அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/19/13

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்

மகர ராசிக்கு 12-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9-ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் 2014-ஆம் வருடம் பிறக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பர அத்தியாவசியப் பொருட்கள் வாங்கலாம். ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.ஸி., டைனிங் டேபிள் போன்ற ஆடம்பர அத்தியாவசியப் பொருட்கள் சேரும். சில பொருட்களை ரொக்கம் கொடுத்து வாங்கலாம். சில பொருட்களை தவணை அடிப்படையில் வாங்கலாம். வருடத் தொடக்கத்திலிருந்து ஜூன்வரை 3, 12-க்குடைய குரு 6-ல் மறைகிறார். அதனால் கடன்வாங்கும் கட்டாயம் ஏற்படும். இப்படி தவணை அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதே கடன்தானே!

இப்படிக் கடன் வாங்காவிட்டால், வைத்தியச் செலவு மாறிமாறி வந்துகொண்டிருக்கும். சிலருக்கு விபத்தினால் கால் எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என்று ஏற்பட்டு, முழு குணமாகாமல் அவஸ்தையாக இருக்கும். சிலர் "டூவிலர்" தவணைக் கடன் மூலமாக வாங்கலாம். 10-ல் சனியும் ராகுவும் நிற்க குரு பார்ப்பதால், உடல்நலக் குறைவால் கிட்டத்தட்ட 18 மாதகாலமாக தொழில், வருமானத்தைக் கவனிக்கமுடியாமல் போயிற்று. கடனை வாங்கியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வைத்தியச் செலவையும் சந்திக்க வைக்கிறது. இந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட கடன்களையெல்லாம் எப்படி அடைக்கப்போகிறோம் என்று நினைத்தாலே பெருங்கவலை வந்துவிடும். ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். யாருக்கும் மனதார எந்தக் கெடுதலும்  நினைக்காத உங்கள் நல்ல மனதுக்கு எந்தக் கெடுதலும் வராது. 7-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதோடு 10-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார்.

எனவே தொழில், வருமானம், வேலை, சம்பாத்தியம், வெளிநாட்டு யோகம் ஆகிய பலன் நடக்கும். தொழிலும் வருமானமும் "ரெகுலராக' இருந்தாலே மற்ற எல்லாப் பிரச்சினையும் சமாளித்துவிடலாம் அல்லவா?

மகர ராசிக்கு ஆங்கில வருடப்பிறப்பு 9-ஆவது கன்னி லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். வருட லக்னாதிபதி புதனை வருட ராசிநாதன் குரு பார்க்கிறார். அதனாலும் உங்கள் பெருமை, திறமை, செல்வாக்கு போன்றவற்றுக்கு குறைவில்லை. மேலும் மகர ராசிநாதன் சனியை குரு பார்க்கிறார். ஆகவே தொழிலும் வாழ்க்கையும் தொய்வில்லாமல் செயல்படும். 10-ல் ராகு இருப்பதால், சிலநேரம் சில குழப்பங்கள் உருவாகலாம். ராகுவும்- கேதுவும் கோள் கிரகங்கள். எனவே உங்களைப் பற்றி வேலைசெய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் தவிர்க்க முடியாத விமர்சனங்களும் வீண் அபவாதங்களும் எழலாம். இருந்தாலும் குரு பலத்தால் அவற்றையெல்லாம் களைந்து முன்னேறலாம்.

மகர ராசிக்கு 12-ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதால், வேண்டாத செலவுகள் உண்டானாலும்- அதற்கு குரு பார்வை கிடைப்பதால்- இப்போது அவை அவசியமாகத் தோன்றாவிட்டாலும் பின்னால் ஒருசமயம் அது முக்கியமானதாகப்படும். அதை முன்கூட்டியே "வருமுன் காப்போம்' மாதிரி செய்துவிட்டது அப்போது நல்லதாதகத் தெரியும்.

மகர ராசிக்கு 4-ல் கேது நிற்பது சுகக்கேடு, தாய்க்கு பிரச்சினை, கல்வித்தடை போன்ற பலன்களைத் தரும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 9-ல் நின்று 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், விதிவிலக்காகிறது. அதாவது எந்த ஒரு பாவத்திலும் கெடுபலனை ஏற்படுத்தும் கிரகம் இருந்தாலும் அதற்கு குரு பார்வை இருக்கவேண்டும். அல்லது அந்த வீட்டுக்குடைய கிரகம் பார்த்தாலும் அந்த இடத்துக் கெடுபலன் மாறிவிடும். அல்லது ராசிநாதன், லக்னநாதன் பார்த்தாலும் தோஷம் நிவர்த்தியாகிவிடும். அந்த அடிப்படையில் 4-ஆம் இடத்துக் கேதுவால் உங்களுக்கு கெடுதல் ஏற்பட இடமில்லை.

8-க்குடைய சூரியன் 12-ல் மறைவதும் 6-க்குடைய புதனும் 12-ல் மறைவதும் விபரீத ராஜயோகம் ஆகும். எதை நல்லது என்று கருதுகிறீர்களோ அதுவே கெடுதலாக மாறும். எதைக் கெடுதல் என்று ஒதுக்குகிறீர்களோ அது நன்மையைத் தருவதாகவும் பயன் உள்ளதாகவும் மாறிவிடும்.

குருப்பெயர்ச்சி: 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி ஏற்படும். மகர ராசிக்கு 6-ல் இருக்கும் குரு 7-ஆம் இடத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதனால் குரு மிதுனத்தில் வந்தது முதல் உங்களையும் அறியாமல் கடனுக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது! கடன் வாங்கவே தயங்கும் நீங்கள் அத்தியாவசியக் கடனாக சக்திக்கும் மீறியவகையில் கடனை வாங்கித் தள்ளி விட்டீர்கள். காய்கறிச் செலவு சாப்பாட்டுக்கு இல்லையென்றாலும் கடன் வாங்காமல்- வெறும் ரசம், துவையலை வைத்து சமாளித்துவிடலாம். ஆனால் விபத்து, சுகக் குறைவு, பேறுகாலம், ஆபரேசன் என்றால் கடன்வாங்காமல் சமாளிக்க முடியுமா? தர்ம ஆஸ்பத்திரிக்குப் போனாலும் சரிவராது என்று கடன் வாங்கித்தான் செலவு செய்யவேண்டும். அப்படி வாங்கிய கடன், வட்டி எல்லாம் தலைக்குமேல் சுமையாக அழுத்த, திகைத்துப்போன உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தமாதிரி கடன்களை அடைக்கச் செய்துவிடும்.

உச்சகுரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11-ஆம் இடம் லாபஸ்தானத்தையும், 3-ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும் பார்க்கக்கூடும். எனவே, லாபம், சேமிப்பு, வெற்றி, மனத்துணிவு ஆகிய பலன்களைத் தரக்கூடும். கடந்த ஓராண்டுக்கும்மேல் வருமானமே இல்லாமல் வைத்தியச் செலவு, குடும்பச் செலவு, வட்டிச் செலவு எல்லாவற்றுக்கும் கடன்வாங்கியே காலத்தை ஓட்டியவர்களுக்கு, புதையல் எடுத்தமாதிரி குரு பகவான் எந்த ரூபத்திலோ அள்ளித்தரப்போகிறார். நீங்களும் நல்ல வாழ்வு வந்தது என்று துள்ளிக்குதிக்கப் போகிறீர்கள்.

