அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/19/13

கோவில்வழி இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

கோவில்வழி  இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

ஹிரேமனெயவரு - இருமனேரு குல தெய்வம்

ஹிரேமனெயவரு - இருமனேரு குல தெய்வம்

49 .சதாநந்த மகரிஷி கோத்ரம்

பிரம்மதேவனின் பேரர். கௌதம மகரிஷிக்கும் அகலிகைக்கும் பிறந்தவர். இவர் மிகச்சிறந்த தவசி. இவர் தவம் செய்யுங்கால்; எங்கே இந்திர பதவி அடைந்து விடுவாரோ என்று பயந்த இந்திரன் இவர் தவத்தை கெடுக்க ஊர்வசியை அனுப்பினான்.

சதாநந்தரின் மகன் கிருபாச்சாரி, மகள் கிருபி, இக்கிருபியைத் துரோணாச்சாரியார் மணந்து கொண்டார். அஸ்வத்தாமன் என்னும் மகனைப் பெற்றனர் துரோணர் தம்பதிகள். பாரதப் போர் முடிந்த பின்னும் சாகாது இருந்தவர்களுள் கிருபாச்சாரி ஒருவர்.

இராமபிரான் மிதிலைக்குச் சென்ற போது விசுவாமித்திரர் புகழை இராமமூர்த்திக்கும்; ஜனகருக்கு இராமபிரான் புகழையும் கூறியவர் சதாநந்தர். ஜனக மன்னருடைய புரோகிதர் இச்சதாநந்தர். சீதாபிராட்டிக்கு இவர் குலகுரு ஆகிறார்.

சதாநந்தரின் இன்னொரு மகன் சத்தியத்திருதி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹிரேமனெயவரு - இருமனேரு :- பெரியவர்கள்; பெரியவீட்டுக்காரர்கள். புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்த பத்தாயிரம் குழுந்தைகளில் முதல் குழந்தைக்குச் சதாநந்தர் தீட்சை செய்து இருக்கலாம்.

செட்டிகாரரிடம் மரியாதைகள் பெறும்போது மற்ற கோத்ரத்தார் எழுந்து நின்று] மரியாதை பெறுகின்றனர். ஆனால் ஹிரேமனெயவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் சென்று மரியாதை கொடுக்கப்படும் சம்பிரதாயம் மேற்கண்ட கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

வங்குசப் பெயரினையும், சம்பிரதாயத்தையும் இணைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் முதல் குழந்தையின் வம்சாவழியினர் என்பது விளங்கும்.

ஹிரேமனெயவரு என்ற பெயர்தான் இருமனெயவரு என்று மாறியிருக்கின்றது.
அங்கடிதவரு :- அங்கடி - கடை; கடைகட்டி வியாபாரம் செய்தவர்.
அங்கப்பதவரு :- இவ்வங்குசத்தோர் மூத்த மகனுக்கு அங்கப்பன் என்றும், மகளுக்கு அங்கம்மா என்றும் பெயர் சூட்டுவர். அங்கப்பன் என்பவர் வம்சம்.
ஆரேதவரு :- ஆராக்கீரையைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
அம்பட்டிதவரு :- சித்தூர் மாவட்டம் மதபல்லி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர் அம்பட்டி. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அஸ்வபதிதவரு :- ஏராளமான குதிரைச் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டவர். இவ்வங்குசத்தினர் குதிரேனாரு என்ற பெயருடன் தொட்டுபெல்லாபுரத்தில் இன்றும் வாழ்கின்றனர்.
கடிகெலதவரு :- கடகம் என்னும் நகை அணிந்தவர்.
கணபதிதவரு :- விநாயக விரத கல்ப முறைப்படி விரதம் இருப்பவர்.
கோகர்ணதவரு :- கோகர்ண சேஷத்திரத்தைப் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோடம்தவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். தன் செயலாலும் சொல்லாலும் சிரிக்கச் செய்பவர்.
கோடூரிதவரு :- நெல்லூர் ஜில்லாவில் உள்ள கோடூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கௌரீஜனதவரு :- கௌரி தேவியைப் பூசித்து ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்றவர்.
தாராபுரதவரு :- தாராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துர்க்கதவரு :- துர்க்கம் - மலை; மலையைச் சார்ந்து வாழ்ந்தவர். பெட்டதாரு என்று கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது.
கொணபர்த்திதவரு :- சித்தூர் ஜில்லாவில் உள்ள கொணாபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொம்மனதவரு :- பொம்மண்ண சுவாமியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
ராகதவரு :- அம்மன் திருவிழாவில் எடுக்கும் ஜோதிக்கு ராகதீபம் என்று பெயர்.

