அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/25/13

மாஹாபாரதம் (எளிய தமிழில்)

நண்பர்களுக்கு வணக்கம் , நமது தேவாங்க புராணம் முடிந்தபிறகு புராண /இதிகாச கதைகள் நமது வலைபூவில் வரவில்லை . ஆகையால் புதிய தொடராக நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாஹாபாரதம் நம் பிளக்கில் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் வெளிவர உள்ளது .தங்கள் ஆதரவை எப்போதும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் கருத்துக்கள் / ஆலோசனைகளை எதிர்பார்கிறோம்.

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

ஶ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் துணை .

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா.

தேவாங்கர் குல மக்களுக்கு வணக்கம்.
நாங்கள் நம் தேவாங்கர் குல அன்னை ஶ்ரீசெளடேஸ்வரி அம்மனை அனைவரும் வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று நினைத்து அதை பற்றி பேஸ் புக் மூலம் சர்வே எடுத்தோம். பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தீர்கள். அதை பற்றி நம் குல முக்கியஸ்தர்களிடம் கேட்கலாம் என்று முகவரி கேட்டிருந்தோம். அனைவரும் அளித்தீர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று பெரியோர்களிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலை தங்களுக்கு தருகிறோம்.

தற்போது ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறான நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
உதாரணமாக‌-  
                                                                                                                                                                             A மற்றும், B  என்பதை.இரு பகுதி மக்களாக எடுத்து கொண்டால்


               A 
                  B  
1
ஶ்ரீசெளடம்மன் வழிபாடு [அம்மனை ஏதோ ஒரு ரூபத்தில்]
வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்
வீட்டில் வைத்து கும்பிடுவது இல்லை
2
கோவிலில் பிரசாதமாக அணிய கொடுப்பது
பண்டாரம் என்கிற மஞ்சள் கலவை
திருநீறு, குங்குமம், சந்தனம்
3
ஜனிமாரா என்ற பூணூல்
வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் நோன்பு வைத்து போடுகிறார்கள்
பூணூல் போடுகிறார்கள் நோன்பு வைத்து போடும் பழக்கம் இல்லை
4
கோவில் அப்ப என்று சொல்லக்கூடிய வருட திருவிழா [சில இடங்களில் நவராத்ரி விழா]
சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி கொண்டு வருதல், மஞ்சள் மெரமனை, வீரமுட்டி வேஷம்
அப்ப என்ற வார்த்தையே தெரியாது. விழா என்பார்கள். கரகம் கொண்டு வருதல், முளைப்பாரி, ரதி சேர்த்தல் [அரிசிமாவு+ வெல்லம் சேர்த்தல்], அம்மன் வீதி உலா
5
கத்தி போடுதல்
சிரிய கத்தி போட்டு கொண்டு சலங்கை கட்டிக் கொண்டு வித,விதமாக நாட்டியம் போல் செய்கிறார்கள்
பெரிய கத்தி போடுகிறார்கள். இரத்தம் வழிய ஆக்ரோஷமாக போடுகிறார்கள். பத்தேவு என்கிற- வாளை வீசிக் கொண்டே அம்மன் கதை+ மக்களுக்கான வேண்டுதல்கள் சொல்கிறார்கள்
6
சக்தி நிலை நிறுத்துதல் [மண் சட்டியின் மேல் விழிம்பில் ஜம்முதாடு கத்தியை நிறுத்துவது]
இந்த வழக்கம் இல்லை
10 திலிருந்து 20 வருடத்திற்கு ஒரு முறை நிறுத்துகிறார்கள்
7
கத்தேவு பெட்டி [திரு நீறுபை, ஜம்முதாடு கத்தி என்ற சக்தியை வைத்திருப்பது]

இந்த முறை இல்லை
இதை முக்கியமாக கருதுகிறார்கள்
8
திருமணம்-- தாலி கட்டுவது
மணமகனின் வலது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
மணமகனின் இடது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
9
இறந்தவர்களுக்கு செய்யும் திவசம்
மூன்று படையல் வைத்து அரிசியை வைத்து முறை செய்கிறார்கள்
ஒரு படையல் மட்டும் வைத்து கும்பிடுகிறார்கள்

இன்னும் மற்ற பல சடங்கு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும், கன்னடம் பேச்சு வழக்கும் அந்த, அந்த ஏரியா மக்களின் பழக்க வழகங்களோடு கலந்து இருப்பதால், இவற்றை யெல்லாம் மாற்றி ஒருமுக படுத்துவது சிரமம். ஆகவே அவரவர்கள் பிறந்ததிலிருந்தே இரத்திலேயே ஊறி போன பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது. தேவாங்க மக்கள் அந்த,அந்த ஏரியா வழக்கப்படி நடந்து கொள்ளட்டும். யாரும், யாருடையதையும் குறைத்து மதிப்பிடாமல் அனைவருடையதையும் மதித்து நடந்து கொள்வோம். இதை செய்தாலே போதும். நம் குலம் ஒற்றுமையுடன் இருக்கும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

