உள்ளது. கெரடி - சிலம்பு விளையாட்டு. சிலம்பம் ஆடுவதில் வல்லவர். கெரடி வஸ்தாத் என்று இன்று அழைக்கின்றனர்.
ஹசபியதவரு :-

வியாக்ரமுகன் வீழ்ச்சி

மகேந்திர நகரை அடைந்த வச்சிரதந்தன் அரக்கர்களை ஒன்று கூட்டி மந்திராலோசனை செய்தான். அதில் வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன் 'கேவலம் ஒரு அற்ப மனிதனிடம் நாம் தோற்று ஓடி வருவதா ? இது மகா கேவலம். நானே போர் முகத்துக்குப் போய் தேவாங்கனுடன் போர் செய்து அவனை அழித்து வருகிறேன். விடை தாருங்கள்' என்று வீரம் பேசினான். அண்ணனும் அவனுக்கு ஆசி கூறிப் பெரும் படைகளுடன் போருக்கு அனுப்பினான். வியாக்ரமுகன் போர்முனைக்கு வந்து பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு தேவலரை எதிர்த்துக் கடுமையாக போரிட்டான். முடிவில் தேவாங்கரின் கணைகளால் தலை துண்டிக்கப்பட்டு வீழ்ந்திறந்தான். "ஒரு கணை யாற்குய வுலைய வாட்டி மற் றிரூ கணையாற்சிலை யிறுத்து வெம்பொறி தரு கனை யு'டைநிசா சரன்சி ரத்தையும் அரு கனை தாக்கனத் தகற்றி னானரோ" இதைக் கண்ட அரக்கர்கள் புலிமுகன் வீழ்ச்சியை வச்சிரதந்தனுக்குக் கூற மகேந்திரம் நோக்கி ஓடினர். வெற்றி வாகை சூடிய தேவல மன்னனும் இந்திரனும் பெருமகிழ்ச்சியோடு தம் தம் நகருக்கு ஏகினர்.