குரு வக்ரம்: 2014 பிறக்கும்போதே குரு வக்ரமாக இருக்கிறார். மார்ச் 12 வரை வக்ரகதியாக இருக்கிறார். 6-ஆம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகள் எல்லாம் நீடிக்கும். ஏனென்றால், எந்த ஒரு கிரகமும் வக்ரமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அதிகரிக்கும். பலமடையச் செய்யும். அஸ்தமனமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அழிக்கும்; நாசம் செய்துவிடும். குரு கெட்ட இடமான 6-ல் வக்ரம் என்பதால் 6-ஆம் இடத்துப் பலனை- ரோகம், ருணம், சத்ரு போன்ற பலனை அதிகப்படுத்துகிறார். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குரு கடாட்சம் இருந்தால் குருவின் சோதனைகளை வெல்ல முடியும். சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடலாம். அத்துடன் கோவை கோவில்பாளையத்தில் காலகாலேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தியை வழிபடவும். அவர் நெற்றியில் சிவலிங்கம் உருவம் காணப்படும்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதகாலம் (5-8-2014 முடிய) குரு அஸ்தமனமாக இருப்பார். அக்காலம் குரு கடகத்தில் நல்ல இடத்தில் உங்கள் ராசிக்கு 7-ல் உச்சமாக இருப்பார். அஸ்தமனம் அடைவதால் அந்த இடத்து நற்பலன்களைச் செய்யாமல் மௌனமாக இருப்பார். மழையில் நனைந்த ஸ்கூட்டர்- டூவிலர் ஸ்டார்ட் ஆகாது. எவ்வளவு உதைத்தாலும் வெறும் சவுண்டோடு ஆஃப் ஆகிவிடும். "பிளக்'கை கழற்றி சுத்தம் பண்ணியதும் "ஸ்டார்ட்' ஆகிவிடும். அதுபோல இந்த ஒருமாத காலமும் நல்லது நடக்க தடை ஏற்படும்; ஆனால் கெடுக்காது. அதாவது கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்றமாதிரி- குரு மேன்மையானவர். அந்தத் தடை, தாமதங்களைத் தாங்கிக்கொள்ள மனதுக்குப் பக்குவம் ஏற்பட, பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் கோடீஸ்வர சுவாமியின் ஜீவசமாதி சென்று தியானம் செய்யுங்கள். இளம்பையங்கோட்டூர் சென்று யோக தட்சிணா மூர்த்தியை வியாழனன்று வழிபடலாம்.

ராகு- கேது பெயர்ச்சி: இந்த வருடம் ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சியும் வருகிறது. ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியில் உங்கள் ராசிக்கு 10-ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 9-ல் கன்னி ராசிக்கும்- மகரத்துக்கு 4-ல் மேஷத்தில் இருந்த கேது 3-ஆம் இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள். ராகு- கேது ஏற்கெனவே இருந்த இடமும் பரவாயில்லை; இப்போது மாறப்போகும் இடமும் பரவாயில்லை. கடந்த காலத்தில் ராகு- கேதுவால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் தொல்லையும் இல்லை. இப்போது 9-ல் மாறும் ராகு ஆன்மிகம், பக்தி, இறைவழிபாடு, பிதுர்களின் ஆசி, முன்னோர் வழிபாடு போன்ற பலன்களைச் செய்வார்கள். ராகுவும் கேதுவும் உங்களுக்கு அனுகூலமாக விளங்க திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, உத்தமபாளையம், கீழ்ப்பெருபள்ளம் போன்ற இடங்களுக்குப் போய்வரலாம்.

சனிப்பெயர்ச்சி: 2014 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. 10-ல் இருக்கும் சனி பகவான் 11-ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். பொதுவாக 11-ஆம் இடத்துச் சனிபகவான் உங்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான பலன்களை சனிப்பெயர்ச்சி பலனிலும் 2015-ஆம் ஆண்டு பலன் புத்தகத்திலும் பார்க்கலாம். சனிப்பெயர்ச்சிக்கு விழுப்புரம் அருகே கல்பட்டு என்ற கிராமத்தில், 21 அடி உயரத்தில் சனீஸ்வரர் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. அங்குசென்று வழிபடலாம்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பல வருடங்களுக்குப் பிறகு பழைய நண்பரை அல்லது உறவினரைச் சந்திப்பதால் மன ஆறுதலும் மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்படும். மற்றவர்களால் நன்மையும் உதவியும் உண்டாகும். பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கம் இருக்கும். தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்படலாம். அது பலனும் பயனும் தரும். புதிய கோவில் தரிசனம் கிடைக்கும். சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து போகலாம்.

பிப்ரவரி 


இந்த வாரம் ஆரம்பத்தில் ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். ஒரு பெரிய முயற்சியில் இறங்கிப் போராடி ஜெயிப்பீர்கள். வி.ஐ.பி.க்களின் அறிமுகமும் தொடர்பும் உங்கள் எதிர்காலத்துக்கு அடிப்படை அஸ்திவாரமாக அமையும். உடன்பிறந்தோர் உறவு தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். நீங்களும் பட்டும்படாமலும் நடந்துகொள்வீர்கள்.

மார்ச் 


நடைமுறைச் செயல்களிலும் அன்றாட அலுவல்களிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. வழக்கம்போல எல்லாத் தேவைகளும் எப்படியோ நிறைவேறும். பையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்- கையில் காசு புரண்டாலும் புரளாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியடையும். காரியங்கள் கைகூடும். ஆனால் எதிர்காலத்துக்கான சில நல்ல திட்டங்கள் மட்டும் எட்டாத உயரத்தில் உறியடிக் கம்பு விளையாட்டுப்போல இருக்கும். கம்பை எட்டி எட்டி அடித்தாலும் பானையிலும் படாது- பரிசும் கிடைக்காது. அதற்காக சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கவும். சனி பகவான் மார்ச் 1 முதல் நான்கு மாதம் வக்ரம் என்பதால் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கும்.

ஏப்ரல்  


இந்த மாதம் சென்ற மாதத்தில் நீங்கள் பாடுபட்டதுக்கு ஏற்ற பலனை அடைவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். முன்னேற்றப் பாதையில் முயற்சிகள் பயணிப்பதால் நம்பிக்கை உதயமாகும். வியாபாரிகளுக்கு புதிய பேரம், ஒப்பந்தம் செயல்படும். தொழில் விரிவடையும். ஆரோக்கியமும் பொருளாதாரமும் தெளிவாக இருக்கும். அதற்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடமும் உங்களுக்கு அனுகூலமாக அமையும்.

மே


மார்ச் முதல் 4, 11-க்குடைய செவ்வாய் வக்ரமாக இருந்தார். இந்த மாதம் வக்ரநிவர்த்தியடைவார். செவ்வாய் கன்னியில் தொடர்ந்து இருப்பதாலும் வக்ரமாக இருப்பதாலும் சில கெடுதல்கள், சில நன்மைகள் ஏற்பட்டாலும், இம்மாதம் வக்ரநிவர்த்திக்குப் பிறகு துரிதவேகத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் செயல்படும். நல்லவர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருப்பதால் எதற்கும் மயங்க வேண்டாம்; தயங்க வேண்டாம்.

ஜூன்


இம்மாதம் குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. குரு 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அற்புதம். ராகு 9 பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும், கேது 3- சகாய ஸ்தானத்திலும் மாறுவது அதைவிட அற்புதம்- ஆனந்தம்! உங்கள் முயற்சி கால் பாகம்- தெய்வ கடாட்சம் முக்கால்பாகம்! அதாவது "ஆண்டவன் நினைக்கிறான்- அருணாச்சலம் முடிக்கிறான்' என்று சூப்பர் ஸ்டார் வசனம் பேசிய மாதிரி தெய்வம் நிறைவேற்றும். தெய்வமே துணையிருக்கும்போது என்ன கவலை? பஞ்ச பாண்டவர்களுக்கு கிருஷ்ண பகவான் துணையாக இருக்கவில்லையா?

ஜூலை


ஜூலை 6-ஆம் தேதி முதல் ஒருமாத காலம் குரு அஸ்தமனம் அடைகிறார். 7-ல் உச்சம் பெற்ற குரு அஸ்தமனம் அடைவது ஒருவகையில் சங்கடம்தான். சகுனம் எல்லாம் பார்த்து பயணம் புறப்படும்போது கார் டயர் பஞ்சர் ஆனால் எப்படியிருக்கும்? அப்படி எதிர்பாராத சில தடைகள், தாமதங்கள், குறுக்கீடுகள் ஏற்படலாம். என்றாலும் இது நிரந்தர பாதிப்பு இல்லை. டயரை மாற்றிவிட்டு கிளம்புவது மாதிரி பயணத்தைத் தொடங்கிவிடலாம். இது உங்களை உஷார்படுத்துகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். திருப்பத்தூர் பட்டமங்கலம் சென்று கிழக்கு நோக்கிய அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் போதும்!

ஆகஸ்டு


இம்மாதம் எல்லாத் தடைகளும் சிக்கல்களும் நீங்கி நல்லபடியாக நடக்கும். கடன் தொல்லை குறையும். வருமானம் பெருகும். மனைவி அல்லது குழந்தைகளின் ஆரோக்கியம் தெளிவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உருவாகும். சிலருக்கு கடிதங்கள் மூலமாக நல்ல செய்திகள் தேடிவரும்.

