அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/26/14

160 .முத்கல மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி கண்வமகரிஷியின் குமாரர். முத்கல மகரிஷியின் ஆசிரமம் கோமதி நதி தீரத்தில் உள்ள கோவிதாரவனம் என்பது. இரவா் கைரவணி நதிக்கரையில் தவம் செய்கையில் அங்கிருந்த மீன்களைத் தவத்திற்குத் தொல்லை தராது வேறு இடம் செல்க! என ஆணையிட்டார். அது முதல் அத்தீர்த்ததில் மீன்கள் கிடையா. 
மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி மருத்துவதி என்ற கன்னியை மணந்து கொண்டார். இம்மருத்துவதி முத்கல மகரிஷியின் மகள் ஆவாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அயிலாதவரு :- பெண் குழந்தைகளை எடுத்து வளர்த்தவர்கள். 
கோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் வாழ்ந்தவர். 
கௌளிதவரு :- கௌளி சாஸ்திர வல்லவர்கள். 
சப்தகவியவரு :- ஏழு விதமாகக் கவிபாடும் வன்மை பெற்றவர். 
சித்திதவரு :- தெய்வ அருட் சித்தி பெற்றவர். 
சிந்தாமணியவரு :- கர்நாடகத்தில் உள்ள சிந்தாமணி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சேலம் மாவட்டத்தில் சிந்தாமணியூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்கும் தேவாங்கர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சிந்திப்பதையெல்லாம் தரக்கூடிய தெய்வீகமணி சிந்தாமணி. ஏழைகள் சிந்திப்பதையெல்லாம் தந்து தர்மம் செய்தால் சிந்தாமணியவரு என்ற பெயர் ஏற்பட்டது. 
சீதாபக்திதவரு :- ஸ்ரீ சீதா தேவியிடம் பக்தி கொண்டவர்கள். 
மாசௌகதவரு :- சௌகர்யத்துடன் வாழ்பவர். 
கோமுகதவரு :- பசுவின் முகம் போன்று அமைந்த கமண்டலத்தில் தீர்த்தம் எடுத்து அதனால் சிவார்ச்சனை அபிஷேகம் முதலிய செய்பவர். 
பாள்யம்தவரு :- பாளையங்களில் வசித்தவர்கள். ஆங்கிலேயர் இந்திய நாட்டில் காலுன்றும் போது இங்குப் பல பாளையங்கள் இருந்தன. இவ்வாங்குசத்தினர் பாளையக்காரர்களாக இருந்திருக்கலாம். 
பிருதுவிதவரு :- பிருதிவியான பூமியை வழிபடுபவர்கள். 
மகததவரு :- மகத நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
ஜீடாதவரு :- ஜீடா-சேராங்கொட்டை, சேராங்கொட்டையைக் கொண்டு பலவிதமான வைத்தியங்கள் செய்தவர். 
அயள்ளதவரு, அயினதவரு, அவினதவரு, அவெலதவரு, அன்னிலதவரு, கொக்கேலாரு, சிப்பிதவரு, நொதாதவரு, புதுவிதவரு, பெரிநாயனதவரு, பெரிநாயினிலிலாவரு, பேரம்தவரு, ப்ரகடிதிவரு, ரப்பிதவரு, ரப்பிகதவரு, ரெப்பிதவரு, ரோப்பிதவரு, வெலிநாயனதவரு, ஜிட்டாதவரு, ஜெஜூமடதவரு, அப்பிலதவரு, அன்னேலாரு.