அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/27/13

அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்


அம்மன் படங்கள்



58 .சர்வ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சக்ராலதவரு :- உடம்பில் சங்கசக்ர தரிப்பவர். இவர்களின் சமாதியிலும் சக்கர ஸ்தாபனம் செய்யப்படும்.

புட்பதந்தன் அவதாரம்

கனகமாபுரியை சுருதிகீர்த்தி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவனைச் சோரன் என்னும் அசுரன் பெரிதும் துன்புறுத்தி வந்தான். இவனை வெல்ல இயலாமல் இவனது துன்பப்பிடியினின்றும் மீளக் கருதிக் கயிலை நாதனை நோக்கித் தவங்கிடந்தான். தவத்துக்கிரங்கி சிவபெருமான் மன்னன்முன் தோன்றி அசுரனை வெல்லும் மகன் ஒருவனை அளிப்பதாக வரமருளி மறைந்தருளினார். அதன்படி இறைவன், கமலாட்சனை, மன்னனுக்கு மகனாகப் பிறந்து சோரன் என்னும் அசுரனை அழிக்குமாறு பணித்தார். கமலாட்சனும் இறைவன் ஆணைப்படி சுருதிகீர்த்திக்கு மகனாக அவதரித்தார். இந்தப் பிறப்பில் புட்பதந்தன் என்னும் பெயரும் பெற்றார். சிந்து மன்னனின் மகளாகப் பிறந்திருந்த தேவதத்தையை மணந்தார். ஒருநாள் மன்னன், தன்மகன் புட்பதந்தனை அழைத்து சோரன் என்னும் அசுரனை அழித்து வருமாறு பணித்தார். புட்பதந்தனும் அசுரன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவனுடன் பெரும் போர் செய்து அவனை அழித்து மீண்டான். சின்னாள் கழித்து மன்னன் தன் மகன் புட்பதந்தனுக்கு ஆட்சியை நல்கித் தானும் தன்மனைவியுமாக தவமேற்கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆட்சி பீடமேறிய புட்பதந்தன் செங்கோன் முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிவபக்தனாகவும் திகழ்ந்தான். கோயில் வழிபாடும் அர்ச்சனையின் சிறப்பையும் நன்கு உணர்ந்த புட்பதந்தன் தன் நாட்டில் நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என்னும் கருத்தால் திருக்கோயில்களை கட்டினான். நந்தவனங்களை வைத்தான். தானே பூப்பறித்துக் கொண்டு வந்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து பக்திப் பயிரை வளர்த்தான். இவ்வாறு புட்பதந்தன் அறநெறிப்படி நல்லாட்சியையும் சிவநெறியையும் போற்றி நாட்டைப் புரந்து வரும் போது சிவராத்திரி விழா வந்தது. இவ்வாறு சைவர்களுக்கெல்லாம் ஏற்றதும் முதன்மையானதுமான சிவராத்திரி விரதத்தை ஆகம விதிப்படி முறையாக ஏற்று புட்பதந்தன் சிவ வழிபாடு செய்து வந்தான். புட்பதந்தனின் பூசனையை மகிழ்ந்து ஏற்றுச் சிவபெருமான் அம்மையுடன் இடபவாகனத்தில் தோன்றி, அவன் விரும்பியவாறு, அவர்கள் நாள்தோறும் கயிலைசென்று தம்மை தரிசனம் செய்யும் வரத்தை அளித்து மறைந்தார்.