ராகம் - பிரீதி, ஆசை என்பது பொருள். ஆசையுடன் விரும்பி ஜோதி எடுப்பவர் என்று பொருள்.

நம் குலத்தின் ஆதிபுருஷர் தேவலர். அவர் ஜோதிஸ்வரூபமாக அவதாரம் செய்தார். அதனை எண்ணிப் பார்க்கும் வகையிலும் தேவலப் பரப்பிரம்மத்தினின்றும் சௌடேஸ்வரி என்னும் சிற்ஜோதி பிறந்தது என்று வேதங்கள் முழங்குவதையும் கருத்திற்கொண்டு ஜோதி எடுத்து வழிபடுகிறோம்.

ஹிரேமனெயவரு :- சக்தி

அந்தலதவரு :- எந்தேலாரு - சாமுண்டி

லத்திகார்ரு :- லதாலதவரு - ஜோதி

கப்பேலாரு :- குண்டம்

என சேலம் நகரில் தற்போது நடைமுறை இருந்து வருகின்றது.

ஆனால் ஹிரேமனெயவரு ஜோதி எடுப்பவர்என வங்குசம் வருகின்றது.

ஐந்து கத்திகை மனைகாரர்களில் யார் வேண்டுமானாலும் சக்தி அழைக்கலாம். சாமுண்டி அழைக்கலாம். ஜோதி எடுக்கலாம், குண்டம் மிதிக்கலாம் என்று புலப்படுகிறது.

இவற்றைக் கவனிக்கும் போது கத்திமனைக்காரர்கள் இன்னின்னார் இன்னின்னவற்றைத்தான் அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லையென்று தெரிகின்றது.
உங்குதவரு :- உங்குகிண்ணம் - குழந்தைக்குப் பால் ஊற்றும் கிண்ணம். இவ்வங்குசத்தார் குழந்தைகட்குப் பால் வழங்கும் தருமம் செய்தவர்கள்.
ஹிமத்கேதாரதவரு :- இமயமலையில் உள்ள கேதாரநாத் என்னும் தலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொட்டமனெயவரு :- பெரிய வீட்டுக்காரர். ஹிரேமனெயவரு என்பதுவும் இதுவும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு பெயர்கள்.
பாணிலாறு : - பாணதவரு :- 32 விதமான விருதுகளில் பாணம் ஒன்று.
கர்னாதவரு :- கோகர்ணதவரு என்ற வந்குசம்தான் கர்னாதவரு என்று வழங்கப்பட்டிருக்கிறது.
பதகதவரு :- மன்னர்களிடம் பரிசுப் பதக்கங்கள் பெற்றவர். பதக்கம்என்பது பதகம் என மருவி வந்துள்ளது.
பன்தெனதவரு, பாகடிதவரு, பிடிதவரு, மாடலிதவரு, வாபட்ணதவரு, ஜன்தினதவரு, ஜாதினதவரு, ஜீவகட்டுதவரு, பீரணெயவரு, மாமனியதவரு, சுருகியவரு, சூரிமெயதவரு, அங்கபந்துனிதவரு, இங்குதவரு, கோரஸதவரு, கோரண்டதவரு, கோரேதவரு, தேவசதவரு, பட்டுதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


37 .குடும்ப மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்லுரிதவரு :- ஆந்திரமாநிலம் சித்தூருக்கு அருகில் கல்லூர் என்னும் ஊர் உள்ளது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்

36 .குச மகரிஷி கோத்ரம்

குசத்துடன் எப்போதும் காணப்பட்ட ஒரு முனிவர். குசம் = தர்ப்பை. இம்முனிவர் ஓயாது வைதீகக் கிரியைகள் செய்வார். யாகங்கள் செய்வதில் வல்லவர். இம்முனிவர் பிரம்மாவின் புத்திரர். குசநாபனுக்கு ஆண் பிள்ளை பிறக்க வரம் தந்தவர். உடலுடன் சுவர்க்கம் அடைந்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோணங்கிதவரு :- நடிப்பாலும், பேச்சாலும் சிரிக்க வைப்பவர்.
கொம்மனதவரு :-

35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாகேனபள்ளியதவரு :- பெங்களூர் அருகில் பாகேனபள்ளி என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்மச்சினதவரு :-
மட்டியதவரு :-