செப்டம்பர்


வாழ்க்கையிலும் தொழில் அமைப்பிலும் நல்ல மாறுதல்கள் உண்டாகும். இதுவரை நீங்கள் செய்த பூஜைகளுக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் ஹோமங்களுக்கும் இனிமேல்தான் பலன் கிடைக்கப்போகிறது. பணியில் மனநிறைவு; தொழில்துறையில் தொடரும் லாபம்; புதியமுயற்சிகளில் வெற்றி;  வருமானப் பெருக்கம் எல்லாம் உங்களை குஷிப்படுத்தும்.

அக்டோபர்


இந்த மாதமும் உங்களுக்கு ஆதாயமான மாதம்தான். தொழில் லாபம், மேன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிக்கான நல்ல திட்டங்கள் உருவாகும். பெண் மக்களுக்கு பிரசவயோகம் அல்லது வளைகாப்பு சீமந்த விழா நடத்தலாம். இறையருளால் எல்லாம் இனிது நிறைவேறினாலும் கண்ணேறு கண் திருஷ்டியும் கொஞ்சம் ஆட்டிவைக்கும். ஆனாலும் கடவுள் காப்பாற்றுவார்.

நவம்பர்


இஷ்டதெய்வ வழிபாட்டு முறைக்கு சிலருக்கு தீட்சையும் குரு உபதேசமும் கிடைக்கும். அதனால் இதுவரை குலதெய்வ வழிபாடு முறையில்லாமல் இருந்த குறை நீங்கிவிடும். "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொருபாகனார் வந்தருளுவார்' என்பது கருத்து. போட்டி, பொறாமை, பிரச்சினைகளையெல்லாம் போராடி ஜெயிக்கலாம். தேக ஆரோக்கியம் தெளிவாகும்.

டிசம்பர்


மாத மத்தியில் சனிப்பெயர்ச்சி (16-12-2014). சனி 10-ல் இருந்து 11-ஆம் இடத்துக்கு மாறுகிறார். லாபஸ்தானம். அத்துடன் ராசியையும் 3-ஆம் பார்வை பார்க்கிறார். யோகத்துக்கு மேல் யோகம்தான். சனிப்பெயர்ச்சி விரிவான பலன்களைத் தனிப்புத்தகத்தில் அப்போது பார்க்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது. உங்கள் நட்சத்திரம் உத்திராடத்துக்கு அது 8-ஆவது நட்சத்திரம்- மைத்ர தாரை- நட்பு தாரை. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு அனுகூலமான ஆண்டாகவே அமையும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அரசு வேலையில் இருப்போர் சக பணியாளர்களின் ஆதரவோடு செயல்படலாம். தடைப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். உத்திராடம் சூரியன் நட்சத்திரம். சூரியன் உங்கள் மகர ராசிக்கு அட்டமாதிபதி என்பதால், அவ்வப்போது சிறுசிறு தடைகளும் குறுக்கீடுகளும் காணப்படலாம்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருப்பனந்தாள் சென்று அருணஜடேஸ்வரரை வழிபடவும். சூரியன், சந்திரன், பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், குங்கிலியக் கலய நாயனார் வழிபட்ட ஸ்தலம். அத்துடன் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத் குமார் ஜீவசமாதி சென்று வழிபடவேண்டும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்றும் வழிபடலாம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு


திருவோணத்திலிருந்து மூல நட்சத்திரம் (2014 பிறக்கும் நட்சத்திரம்) 7-ஆவது வதை தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு பொருளாதாரத்திலும் குடும்பத்திலும் பிரச்சினைகள் காணப்படலாம். கணவன்- மனைவிக்குள் ஒத்துழைப்புக் குறைவும் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளும் இருக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடியும் பற்றாக்குறையுமே குடும்ப பூசலுக்கு அடிப்படைக் காரணமாக அமையும். ஜூன் மாதம் குரு கடகத்தில் சந்திரன் வீட்டில் உச்சம் ஆனதும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். ஆகவே பொறுமையாக நிலைமைகளைச் சமாளிக்கவும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் (திருச்சுழி மெயின்ரோட்டில் இடதுபுறம் பிரிவு, ஜெயவிலாஸ் எதிரில்- செம்பட்டி வழி; புலியூரான் சென்று சித்தர் குருநாத சுவாமியை வழிபட வேண்டும். கருவறையின் நடுவில் சித்தரும்- இருபக்கமும் மகமாயி அம்மனும் அங்காள பரமேஸ்வரியும் காட்சியளிக்கிறார்கள். உப்பும் மிளகும் காணிக்கை செலுத்தி தீர்த்தம் அருந்திவர தீராத நோய்களும் குணமடைவது கண்கூடு. பூசாரி சித்து சுந்தரம், அலைபேசி: 99657 89200-ல் தொடர்பு கொள்ளலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு :


அவிட்ட நட்சத்திரத்திலிருந்து- மூல நட்சத்திரம் (2014 வருடம் பிறக்கும் நட்சத்திரம்) 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை- அனுகூலதாரை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டு பொங்கும் சுபயோகங்களைப் பொலிவுடன் தரும் என்பது உறுதி. ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கலாம். ஜூன்வரை குரு ராசிக்கு 6-ல் மறைவதால் சில காரியங்கள் தாமதமாக நடந்தாலும் தடைப்படாது. குரு ஜூன் மாதம் கடகத்தில் உச்சம் பெற்றதும், மளமளவென எல்லாக் காரியங்களும் துரித கதியில் செயல்படும்.

பரிகாரம்: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அருகிலுள்ள பாம்பன் சுவாமிகள் சமாதிக்கோவில் சென்று வழிபடவும். இவரது கனவில் முருகன் முதிய சிவனடியாராகத் தோன்றி பால்சோறு அளித்தார். அதன்பின் துறவு பூண்டு காவி கட்டினார். ஒருசமயம் மாட்டுவண்டியில் சென்றபோது தவறி வீழ்ந்து இரண்டு கால்கள் மேல் வண்டிச் சக்கரம் ஏறி எலும்புகள் நொறுங்கிவிட்டன. சென்னை அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் இரண்டு கால்களையும் வெட்டி எடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்றார்கள். சுவாமிகள், "என் முருகன் என்னைக் குணப்படுத்துவான்' என்று படுக்கையிலேயே கிடந்து சண்முக கவசமும் குமார ஸ்தவமும் பாடினார். எலும்புகள் படிப்படியாக ஒன்றுசேர்ந்து சில மாதத்தில் முழு குணமானார். அமரபட்சம், சண்டி திதி, அவிட்ட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்

2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னி லக்னத்திலும்  பிறக்கிறது. கும்ப ராசிக்கு 11-ஆவது லாப ராசியாகும்; 8-ஆம் இடமான கன்னி அட்டம லக்னமாகும். 8-ஆவது லக்னத்தில் வருடம் பிறப்பது சோதனையும் வேதனையும் தந்தாலும், ஜெயஸ்தானமாகிய தனுசு ராசியில் பிறப்பதால் சோதனையும் வேதனையும் மாறுமளவு சாதனை படைத்திடலாம்; ஆறுதலைப் பெற்றிடலாம். உதாரணமாகச் சொல்லப் போனால் நீண்டகாலமாக பத்துப்பன்னிரண்டு வருடமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு, ஆபரேஷன் செய்து ஆண் குழந்தை பிறப்பது மாதிரி! ஒரு பக்கம் அறுவை சிகிச்சை வேதனை- இன்னொரு பக்கம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சாதனை! ஆனந்தம்!

தனுசு ராசிநாதன்- வருட ராசிநாதன் குரு வருடத்தொடக்கத்தில் கும்ப ராசிக்கு 5-ல் வக்ரமாக நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் கும்பத்துக்கு 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் துலா ராசியை 5-ஆம் பார்வையாகவும், 11-ஆம் இடம் தன் ராசியை 7-ஆம் பார்வையாகவும், உங்கள் ராசி கும்பத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்ப ராசிநாதன் சனி உச்சம்பெற அவரையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதனால் செல்வாக்கு, புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து,  செயல்பாடு எல்லாம் மேன்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

இதுவரை குடத்துக்குள் வெளிச்சமாக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கப் போகிறீர்கள். உங்களுடைய திறமையும் ஆற்றலும் பெருமையைத் தேடித்தரும். வி.ஐ.பிக்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். அதன்மூலமாக உங்கள் தொழில் வளத்தை நிலையானதாக்கிக் கொள்ளலாம். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம்.