                                   அன்புடன்
                                   S.V. ராஜ ரத்தினம்.
                                   ர. பார்த்திபன்

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு

  

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு 


நண்பர்களுக்கு வணக்கம், புரட்டாசியில் மட்டும் ஏன் பெருமாளுக்கு சிறப்பு. பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனின் வீரியத்தில் இருந்து மறைகிற காலம். புரட்டாசியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தை மாதம் மகர ராசியில் சஞ்சரிகிறவரை 4 மாதங்கள் பூமி சூரியனின் தென் கோட்டு பகுதியில் பயணிக்கிற காலம். தென் மேற்கு பருவ மழை முடிஞ்சு ஆடி காற்றை கடந்து அடை மழை பருவ காலத்தில் பூமி நுழைகிற மாதம் புரட்டாசி .அக்காலத்தில் மக்கள் ஆடியில் விதைத்து விட்டு மழைக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிற பருவமும் கூட.
இந்த பிரபஞ்ச பருவ நிலை மாற்றம் பூமியில் மனித உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.பூமியின் ஜீவராசிகளின் இனபெருக்கத்திற்கான காலம்.மந்த மாருதம் என்று சொல்லுகிற ஊத காற்று வீசுகிற காலம்.
சரி இதற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம். இதற்க்கு முன் ஒரு கேள்வி. ஏன் மற்ற தெய்வங்களை புரட்டாசிற்க்கு சொல்ல வில்லை? குறிப்பாக சிவ வழிபாட்டை ஏன் கூறவில்லை? ஏன் பெருமாளை மட்டும்
வழிபட சொன்னார்கள்.ஏனென்றால் ஈஸ்வர சக்தி குருதன்மை முக்தி,சந்நியாசி குணம்.பெருமாள் சுக்கிர தன்மை கல்யாண குணம் சம்சாரம்.களத்திரம்.இந்த இரண்டு கோவிலுக்கும் செல்கிறவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டை உணர்ந்து இருப்பார்கள்.ஈஸ்வர கோவிலில் ஒரு அமைதியையும் பெருமாள் கோவிலில் ஒரு உற்சாக உணர்வையும் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த இனபெருக்க பருவத்தில் பெருமாள்கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன் படுத்துகிற பச்சை கற்பூரம்,சந்தனம்,சம்பங்கி பூ,துளசி தீர்த்தம்.போன்றவை உதவும்.இது நம்முள் சுக்கிர தன்மையை தூண்டியும் சமன்படுத்தவும்(neutralizer ) செய்யும். மனதும் தெய்வீக தன்மையோடு இருக்கும்.இந்த பருவத்தில் உருவாகிற வாரிசுகள் நிலைதன்மைஉடனும்,புத்தி சாலிகளாகவும், தெய்வ பக்தி உடையவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் உடம்பில் அசுர தன்மையை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் சம்சார வாழ்வில் ஈடுபட்டு நல் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் புரடசியில் பெருமாள் வழிபாடு.
மேலும் அடைமழை காலம் தொடங்குவதால் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகிற தொற்று நோய் கிருமிகள் உருவாகி நம் உடம்பை தாக்கும்.(சளி காய்ச்சல் போன்றவை ) இதிலிருந்து காக்கவும் பெருமாள் கோவில் பச்சை கற்பூரமும் துளசியும், நாம் இருக்கிற விரதமும் மனதையும் உடம்பையும் தகுடு போல வைக்க உதவும். ஐயப்பன் விரதம் இருப்பவர்களுக்கு தெரியும் 48 நாள் விரதம் உடம்பை எந்த அளவுக்கு சீராக்கும் என்று.அடை மழை காலம் என்பதால் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் எளிதில் ஜீரணமாககூடிய சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சிறிது நேரம் தங்கி இருந்து அச்சக்தியை புரடசியில் பெற்று வாருங்கள்.வயதில் இருப்பவர்கள் நல்ல வாரிசுகளை பெறுங்கள் வயது கடந்தவர்கள் நல்ல தேக ஆரோகியத்தை பெறுங்கள்.

127 .பிப்பல மகரிஷி கோத்ரம்

வேதாந்த விசாரங்களில் கருத்துன்றியிருந்த ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாத்வீகதவரு :- சாந்தகுணம் கொண்டவர். 
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். சிந்தனையாளர். 
மனோமதம்தவரு :- மனத்திண்மை மிக்கவர். 
மாளகொண்டதவரு :- மாள என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
ரவலதவரு :- ரவ - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகம் செய்தவர். 
ராவுலதவரு :- நாரதர் போல நன்மையில் முடியும் கலகங்களைச் செய்பவர். கலகப்பிரியர். 
கணேவட்டாரதவரு :- கணேவட்டாரம் என்னும் ஊர்க்காரர். 
கல்லுகோட்டைதவரு :- கல்லுகோட்டை என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கற்கோட்டை கட்டி வாழ்ந்தவராக இருக்கலாம். 
மனெமன்மதவரு, மன்னேதவரு, மன்னேமந்தம்தவரு, மோகட்டியதவரு, பந்துமாத்திதவரு, பந்துமொத்ததவரு.