அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/7/14

சாவக்கட்டுபாளையம் கும்பாபிஷேகம் மற்றும் தொட்டு அப்ப (பெருவிழா) 2014

சாவக்கட்டுபாளையம் கும்பாபிஷேகம் மற்றும் தொட்டு அப்ப (பெருவிழா)
புகைப்பட தொகுப்பு .
.

நன்றி கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழு , மற்றும் பெருவிழா கமிட்டியார் சாவக்கட்டுபாளையம்.

மஹா கும்பாபிஷேகம்




தொட்டு அப்ப  பெருவிழா

அம்மன் கொலு மேடை

 பண்டாரம் தயாரித்தல்





அச்சு வெல்ல கோட்டையும், அழகு கரும்பு பந்தல் அமைத்தல்










 ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல்

பெருவிழாவிற்கு சௌடேஸ்வரி அம்மனை வரும்படி அழைப்பு விடுக்க பெருவிழா செட்டிகாரர் தன் முதுகில் பண்டாரம் கட்டி வந்து அம்மனுக்கு அச்சாரம் கொடுத்து கூப்பிடும் சடங்கு .........










 சக்தி அழைப்புக்கு பயணம் சொல்லுதல்

 


ஸ்ரீ சக்தி அழைப்பு

 
முக்கிய நிகழ்வான ஸ்ரீ சக்தி அழைப்பு மூங்கில் பேளையில் அம்மனை அமர்த்தி கையில் வீரகுமாரர் ஏந்தி வர .. காவலுக்கு வீரமுட்டி .... பக்தியுடன்  கத்தி போடும் வீரகுமாரர்கள்...










ஸ்ரீ சாமுண்டி அழைப்பு

அன்னையை சாமுண்டியாக  அலங்கரித்து குதிரை மீது வைத்து ... அலகுசேவை செய்து கொலுமண்டபம் அடைதல்..









   
திருமஞ்சனம் மற்றும் பானக மெரவணை




ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு

மஹா ஜோதி திரு விழாவில் மூன்றாவது

நிகழ்சியாக நாம் மஹா ஜோதி எடுகின்றோம்.

1)உருவம் 2)அரு உருவம் 3)அருவம் என்ற மூன்று நிலைகளை அன்னை கொண்டு உள்ளாள் .சிவ லிங்கம் அரு உருவமானது .உருவம் என்றும் சொல்லலாம் .உருவம் இல்லை ... என்றும் சொல்லலாம் .அதனால் அ ந்த நிலையை சாஸ்திரங்கள் அரு உருவம் எ ன்னுகின்றன் . மஹா ஜோதி அது போல் அரு உருவமானது .


















ஸ்ரீ குண்டம் சக்தி அழைப்பு

அசுர சம்ஹாரம் முடித்த அன்னை பாவங்கள் தீர அக்னி குண்டம் வளர்த்து அதில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது. அதை நினைவு கூறும் வகையிலும் நாமும் நம் பாவங்களைகளைய  மஹா குண்டம் வளர்த்து அதில் இறங்குகின்றோம்.










சாவக்கட்டுபாளையத்தில் தொட்டு அப்ப (பெருவிழா) சிறப்பாக நடைபெற்றது ... திருவிழா ஏற்பட்டு குழுவினருக்கும்... சிறந்த முறையில் கொங்கு மண்ணில் இதுபோன்ற பெருவிழா கண்டதில்லை என்று காண்போர் வியக்கும் வண்ணம் நடத்திகொடுத்த கருங்கல்பட்டி வீரகுமாரர்கள், சேலம் புலவர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், மணிகண்ட சாஸ்த்ரிகள் அவர்களுக்கும், குண்டம் நடத்திய கொமாரபாளையம் வீரகுமாரர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்...... 

உங்கள் சேவை  என்றும் தொடர அம்மன் அருளட்டும்  !!!



புகைப்படங்களை அனுப்பிவைத்த செல்வன் . லோகேஷ் , கருங்கல்பட்டி , அவர்களுக்கும் நன்றிகள்.