5-ஆம் இடத்து குரு ஜூன் மாதம் 6-ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறும்போது சில தடைகளும் எதிர்ப்பு இடையூறுகளும் ஏற்பட்டாலும், அப்போதும் சனி (2014 டிசம்பர் வரை) 9-ல் உச்சம் பெற்று கடக குருவை 10-ஆம் பார்வை பார்க்கக்கூடும். 2, 11-க்குடைய குருவை ராசிநாதன் சனி பார்ப்பதால் தொடர்ந்து செல்வாக்கும் யோகமும் குடிகொண்டிருக்கும். 

வருட லக்னம் 8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு 12-ஆம் இடம் விரயஸ்தானம் என்பதால், சிலர் பிதுரார்ஜித சொத்துகளை- முன்னோர் சொத்துகளை நல்ல விலைக்கு லாபத்துக்கு விற்கும் பாக்கியம் உண்டாகும். கும்ப ராசிநாதன் சனி 12-க்கும் உடையவர்- 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாப விரயம் ஆகும். அதேபோல நீண்டகாலமாக நடந்துவரும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு உண்டாகும். காணாமல்போன பொருட்களும்- வரவேண்டிய பணமும் இக்காலத்தில் வந்துசேரும். கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுனரையும்   அபிஷேக பூஜை செய்து வழிபட்டால், வரவேண்டிய தொகையும் இழந்த பொருள்களும் மீண்டும் கிடைக்கும். 

குருப்பெயர்ச்சி:  இந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு 5-ல் மிதுனத்தில் உள்ள குரு 6-ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறுவார். 2, 11-க்குடைய குரு 6-ல் மறைவது, ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவர் உச்சம்பெற்று 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே தொழில் யோகம் தொடர்ந்து வேலை செய்யும். தன சம்பாத்தியம் நிலையாக நீடிக்கும். 6-ஆம் இடத்து குரு 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருக்கு இடப்பெயர்ச்சியும் குடியிருப்பு மாற்றமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் ஏற்படலாம். தவிர உச்சம்பெற்ற குருவை 9-ல் துலாத்தில் உச்சம்பெற்ற சனி பார்க்கிறார். உச்சனை உச்சன் பார்ப்பது குற்றம் என்றாலும், கும்ப ராசிநாதன் சனி வருட ராசிநாதன் குரு என்பதால் விதிவிலக்கு உண்டு. இதை கௌரவப் பிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குவதும், ஒரு காரியத்தை முடிக்க பேரம் பேசுவதும், கட்சிக்கு தேர்தல் நிதி வசூலிப்பதும் கௌரவப் பிச்சைதான். ஆகவே குரு மிதுனத்தில் இருந்தாலும் கடகத்தில் இருந்தாலும், பொருளாதாரத்திலும் உங்கள் திட்டங்களிலும் வெற்றியாகவும் லாபமாகவும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

குரு வக்ரம் : 12-3-2014 வரை மிதுன குரு வக்ரமாக இருப்பார். இக்காலம் உங்கள் கனவுகளும் திட்டங்களும் அற்புதமாக நிறைவேறும். பிள்ளைகளுக்கு  நல்லகாரியம் நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்ற திருப்தியான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும்.

அடுத்து 17-11-2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். அப்போது கடகத்தில்- கும்பத்துக்கு 6-ல் இருப்பார். 6-ஆம் இடம் ரோகம், ருணம், சத்துரு ஸ்தானம் என்பதால், இக்காலம் அவையெல்லாம் அதிகமாகவே காணப்படும். அவசியத்தை முன்னிட்டு அதிகமாகக் கடன் வாங்கலாம். போட்டி, பொறாமைகள் உருவாகலாம். என்றாலும் கும்ப ராசிநாதன் சனி உச்சம் பெற்று குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் எளிதாகச் சமாளித்து விடலாம். மதுரை திருப்பரங்குன்றத்தில், இஞ்சினியரிங் கல்லூரிச் சாலையில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியில், ஒவ்வொரு பூரட்டாதி நட்சத்திரத்தன்றும் அபிஷேக பூஜை நடக்கும். அன்னதானம் நடக்கும். கலந்து கொள்ளலாம்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருக்கிறார். இக்காலம் குரு கடகத்தில் 6-ல் மறைகிறார். அதனால் 6-ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்துவிடும். சுருட்டப்பள்ளி தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். 

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி! கும்ப ராசிக்கு இதுவரை 9-ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 8-ஆம் இடம் கன்னிக்கும், 3-ல் மேஷத்தில் இருந்த கேது இப்போது 2-ம் இடம் மீனத்துக்கும் மாறுவர். ராகு 8-ல் இருப்பது- கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற அடிப்படையில் நல்லது. 2-ல் கேது இருப்பது பொருளாதாரச் சிக்கல், குடும்பத்தில் குழப்பம், வாக்கு நாணயப் பிசகு போன்றவற்றை ஏற்படுத்தும் என்றாலும், குரு வீட்டில் இருக்கும் கேதுவை கடகத்தில் உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் தோஷம் விலகும். குரு பார்க்க கோடி குற்றம் விலகுமல்லவா!

சனிப்பெயர்ச்சி: 2014- டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. 9-ல் உள்ள சனி 10-ஆம் இடத்துக்கு மாறுவார். தொழில், வாழ்க்கையில் புதுப்பிரச்சினைகளை உருவாக்கும் என்றாலும்- கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் தீமை குறையும். விரிவான பலன்களை சனிப்பெயர்ச்சி பலன்களில் பார்ப்போம் அல்லது 2015 ஆண்டுபலன் புத்தகத்தில் பார்க்கலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


உங்கள் கனவுகளும் திட்டங்கள் படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேற்றமும் வெற்றியும் அடையும். சிலகாரியங்களில் வேகத்தடை ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் சாதனை செய்து முடிப்பீர்கள். உடல்நிலையில் சிறுசிறு சுகக்குறைவு காணப்பட்டாலும், உள்ளத்தின் உறுதிப்பாடால் அதை உதறித்தள்ளி வெற்றி எல்லையைத் தொட்டுவிடலாம்.

பிப்ரவரி 


நாளும் கோளும் நல்லோருக்கும் இல்லை; நலிந்தோருக்கும் இல்லை.   நீங்கள் நல்லவர்தான்- வல்லவர்தான் என்றாலும், கால நேரத்தையும் கிரகநிலையும் அனுசரித்துச் செயல்பட்டால் வெற்றி உடனே கிட்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் முட்டிமோதித்தான் முன்னேற வேண்டும்; ஜெயிக்கவேண்டும்.

மார்ச் 


கடந்த 2013- நவம்பர் முதல் வக்ரமாக இருந்த குரு, இம்மாதம் (12-3-2014-ல்) நிவர்த்தி, குரு வக்ரம் உங்களுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், வக்ர நிவர்த்திக்குப் பிறகு ஏகமனதான வெற்றி- எதிர்ப்பு இல்லாத வெற்றிக்குச் சமமாக ஜெயிக்கலாம். ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலையில் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ஏப்ரல் 


இந்த மாதம் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் மாதம். ஜயவருடம் பிறக்கிறது. ஆங்கில வருடத்தோடு தமிழ்ப்புது வருடமும் உங்களுக்கு அனுகூலமாக அமையும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். திட்டங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபவிசேஷங்களும் விழாக்களும் இடம்பெறும். உறவினர் வருகையும் விருந்தும் என ஒரே கலகலப்பு தான்.

மே


வெற்றிமேல் வெற்றி உண்டாகும். முக்கியமான வி.ஐ.பி.யின் தொடர்பு நல்லதா கெட்டதா, பயன் உண்டா இல்லையா என்ற குழப்பத்துக்கு இப்போது நல்ல தீர்வு கிடைக்கும். இலவம் பஞ்சு காத்த கிளிக்குச் சமமாக இருந்த நீங்கள் நிச்சயம் "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியைப்போல் ஏமாற்றம் அடையமாட்டீர்கள். "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு' போல பயனும் பலனும் அடையலாம்.