தேவலர் தேவதத்தை மணம்

திருக்கயிலையில் சிவபெருமான் தேவலருக்கு மணஞ்செய்து வைக்கத் திருவுளம் பற்றினார். ஏழு முனிவர்களை - சப்தரிஷிகள் கயிலைக்கு வந்து சேருமாறு திருவுளத்தே எண்ணினார். முனிவர்கள் எழுவரும் இறைவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்து திருக்கயிலையை அடைந்து சிவபெருமான் திருமுன் போய் அவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்றனர். வந்த முனிவர்களை நோக்கிச் சிவபெருமான் " முனிவர்களே! தேவாங்க முனிவருக்குச் சூரிய தேவனின் தங்கையை மணமுடிக்க வேண்டும். நீங்கள் சூரியதேவனிடம் சென்று மணவினைக்குரிய நன்னாளைக்கூறி, அவனது ஒப்புதலைப் பெற்று வாருங்கள்!" என்று பணித்தார். முனிவர்களும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சூரிய உலகம் சென்றனர். சூரியபகவானை அணுகி, வந்த காரியத்தைச் சொல்ல அவனும் தன் சம்மதத்தை மகிழ்ச்சியோடு அளித்தான். வைகாசித் திங்கள் பூர்வபட்சம் சத்தமி நாள் புதன் கிழமையன்று ஆறு நாழிகைக்கு மேல் முகூர்த்த நாளைக் குறித்தனர். இம்முடிவை முனிவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தம் தம் இடம் ஏகினர். சூரியன் தன் தங்கை தேவதத்தையின் திருமணத்தை பற்றிய செய்திகளை எல்லாம் தனது அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் சொல்லி, இம்மங்கல முடிவை ஆமோத நகரம் சென்று தேவாங்க மன்னனுக்கு அறிவித்து அவரை குறித்த மணநாளில் மணமுடிக்க உற்றார் உறவினருடன் சூரிய உலகம் வருமாறு கூறி, அழைப்பை விடுத்துத் திரும்பும்படி அனுப்பினான். அமைச்சன் மார்த்தாண்டனும் தேவாங்க மன்னனிடம் சென்று மணவினைபற்றிய முடிவுகளைச் சொல்லி குறித்த நாளில் சூரிய உலகம் வந்து சேருமாறு கூறி, விடை பெற்றுக்கொண்டு சூரிய உலகம் மீண்டான். சூரியனிடம் தான் ஆமோத நகரம் போய் வந்த விபரங்களைச் சொன்னான். உடனே சூரியன் மயனைக் கொண்டு இரத்தினங்களால் ஆன திருமண மண்டபத்தை அமைத்தான். முளைப்பாலிகைகள் தோற்றுவித்தான். நகரைத் தோரணங்களால் அழகுபடுத்தினான். வரும் விருந்தினர் தகுதிக்கேற்றவாறு தங்குவதற்கு வசதி மிக்க மாளிகைகளை நிர்மானித்தான். பின் சிவபெருமானுக்கும் திருமால் நான்முகனுக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதர்கள் மூலம் திருமண அழைப்பை அனுப்பினான். அழைப்பை ஏற்ற எல்லா தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் திருமணங் காண சூரிய உலகம் வந்து கூடினர். தேவாங்க மன்னனும் தனது திருமணத்துக்கு வருமாறு திருமண திருமுகத்தை உலக மன்னர்கள் யாவருக்கும் அனுப்பினார். அழைப்பை பெற்ற எல்லா மன்னர்களும் உரிய காலத்தில் அமைச்சர்கள் புடைசூழ ஆமோதநகரை வந்தடைந்தனர். அவர்களை எல்லாம் தேவாங்க மன்னன் தக்கவாறு வரவேற்று விருந்து முதலியன வைத்து உபசரித்து அமர்த்தினார். நல்லநேரத்தில் மன்னர்களும் நால்வகைப் படையினரும், விருதுகள் பலரும் ஏந்த, எக்காளம் துந்துபி பேரிகை முதலியன முழங்க, வாத்தியங்கள் ஒழிக்க அழகிய பெண்கள் ஆடல் பாடல் நிகழ்த்த தேர்மீது அமர்ந்து சூரியவுலகம் வந்தடைந்தார். சூரிய தேவன் மணமகனைத் தக்கவாறு வரவேற்று திருமணமண்டபத்துக்கு அழைத்துச் சென்றான். மணமகன் மணக்கோலம் பூண்டு மனையில் அமர்ந்தான். அழகில் தனக்கு நிகர் தானே என விளங்கிய தேவதத்தை இயற்கை அழகும் செயற்கை வனப்பும் பெற்று அன்னமென தேவமாதர்கள் புடைசூழ திருமணமண்டபம் வந்தடைந்தாள். மணமகன் அருகில் மனைமீது அமர்ந்தாள். பலவகை வாத்திய கீதங்கள் முழங்க, வேதகீதங்கள் ஒழிக்க தேவதத்தையின் கழுத்தில் தேவாங்க மன்னன் மங்கல நாண் சூட்டினார். அம்மை அப்பரும் சூழ்ந்திருந்த மற்ற தேவர்களும், முனிவர் முதலியோரும் மலர் தூவி வாழ்த்தி அருளினர். சூரிய பகவான் தாம்பூலத்தை எல்லோருக்கும் இரத்தினப் பேழைகளில் வைத்துக் கொடுத்தான். இந்நேரத்தில் தேவல மன்னன் தான் கொண்டு வந்திருந்த அழகான ஆடைகளை மூவருக்கும் அவர்கள் தேவிமார்களுக்கும், தேவர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆண் பெண் அனைவருக்கும் அவர்கள் மகிழுமாறு அளித்தார். அப்போது அங்கு வந்திருந்த பைரவக் கடவுளுக்கும் நல்லாடை ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து " எல்லோருக்கும் நல்ல நல்ல ஆடைகளைக் கொடுத்து விட்டு கடைசியில் மிஞ்சியிருந்த கழிசல் ஆடையை எனக்குக் கொடுத்தாயல்லவா ? இதோ இந்த ஆடையின் கதியைப் பார் " என்று சொல்லி அந்த ஆடையைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தார். அதற்குப் பிறகு நல்லதோர் ஆடையைத் தமக்கு அளிக்குமாறு கேட்டார். பைரவரின் தகாத செயலைக் கண்ட தேவலர் இன்னொரு ஆடையை அவருக்கு அளிக்க மறுத்தார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தமக்கு ஆடை கொடுக்க மறுக்கிறார் என்று கூறினார். பெருமான் தேவலரிடம் நடந்த செய்தியைக் கேட்டறிந்து பைரவரை நோக்கி, " தேவலர் அளித்த ஆடைகளை நாங்களெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்று உடுத்திப் போற்றினோம். நீயோ கொடுத்த ஆடையை மதிக்காது பெற்று கிழித்து எறிந்தனை. அதனால் இன்று முதல் நீ கிழிந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் இருக்கக் கடவை" என்று சபித்தார் சாபம் பெற்ற பைரவர் அங்கிருந்து நீங்கினார். திருமணம் நான்கு நாட்கள் நடைபெற்றன. வந்திருந்த யாவருக்கும் நான்கு நாட்களும் விருந்து உபசாரங்கள் நடைபெற்றன. நான்காவது நாள் திருமணத்துக்கு வந்திருந்த யாவரும், தேவலமன்னன் தம்பதிகளுக்கு ஆசி கூறி சூரிய தேவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் இருப்பிடம் சென்றனர். தேவலமன்னன், தானும் தன் மனைவியுமாக சில நாட்கள் அங்கு தங்கி இன்புற்றிருந்தார். அதன் பின் சூரியதேவன் அளித்த ஏராளமான சீர் வரிசைகளைப் பெற்றுக் கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மன்னர்களும் நால்வகைப் படைகளும் புடை சூழ்ந்து வர தேவதத்தையை அழைத்துக் கொண்டு சூரியதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நகர் அடைந்தார்.

