அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/24/13

அம்மன் படங்கள்


126 .பிகி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தும்மிதவரு :- தும்பைப் பூவால் சிவபிரானை வழிபடுபவர்.

125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம்

இரண்டு முகங்களும், நான்கு கைகளும் கொண்ட ஒரு மகரிஷி. இரண்டு கைகளால் சர்வநமஸ்காரம் செய்து கொண்டும். இரண்டு கைகளில் இரண்டு தாமரை மலர்களைப் பிடித்துக் கொண்டும் காட்சி தருவார். நீலரத்தின ஆபரணங்களையும், சிகப்பு வஸ்திரங்களையும் அணிந்து செந்நிறமாக இருப்பார். 

பயிலவ மகரிஷியிடம் ரிக்வேதம் ஓதியவராகவும் கூறப்படுகின்றார். 

பாஸ்கரன் - சூரியன்; எனவே சூரியனின் பெயரைத் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கிதவரு :- அங்கிகள் தயாரிப்பவர்; அணிபவர். 
கச்சதவரு :- பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு வாழ்பவர். 
கந்ததவரு :- சந்தனம் அரைத்து ஆலயங்களுக்குத் தருவதைத் தொண்டாகக் கொண்டவர். 
காசிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
குட்டதவரு :- சிறு குன்றுகளில் வசித்தவர். 
கோரகதவரு :- கோரகம் என்னும் ஊர்க்காரர். 
கோரண்டிதவரு :- மைசூரில் உள்ள கோரண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சிந்தகிஞ்சலதவரு :- புளியங்கொட்டை பற்றி வந்தவொரு பெயர். 
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். 
தாசரிதவரு :- திருமால் அடியார்களான தாசர்களைப் பூசிப்பவர். இவர்கள் தாமும் தாசர்களாக விளங்குபவர்கள். 
நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர். 
புனுகுதவரு :- வாசனைத் திரவியங்களுள் புனுகும் ஒன்று. இவர்கள் யாகாதி புனித காரியங்களுக்குப் புனுகு வழங்குவதைத் தொண்டாகக் கொண்டவர்கள். 
போடாதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
முத்ரம்தவரு :- சங்கு, சக்கர முத்திரை தரித்துக் கொண்டவர். 
வார்த்தாதவரு :- அழகாக வார்த்தையாட வல்லவர். 
ஜாலததவரு :- மாயா ஜாலங்கள் கற்றவர். 
ஸ்ருங்கிதவரு :- கலைக்கோட்டு முனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை வழிபடுபவர். 
ஹாஸ்யதவரு :- நகைச்சுவையாகப் பேச வல்லவர். 
பவளதவரு :- பவளம் அணிவதில் விருப்பம் உள்ளவர். பவள வியாபாரம் செய்தவர். 
பாளதவரு :- தென்னம்பாளையை வழிபாட்டில் பயன்படுத்தியவர். 
கணிதவரு :- கணித சாஸ்திரத்தில் வல்லவர். 
குசுமசித்துலதவரு, கும்மனதவரு, சிச்சுதவரு, கரசத்துதவரு, கரவத்துதவரு, பசரிதவரு, பயள்ளதவரு, பஹரதவரு, போதாதவரு, முப்பனதவரு, முள்ளுதவரு, ரபம்தவரு, ரப்பம்தவரு.