அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/10/13

72 .சிருக்க மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி சிருங்கி மகரிஷியாக இருக்க வேண்டும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு ;- உறுதியான தன்மை கொண்டவர்.
மாவந்திதவரு :-

கமலமுனி


குரு:போகர், கருவூரார்

காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:ஆரூர்

இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

படவேடு சிம்மாசனம்

சோணாசலமடம் முன்னர் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது இது படவேடு என்னும் ஊரில் இருக்கின்றது. இது கலியுகாதி 4609 பிரபவ ஆண்டில் பண்டிதாராத்ய சுவாமிகள் வழி வந்த ருத்ரமூர்த்தி சுவாமிகளால் நிறுவப்பட்டது. இப்பரம்பரையினர் இப்போது படவேட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒண்ணுபுரத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வரதந்து மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.


பண்டிதாராத்யரின் தாயார் பொப்பாதேவி பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர். அங்கு நிகழ்ந்த போரின் காரணமாய் கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு வந்தடைந்தார். உரியகாலத்தில் மகவை ஈன்றார். இக்குழந்தையே பண்டிதாராத்ய சுவாமிகள் ஆவார். இவர் வேதாகம சாத்திரங்களைக்கற்று குருநாதராய்த் திகழ்ந்தார். பலர்க்கும் பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து பெரும்புகழோடு இருந்தார். இவருடைய பெருமையை அறிந்த அந்நாட்டு மன்னர் வள்ளாள மகாராஜன் இவரை அடைந்து இவரிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார் என்றால் இவர் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமா?

இவரிடம் வாதுக்குவந்த சமயவாதிகள் பலர் வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராயினர்.

ஒருசமயம் சில மறையவர்கள் இவரிடம் வந்து ' தீட்சை அளிக்கும் பேறு உமக்கேது? ' என்று வாது செய்தனர். அப்போது சுவாமிகள், தேவலரின் மரபில் வந்த எமக்கன்றி மற்றையோர்க்கு இயல்பன்று என்றார். அதற்கு அம்மறையவர்கள் ' நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள். நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள். மற்றவர்களுக்கு அத்தகுதி இல்லை; என்றனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இருக்கவில்லையே! நாங்களோ, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவல முனிவரின் நேர்வழி வந்தவர்களாயுள்ளோம். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம். எங்கள் மூதாதை தேவலமுனிவர்தான் முதல் முதல் பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார். அவர் தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் வழி வந்த நானும் செய்கிறேன். ஆகையால் உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை உண்டு. என்று கூறி அவர்களைத் தெருட்டினார். அவர்களும் தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர்.

சுவாமிகளுக்குப் பின் அவருடைய பரம்பரையினர் குருபீடம் வகித்துச் சைவநெறியைப் போற்றி வந்தனர்.

அந்நாட்களில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் போர் நடந்தது. அப்போர் திருவண்ணாமலையிலும் நிகழ்ந்தது. போர் வீரர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

தேவாங்க புராணம் முற்றிற்று.