விடைக் கொடி தந்த வெற்றி

தோற்றோடிய அரக்கர்கள் வியாக்ரமுகன் இறந்த செய்தியை வச்சிரதந்தனுக்குச் சொன்னார்கள். இதைக்கேட்ட அவன் மிகவும் துயருற்றான். பின் சினங்கொண்டு தேவாங்கனைக் கொள்வதாகச் சூளுரைத்து நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் தங்கியருந்த ஏமகூடம் என்னும் மலைச்சாரலுக்கு வந்தான். வச்சிரதந்தன் போருக்கு வந்திருப்பதை அறிந்த தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் போர்க்கோலம் பூண்டு தேவப் படைகளுடன் போர்க்களம் சேர்ந்தனர். பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி நீண்டநேரம் போர் நடந்தது. வச்சிரதந்தன் விட்ட ஒரு அரிய மந்திரப்படை தேவர்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவித்தது. இதைக்கண்ட தேவாங்க மன்னன் மந்திரப்படையை அழித்துப் போரை முடிவிக்குக் கொண்டு வர எண்ணினார். விடைக்கொடியை எடுத்தார். பூசை செய்து மந்திரபலத்தை ஊட்டி அதைப் பகைவர்கள் மீது ஏவினார். இப்படையிலிருந்து யானை சிங்கம் புலி கரடி பன்றி யாளி சரபம் பூதகணங்கள் முதலியன தோன்றி அரக்கர் படைகளைச் சின்னா பின்னப்படுத்தின. இந்த ஆயுதம் விளைவித்த பயங்கரமான சேதத்தை எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றலையும் கண்ட வச்சிரதந்தனும் அவன் துணைவர்களும் செய்வது அறியாது அஞ்சி நடுங்கிப் போர்க்களம் விட்டு ஓடோடி மகேந்திரம் அடைந்தனர். தோற்று ஓடிய வச்சிரதந்தன் போரில், விடைக்கொடியால், உடன் பிறந்தாரும் மைந்தரும் மருமக்களும் துணைவரும் இறந்ததை எண்ணி ஊணுறக்கமின்றி வருந்தினான். இறந்தவர்களின் மனைவியர்கள் நாணிழந்து துன்புற்று அழுத குரல் கேட்டு உள்ளம் உருகினான். எங்கும் துக்கம்; எங்கும் அழுகுரல், துக்கத்தை மாற்றிக் கொள்ளும் வகையறியாது துன்புற்றான். தனக்கேற்பட்ட துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழுது சிறிது ஆறுதல் பெறலாமென எண்ணினான். இவனுக்கு வித்தையுத்தேசன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். நேராக அவனிடம் போனான். தன் துன்பத்தை அவனிடம் சொன்னான். தேவாங்க மன்னனின் தீரத்தையும் போர்த்திறத்தையும் வல்லமையையும் அவனிடம் உள்ள விடைக்கொடியின் ஆற்றலையும் கூறி, ' தேவாங்கனிடம் விடைக்கொடி இருக்கு மட்டும் தேவாங்கனின் துணைபெற்றிருக்கும் தேவர்களை வெல்ல முடியாது. நீயோ பெரிய மாயாவி. பலவகையான வேடங்களைக் கொள்வதிலும் வல்லவன். நீ நினைத்தால் அந்த விடைக் கொடியைக் கவர்ந்து கொண்டு வந்துவிட முடியும். அவ்வாறு செய்வாய? தேவாங்கனிடமுள்ள விடைக்கொடியை கவர்ந்து கொண்டு வந்து விட்டால் தேவர்களை எளிதில் வென்று விடலாம் ' என்றான். இதைக் கேட்ட வித்தையுத்தேசன் அவ்வாறே செய்வதாக நண்பனுக்கு உறுதி கூறி வஞ்ச வேடம் பூண்டு ஆமோத நகருக்குச் சென்றான்.