ஜூன் 


இந்த மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 6-ல் குரு (கடகத்தில்) உச்சம் பெறுவார். அடுத்து 21-ஆம் தேதி ராகு- கேதுபெயர்ச்சி. ராகு கன்னியிலும் கேது மேஷத்திலும் மாறுவது உங்களது வாழ்க்கையில் அபூர்வமான மாறுதல்களை உருவாக்கும். அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

ஜூலை 


மாணவர்களின் மேற்படிப்புக்கு நற்பலன் கிடைக்கும். எதிர்பார்த்த சப்ஜெக்ட் கிடைக்கும். கடன் உதவியும் கிடைக்கும். சிலர் பெற்றவர்களைப் பிரிந்து வெளியில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் வாய்ப்பு உண்டாகும். வெகுசுலபமான முயற்சியில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். தனியார் நிறுவனத்திலும் அல்லது அரசுப்பணியில் இருப்போருக்கும் நன்மை உண்டாகும். குரு அஸ்தமனத்துக்கு பரிகார பூஜை செய்துகொள்ளவும். 

ஆகஸ்டு 


உங்கள் மனதில் ஏதோ ஒரு நெருடல்- வெளியில் சொல்லமுடியாத வேதனை அல்லது காரணம் புரியாத கவலை ஏற்படலாம். பாதிப்பு ஏதும் வராது என்றாலும், "ஏன் டல்லாக இருக்கிறீர்கள்?' என்று மற்றவர்கள் உங்களைக் கேட்கக் கூடும். "அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்று வள்ளுவர் சொன்னதுபோல, உங்கள் முகமே காட்டிக் கொடுத்துவிடுகிறதே. சுக்கிரனையும் குருவையும் வழிபட்டு, சிரித்தமுகமாகத் திகழ முயற்சி செய்யுங்கள்.

செப்டம்பர் 


உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் சிறு வைத்தியத்தால் குணமாகிவிடும். நோயில்லை; கவலையே காரணம்! கவலையைத் தூக்கி எறியுங்கள். தியானம், யோகாவில் மனதைத் திருப்புங்கள். "உன்னால்முடியும் தம்பி' என்ற மாதிரி உங்களால் எல்லாம் முடியும். துணிவே துணை! தன்னம்பிக்கையே தைரியம்!

அக்டோபர்


பண்டிகை நெருங்க நெருங்க பணத்தட்டுப்பாட்டை நினைத்து பதற்றம் அதிகமாகும். "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பதை மறந்து விட்டீர்களா? உங்களுக்கும் மேலே இறைவன் ஒருவன் இருக்கிறானே. எல்லாருக்கும் படியளக்கும் ஈசன் உங்களை மட்டும் கைவிட்டு விடுவானா? பரமன் கருணாமூர்த்தியாயிற்றே! நன்றி மறக்கும் மனிதர்களை நம்புவதை விட எதையும் எதிர்பார்க்காத இறைவனை நம்புங்கள். நம்பினோர்  கைவிடப்படார்.

நவம்பர் 


இந்தமாதம் சிலகாரியங்களை கடின முயற்சிக்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். சில காரியங்களை எளிய முயற்சியால் நிறைவேற்றி விடலாம். எப்படியோ காரியம் நிறைவேறும். படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்தவுடன் தூக்கம் வந்தால் சரிதான். 

டிசம்பர்


டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. 9-ஆம் இடத்து சனி 10-ல் மாறி கடக குருவின் பார்வையைப் பெறுவார். டிசம்பர் 1-ஆம் தேதி கடக குரு சிம்மத்துக்கு அதிகாரமாக மாறி, 24-ஆம் தேதி மீண்டும் கடகத்துக்கு வக்ரம்  திரும்புவார். சிம்மத்துக்கு மாறினாலும் கடகத்தின் பலன்தான் நடக்கும். எனவே உங்களுக்கு எல்லாமே இனிய பலனாகவே நடக்கும்; பயமில்லை.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு


அவிட்ட நட்சத்திரத்திலிருந்து வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 6-ஆவது தாரை- சாதக தாரை. அனுகூலமாகவே இருக்கும். பொங்கும் சுபயோகங்களைப் பொலிவுடன் தரும். ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். செயற்கரிய செயல்களைச் செய்துமுடிக்கலாம். 

பரிகாரம்: சென்னை, திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடலாம். ஒரு சமயம் வண்டிச்சக்கரம் ஏறி சுவாமிகளின் கால் எலும்புகள் நொறுங்கிவிட்டன. சண்முக கவசமும், குமாரஸ்தவமும் பாடி முருகன் திருவருளால் பூரண குணமானார். சஷ்டி திதியில் அவிட்ட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்திலிருந்து வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் (சதயம் முதல் மூலம்) 5-ஆவது, தாரை- பகை தாரை. எனவே ஒதுங்கி ஒதுங்கிப்போனாலும் வம்பு வழக்கும் விவகாரமும் உங்களை விரட்டி விரட்டி துரத்தும். ஜெனன ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பங்கமும் ஏற்படாது. வாலியின் பலம்போல- எதிரியின் பலத்தில் பாதி பலம் வாலியை வந்தடைவதுபோல- எதிரியையும் பகையையும் வென்று வாகை சூடலாம்.

பரிகாரம்: தேவகோட்டை அவுட்டரில் பட்டுக்குருக்கள் நகரில் பிரத்தியங்கராதேவி கோவில் இருக்கிறது. மானாமதுரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சமுகப் பிரத்தியங்கராதேவி கோவில் இருக்கிறது. சேலம் சங்கர் நகரிலும், ஸ்ரீவித்யாஸ்ரமத்திலும் பல்லடம் வெங்கட்டா நகரிலும் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் பிரத்தியங்கராதேவிக்கு மிளகாய் வற்றல் ஹோமம் (நிகும்பலா ஹோமம்) நடக்கிறது. அதில் கலந்துகொள்ளலாம். கும்பகோணம் அருகில் திருப்புவனத்தில் சிவன்கோவிலில் சரபேஸ்வரருக்கு தனிச் சந்நிதி உண்டு. அங்கும் தரிசனம் செய்யலாம். பொன்னமராவதி அருகில் பனையப்பட்டியில் சாது புல்லான் சுவாமி ஜீவசமாதியை வழிபடவும். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு 


பூரட்டாதியில் இருந்து வருடப்பிறப்பு நட்சத்திரம் மூலம்- 4-ஆவது க்ஷேமதாரை. 2014- ஆம் வருடம் உங்களுக்கு, தேக சௌக்கியமும் நோய் நிவர்த்தியும் மனதில் உற்சாகமும் ஆர்வமும் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்ய உறவும், அன்பும் பாசமும் பொழியும். சிலருக்கு ஊர்மாற்றம், சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம், சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சனூரில் மேற்கு எல்லையில் உள்ள மணியாக்குளத்தின் வடமேற்குப் பாகத்தில் ஹரதத்தர் அதிஷ்டானக் கோவில் உள்ளது. சிவலிங்கப் பிரதிஷ்டை. அய்யங்கார் சமூகத்தில் பிறந்த இவருக்கு இளமையில் சிவபெருமான் காட்சி கொடுத்து உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கமும் தந்தருளினார். தமது சமூகத்தார் எதிர்ப்பு தெரிவித்தபோது, பழுக்கக் காய்ச்சிய இரும்பு பீடத்தின்மேல் அமர்ந்து "சிவனேபரம்' என்று நிரூபித்தவர். கஞ்சனூர் கோவிலில் கல் நந்தியிடம் அருகம்புல்லைக் கொடுக்க, அது தன் தலையை திருப்பி நாக்கை நீட்டி புல்லை வாங்கித் தின்றது. அங்குசென்று வழிபடவும். 

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) பொதுப்பலன்கள்

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொதுப்பலன்கள்


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில்- தனுசு ராசியில்- கன்னி லக்னத்தில் உதயமாகிறது. உங்களின் மீன ராசிக்கு 10-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் வருடம் பிறப்பது மிகமிக யோகமான- அனுகூலமான அமைப்புதான்! மேலும் ஆங்கிலப் புதுவருடம் தனுசு ராசியில் பிறப்பதால்- தனுசு ராசிநாதன் குருவே உங்களின் ராசிநாதன் ஆவார். அவர் மீன ராசிக்கு 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; வருட ராசியையும் பார்க்கிறார். அத்துடன் கன்னி லக்னத்துக்கு (வருட லக்னத்துக்கு) 10-ல் நிற்கிறார். ஆகவே மீன ராசிக்கு 10-ஆம் இடம், வருட லக்னத்துக்கு 10-ஆம் இடம் என்று 10-க்கு குரு தொடர்பு இருப்பதால், இந்த ஆண்டு உங்களுடைய தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் மேன்மையும் முன்னேற்றமும் யோகமும் உண்டாகும் என்பது உண்மை!

2013 நவம்பரிலிருந்தே குரு வக்ரமாக இருக்கிறார். 12-3-2014 வரை குரு வக்ரம்! வக்ரத்தில் உக்ர பலம் என்பது அடிக்கடி எழுதிவருகிறேன். நல்ல இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்களே பலமாக நடக்கும். அதாவது மீன ராசிக்கு 4-ஆம் இடம், 10-ஆம் இடம், 12- ஆம் இடம் ஆகியவற்றுக்கு குரு தொடர்பு. தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், தொழில் யோகம், வெளிநாட்டுப் பயணம், குடும்பத்தில் சுபமங்கள விரயம் ஆகிய பலன்கள் நடக்கும். 8-ஆம் இடத்தையும் (துலாத்தையும்) குரு பார்க்கிறார். அதனால் உங்களைப் பற்றி வெளியுலகத்தில் தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது உங்கள் காதில் விழும்போது கவலைப்படுவீர்கள். அதாவது நீங்கள் யாரையும் பகையாகவும் விரோதியாகவும் கருதவில்லையென்றாலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை எதிரியாகக் கருதி இடைஞ்சல் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் நிலைக்காது- நீடிக்காது! ஏனென்றால் உங்களிடம் உண்மை இருப்பதால் "சத்தியமேவ ஜெயதே'- வாய்மையே வெல்லும்! உங்கள் கவலைக்கும் சஞ்சலத்துக்கும் அட்டமச் சனியும் ஒரு காரணமாக அமைகிறது.

2014- ஜனவரி முதல் குருபார்வையின் சிறப்பால் அட்டமச் சனியின் கெட்டபலன் எல்லாம் விட்டு விலகிப்போகும். 2014 மார்ச் முதல் ஜூன் வரை சனியும் வக்ரம் அடைவார். சனியின் வக்ரம் அட்டமஸ்தான பலனை அதிகப்படுத்தலாம். அதாவது சந்தேகம், சலிப்பு- எந்தப் பிரச்சினையிலும் பயம், பீதி, கவலை தோன்றலாம். ஜூன் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. குரு கடகத்தில் உச்சம்பெறும் காலம். உச்சசனி உச்ச குருவைப் பார்ப்பதால், உச்சனை உச்சன் பார்க்கும் காலம் மேற்கண்ட கெடுபலன் நீங்கிவிடுகிறது.

கன்னி லக்னத்துக்கு (வருட லக்னத்துக்கு) 4, 7-க்குடைய குரு 10-ல் மிதுனத்தில் நின்று 2-ஆம் இடம் துலாம், 4-ஆம் இடம் தனுசு, 6-ஆம் இடம் கும்பம் ஆகியவற்றைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடோ நெருக்கடியோ இருக்காது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலையுண்டாகும். முன்சொன்னமாதிரி பூமி, வீடு, வாகனம், தாயன்பு, கல்வி மேன்மை ஆகிய 4-ஆம் இடத்துப் பலனும் விருத்தியடையும். 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பற்றாக்குறை பட்ஜெட்டை சரிக்கட்ட அல்லது அத்தியாவசிய தேவைக்காக கடன்வாங்க நேரும். ஒருசிலர் வீடுகட்ட அல்லது கார் வாங்க அல்லது கல்யாணம் காட்சி நடத்த கடன் வாங்கலாம். அது சுபக் கடன்தான்.

கடந்த 2013-ல் 5-ஆம் இடம் புத்திரஸ்தானத்தை சனி பார்த்ததால், பிள்ளைகளின் வைத்தியச் செலவு அல்லது பிரசவ செலவுக்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியிருக்கலாம். 2014 ஜூன் மாதம் 5-ல் குரு உச்சம்பெறும்போது அந்தக் கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம். அடகு நகைகளையும் மீட்டு விடலாம். ஒருசிலர் இதய தொந்தரவு, விபத்து, எலும்பு முறிவு போன்ற வகையில் லட்சக்கணக்கில் (2013-ல்) வைத்தியச் செலவும் செய்தார்கள். 2014-ல் அவர்களும் முழு அளவில் குணமடைந்து செயல்படுவார்கள்.

மொத்தத்தில் 2014-ல் வாழ்க்கை முன்னேற்றம், தொழில் உயர்வு, வியாபார விருத்தி, பணியில் மனநிறைவு, புதுவாழ்வு, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, பெருமை ஆகிய பலனையெல்லாம் சந்திக்கலாம். படித்துமுடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும்- (கணவர் அல்லது மனைவிகளுக்கும்) வேலைவாய்ப்பு அல்லது தொழில் வருமானம் கூடும். வருடத் தொடக்கம் முதல் ஆறு மாத காலம் செவ்வாய் கன்னியில் இருப்பதால் கணவர் அல்லது மனைவி வகையில் யோகம்- பாக்கியம் உண்டாகும்.

குருப்பெயர்ச்சி: 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மீன ராசிக்கு 4-ல் இருக்கும் குரு 5-ஆம் இடம் புத்திரஸ்தானத்துக்கு மாறுவார். அக்காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், திருமணம், பட்டப்படிப்பு, வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகம், வீடு, மனை, வாகன யோகம் போன்ற நன்மைகள் உண்டாகும். வருட ராசி தனுசுக்கு 8-ஆம் இடத்தில் குரு மறைவானாலும் வருட லக்னம் கன்னிக்கு 11-லாபஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் கடக குரு மீன ராசிக்கு 11-ஆம் இடம், வருட ராசி தனுசு ராசிக்கு 2-ஆம் இடங்களுக்கு உச்ச குரு பார்வை என்பதால் திடீர் தனப்ராப்தி, லாபத்துக்கு இடமுண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி, ஊர்மாற்றம் ஏற்படலாம்.

குரு வக்ரம்:  2014 மார்ச் வரை குரு வக்ரம். மிதுன குரு வக்ரம். அற்புத காலம். முன்சொன்னபடி 4-ஆம் இடத்து யோகம் அற்புதமாக நடக்கும். 2-ஆவது கட்டமாக 2014 நவம்பர் 27 முதல் குரு வக்ரம். 2015 மார்ச் வரை அப்போது குரு 5-ல் உச்சம். 5-ஆம் இடத்துப் பலன்களை ஆணித்தரமாக செயல்படுத்துவார்.

குரு அஸ்தமனம்: 2014 ஜூலை 6 முதல்  ஒரு மாதம் ஆகஸ்டுவரை குரு அஸ்தமனம். 5-ல் கடகத்தில் உச்சகதியில் குரு அஸ்தமனம் அடைவதால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை, தாமதம், சுணக்கம் ஏற்படலாம். சிலசமயம் ஒரு செலவுக்கு இரு செலவு ஆகலாம். வீண் விரயம்! சில சமயம் வைத்தியச் செலவு! சிலசமயம் தாயார் வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் செலவு.

கிழக்குத் தாம்பரத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்ரீஅகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு சுவாமி பீடம் இருக்கிறது. அங்குசென்று தியானம் செய்யவும். கிருஷ்ணானந்தர் சுவாமி அலைபேசி: 98846 52969; மணி சித்தர், அலைபேசி: 99400 09371-ல் தொடர்பு கொள்ளலாம்.

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. மீன ராசிக்கு 8-ல் இருந்து அட்டமச்சனியோடு சேர்ந்து உங்களை வாடவைத்த- வதங்க வைத்த ராகு- ராசிக்கு 7-ஆம் இடத்துக்கு கன்னிக்கு மாறுகிறார். குடும்பஸ்தானத்தில் நின்று குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்துவந்த கேது- ஜென்ம ராசிக்கு மீனத்துக்கு மாறுகிறார். இரண்டு பாப கிரகங்களும் கேந்திர பலம் பெறுவதால், உங்களுக்கு குடும்ப அமைதி, ஆனந்தம், திருப்தி, தேக சுகம் எல்லாம் உண்டாகும். திருமணத்தடையும் தோஷமும் விலகும்.

சனிப்பெயர்ச்சி: 2014 டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. ராசிக்கு 8-ல் இருந்து உங்களை தலையில் கொட்டிக்கொண்டயிருந்த சனி- எட்டாமிடத்தை விட்டு விலகி 9-ஆம் இடம் மாறுகிறார். இதுவே உங்களுக்கு 100-க்கு 100 ஆறுதல். பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம்! எனவே இனிமேல் தொட்டது துலங்கும்; விட்டது கிடைக்கும்; இழந்தது மீண்டும் வரும்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


இந்த மாதம் எல்லாக் காரியங்களையும் மிகவும் எளிதாக- (ஈஸியாக) நிறைவேற்றிவிடலாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகளையும் சிரமங்களையும் ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக்கொண்டு, மாற்றுத் திட்டத்தோடு செயல்பட்டு சாதிக்கலாம். முயற்சிகள் வளர்ச்சியைக் கொடுக்கும். தளர்ச்சியை விலக்கும். மாற்றங்கள் ஏற்றங்களாக விளங்கும்
.

பிப்ரவரி


பொருளாதார வகையில் போதிய நிறைவும் தாராளமும் இருக்கும். சேமிப்புத் திட்டத்தில் முதலீடு பெருகும். நீண்டகால தவணைத்திட்டத்தில் சில அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றலாம். புகழையும் தற்பெருமையையும் விரும்பாத உங்களுக்கு பாராட்டும் பரிசும் புகழும் போற்றுதலும் தேடிவரும். சாதனையாளர் விருதும் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் எதிர்பார்க்கலாம்.

மார்ச் 


2, 9-க்குடைய செவ்வாய் 7-ல் வக்ரம். (2 மாதம்). 7-ல் இருப்பதால் திருமணம், உபதொழில் யோகம், மனைவியின் அன்பு, மனைவி உறவினர்கள் வகையில் சுபச்செலவு ஆகிய பலன் உண்டாகும். வியாபாரிகளுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லைகள் ஏற்பட்டாலும், மாமூல் கொடுத்து சரிக்கட்டலாம். புதிய லைசென்ஸ் அல்லது ஒப்பந்தங்கள் செயல்படும். தெய்வ வழிபாடு, பிரார்த்தனை நிறைவேறும்.

ஏப்ரல்


ஒன்றை இழந்தால் இன்னொன்றைப் பெறலாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். எந்த ஒன்றைப் பெறுவதானாலும் அதற்கென்று ஒரு விலை உண்டு. அதைக் கொடுத்துதான் வாங்கவேண்டும். இதுபோன்ற பழமொழி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இம்மாதம் தமிழ்ப்புத்தாண்டு ஜயவருடம் பிறக்கிறது. அதுவும் அஸ்த நட்சத்திரம் கன்னி ராசியில் மேஷ லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு ஆங்கில வருடத்தோடு தமிழ்ப்புத்தாண்டும் ராஜயோகமாக அமையும். குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துவீர்கள்.

மே


புத்தாண்டைத் தொடர்ந்து சத்தான பல நற்காரியங்களை சாதிப்பீர்கள். வருங்காலத் திட்டத்தை வழிமுறையோடு திட்டமிட்டுச் செயல்படுத்தி சீரும் சிறப்பும் அடைவீர்கள். "ஒரு மலையை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மனிதனை நம்பி வாழவேண்டும்' என்று சொல்லுவார்கள். அதற்கேற்றதுபோல் சிலருக்கு மலைப்பகுதியில் வேலையும் வாழ்க்கையும் அமையும். அல்லது முக்கியமான வி.ஐ.பி.யின் தொடர்பு கிடைக்கும். வி.ஐ.பி. எல்லாம் வி.ஐ.பி ஆகமாட்டார்கள். உங்கள் மேல் நல்லபிப்பிராயமும் உண்மை அன்பும் கொண்டவர்கள்தான் வி.ஐ.பிக்கள். உங்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் உங்களுக்கு வி.ஐ.பிக்கள். அப்டிப்பட்டவர்கள் உதவியால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

ஜூன்


இந்த மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. இரண்டும் உங்களுக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் தரும். குரு உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பது யோகம். மதிப்பு, மரியாதை, கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு எல்லாம் கூடும். திருமணத்தடை விலகும். காசுபணம் சேமிப்பு உண்டாகும்.

ஜூலை


அடுத்தவர்களுக்காகவும், பழகிய நண்பர்களுக்காகவும் அவர்கள் பிரச்சினைகளை தலையில் ஏற்றுக்கொண்டு அவர்களை திருப்திபடுத்த கைக்காசுகளை செலவு செய்வீர்கள். ஆனால் கடைசியில் அவர்கள் நன்றி மறந்தவர்களாக மாறிவிட்டதை நினைத்து வேதனைப்படுவீர்கள். நல்லதுக்கே காலமில்லை. சொல்லப்போனால் வெட்கக்கேடு. குரு அஸ்தமன பலன் இதுதான்.

ஆகஸ்டு


ஒரு புதிய காரியத்துக்கு திட்டம் போடுவீர்கள். அது நிறைவேறி செல்வாக்கான ஒரு பிரமுகரை நாடுவீர்கள். அவரும் மனப்பூர்வமாக உதவுவார். கூட்டுசேர்ந்து தொழில் தொடங்கி லாபம் சேர்க்கலாம். வடகிழக்குப் பகுதி பயணமும் ஏற்படும். அதனால் பயன் உண்டாகும்.

செப்டம்பர்


பெரியோர்கள், ஞானிகள், மகான்களின் ஜீவசமாதி தரிசனமும் ஆசியும் கிடைக்கும். முயற்சிகள் எல்லாமே வளர்ச்சியடையும். மனைவி, மக்களிடம் அபிமானம் காட்டி மகிழலாம். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வேண்டியதைச் செய்யலாம்.

அக்டோபர்


எதிர்பார்த்த துறையில் பணவரவு கிடைக்கும். பெரியோர்களுக்கு பேரன், பேத்தி, சந்தோஷம் உண்டாகும். பூர்வ புண்ணியத்தால் சௌபாக்கியம்- க்ஷேமம் ஏற்படும். பங்காளி- மைத்துனர் வகையில் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுபச்செலவு. மாதக்கடைசியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

நவம்பர்


மாதம் முழுக்க அயராத உழைப்பு. சாப்பிடவும் தூங்கவும் நேரம் கிடைக்காது. கண் துஞ்சார்- பசி நோக்கார்- கருமமே கண்ணாயினார் என்ற மாதிரி உழைப்புக்கும் பட்ட பாட்டிற்கும் பலன் அடுத்த மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர்


16-ஆம் தேதி அட்டமச்சனி விலகிவிடும். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் நீங்கிவிடும். இனி எந்நாளும் இன்பமே- துன்பமில்லை. நீங்களும் நல்லாயிருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்களும் நன்றாகயிருப்பார்கள். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம்' என்ற கொள்கைதான்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு


பூரட்டாதியிலிருந்து 2014 வருடப்பிறப்பு நட்சத்திரம் மூலம்- 4-ஆவது தாரை என்பதால், நோய் நிவர்த்தியும் தேக சௌக்கியமும்- மனதில் உற்சாகமும் ஆர்வமும் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்ய உறவும் அன்பும் பாசமும் பொழியும். சிலருக்கு ஊர் மாற்றம், சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம், சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஆடுதுறைக்கு 2 .கி.மீ. தூரத்தில் கஞ்சனூரில் மேற்கு எல்லையில் உள்ள மணியாக் குளத்தில் வடகரையில், வடமேற்கு பாகத்தில் ஹரதத்தர் அதிஷ்டானக் கோவில் உள்ளது. சிவலிங்கப் பிரதிஷ்டை. (மற்ற விவரத்தை கும்ப ராசிப் பலனில் பூரட்டாதி நட்சத்திரப் பரிகாரத்தில் பார்க்கவும்).

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்தில் இருந்து, மூல நட்சத்திரம் 3-ஆவது தாரை, விபத் தாரை என்றாலும் உத்திரட்டாதி நட்சத்திரம் சனியின் நட்சத்திரம். சனி உச்சமாக இருப்பதால் பாதிக்காது.

பரிகாரம்: திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் சென்று திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயரை சனிக்கிழமை வழிபடவும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் 2-ஆவது நட்சத்திரம் சம்பத் தாரை. எனவே 2014-ல் செல்வச் சேர்க்கை, குடும்பத்தில் மங்கள சுபகாரியம், பூமி, மனை, வீடு, வாகன பாக்கியம், கல்வி மேன்மை, பதவி உயர்வு, தேக சுகம் ஆகிய நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: மயிலாடுதுறை- தரங்கம்பாடி பாதையில் 6 கி.மீ. தூரத்தில் விளநகர் எனும் கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக வரதராஜப்பெருமாள் அருள்பாலிக்கிறார். அவர் சந்நிதியில் அஷ்டாஷ்டர மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய நமஹ) 108 முறை ஜெபித்தால் கேட்ட வரம் அருளுவார்.

2014 ஆண்டு பொதுப்பலன்

2014 ஆண்டு பொதுப்பலன்

எப்போதும் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி 1-ஆம் தேதி கன்னியா லக்னத்தில் உதயமாகும். நட்சத்திரம், கிழமை, கிரக நிலைகள் மட்டும் மாறுபடும். 2014-ஆம் ஆண்டின் கூட்டு எண்- 7. இது கேதுவின் எண்- மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், அதுவும் கேதுவின் நட்சத்திரம்- வருடம் பிறப்பது கேது தசை இருப்பில்! எல்லாம் கேதுமயம் என்பதால், இந்த 2014 விநாயகரின் அருள்கடாட்சத்தோடு பிறக்கிறது. அசுவினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்; ஜாதகரீதியாக நடப்பு கேது தசை, கேது புக்தி நடைப்பவர் களுக்கும் 2014 புதுவருடம் இதமான வருடமாக- இனிய வருடமாகத் திகழும்.

1-1-2014 என தேதி, மாதம், வருடம் எல்லாவற்றையும் கூட்டினால் 9 வரும். இது செவ்வாயின் எண். புதுவருடம் கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னத்தில் செவ்வாய் இருக்கிறார். செவ்வாயின் ராசியான மேஷத்தில்   தசாநாதன் கேது வருட எண் நாயகன் இருக்கிறார். அந்தக் கேதுவையும் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்க்கிறார்.

2014 தனுசு ராசியில் பிறக்கிறது. அதன் அதிபதி குரு ராசிக்கு 7-ல் லக்னத்துக்கு 10-ல் இருக்கிறார். ராசியையும் பார்க்கிறார்; லக்னாதிபதி புதனையும் பார்க்கிறார்.

ஆகவே மிதுன ராசி- மிதுன லக்னம், கன்னி ராசி- கன்னி லக்னம், தனுசு ராசி- தனுசு லக்னம் ஆகியவற்றில் பிறந்தோருக்கெல்லாம் 2014 மிகச் சிறந்த வருடமாகவும் யோகமான வருடமாகவும் அமையும். அவரவர் ஜாதகத்தில் என்ன தசா புக்திகள் நடந்தாலும் சரி - எந்த ராசி, லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி- மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்திலும்; ராசி- லக்னத்திலும் பிறந்தவர்களுக்கு 2014 அற்புதமான வருடமாகவும் அதிர்ஷ்டம் நிறைந்த வருடமாகவும் அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட இடமுண்டு. ஆட்சி அமைக்கும் புதிய கட்சியுடன் தமிழக ஆளும் கட்சியும் கூட்டணி சேரலாம். தமிழகத்தைப் பொறுத்தஅளவில் தற்போது ஆட்சிமாற்றம் வர வாய்ப்பு இல்லை. ஆனால் ஆளும் கட்சி அடிக்கடி அமைச்சர்களை மாற்றியமைக்கலாம். ஆளும் கட்சி மக்களுக்கு இலவச சலுகைகளை அள்ளி வழங்கினாலும், வியாபாரிகளிடமும் நடுநிலை மக்களிடமும் அதிருப்தியைத் தான் சம்பாதிக்கும். கிராமத்து மக்களிடம் செல்வாக்கை எதிர்பார்த்தாலும், கடந்த காலத்தைப்போல முழு மெஜாரிட்டி கிடைக்காது.

இந்த வருடம் இயற்கையின் கருணையினால் மழை வளம்- நீர் வளம் திருப்திகரமாக இருக்கும். அதனால் விவசாயமும் சாகுபடியும் திருப்திகரமாக இருக்கும். என்றாலும் அரிசி மற்றும் தானியங்கள் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். மின்சார உற்பத்தியும் நன்றாக இருக்கும். அதனால் மின்வெட்டு குறையும்.

குரு கடகத்தில் உச்சம் பெறுவதால் ஆன்மிகம் மேலோங்கும். கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் பெருகும். மாதாந்திர பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் உண்டாகும். அதேசமயம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும், குண்டுவெடிப்பு மிரட்டல்களும், அதனால் கெடுபிடியான சோதனைகளும் தீவிரமாக இருக்கும். அதனால் மக்கள் கூட்டம் குறையும். கோவில்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரம் குறைவதையுணர்ந்து புலம்புவார்கள். 

"கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?' என்ற மாதிரி, தீவிரவாதிகளின் சதிவேலைகள் ஒருபுறம் தீவிரமாகத்தான் இருக்கும். அதைத் தடுப்பதாக அரசு சபதம் போட்டாலும், அவர்களுக்கு சவாலாக அமையும். இவர்களுக்கிடையில் அப்பாவி மக்கள் பலியாவது சர்வசாதாரணமாக இருக்கும். என்னதான் அரசு இறந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடு கொடுத்தாலும் உயிருக்கு விலைமதிப்பு உண்டா? மனித உயிர்கள்- ஆடு, கோழி, மீன் போன்ற உயிர்களுக்குச் சமமாக பலியாகும் அவலநிலை எப்போது மாறுமோ? கடவுளுக்கே வெளிச்சம்!

2014- ஜூலை முதல் ஒன்றரை மாதம் சனியும் செவ்வாயும் ராகுவும் துலா ராசியில் ஒன்று கூடியிருப்பார்கள். அதற்கு முன்னதாக ஜூன் மாதம் குரு கடகத்துக்கு உச்சமாக மாறிவிடுவார். உச்ச வியாழனை உச்ச சனி 10-ஆம் பார்வை பார்ப்பார். உச்சனை உச்சன் பார்ப்பது தீது. நாட்டில் வாகன விபத்து, விமான விபத்து, அக்னிபயம் (தீ விபத்து), உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும். இயற்கையின் சீற்றத்தால் விபரீத விளைவுகளும், அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு ஆபத்துகளும், பச்சிளம் குழந்தைகள் பலியாவதும், சிவகாசி போன்ற பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளும் உயிர்சேதங்களும், வெள்ளச் சேதம்- வேளாண்மை சேதம் போன்ற நெஞ்சை நெருடும் நிகழ்ச்சிகளும் நடக்கும். அரசியல் துறையிலும் அருவருப்பான மாற்றங்கள் உண்டாகும். பெருந்தலைவர்களுக்கு கண்டம், ஆபத்து, தீவிர சிகிச்சை போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும்.

இவையெல்லாம் மாறவேண்டுமென்றால் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து எல்லாரும் கூட்டுவழிபாடும் பிரார்த்தனையும் செய்யவேண்டும். அவரவர் ஆசார முறைப்படி இந்து கோவில்களிலும், சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் வழிபாடு நடத்தவேண்டும். ஹோமங்கள் நடத்தப்பட வேண்டும். தெய்வ நம்பிக்கையும் கூட்டுவழிபாடுகளும் சர்வசமயக் கூட்டுப் பிரார்த்தனைகளும்தான் நாட்டையும் காப்பாற்றும்; வீட்டையும் காப்பாற்றும்.

பங்குச் சந்தை வருட முற்பகுதியில் ஏற்றமாகவும், குருப்பெயர்ச்சிக்கு பிறகு வீழ்ச்சியாகவும் அமையும் தங்கம், வெள்ளி, கல் நகைகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். என்றாலும் புதுப்புது ஜுவல்லரி கடைகள் திறக்கப்பட்டு, போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவிப்பார்கள். கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும்; தொலைபேசி, அலைபேசி, தொலைக்காட்சி விலையும் குறையும். 

சினிமாத் துறையில் புதுப்புது கலைஞர்களும் புதுப்புது டெக்னீஷியன்களும் புதுவரவாக இருக்கும். இத்தனை திறமை படைத்தவர்கள் "இதுவரை எங்கே மறைந்திருந்தார்கள்' என்று ஆச்சரியப்படுமளவு கலைத்துறையில் பிரகாசிக்க முடியும். சின்னத்திரையிலும் புதுப்புதுப் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் அசத்துவார்கள்.

காய்கறி, மளிகைப்பொருள் விற்பனையில் பெரிய பெரிய கோடீஸ் வரர்களும் கம்பெனிகளும் தலையிட்டு சிறுவியாபாரிகளின் தொழிலுக்கு போட்டியாக மாறுவார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கச்சா எண்ணெய், எரிவாயு- கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையேற்றமும் தாங்கமுடியாத சுமையாகத் தோன்றும். மக்களும் எவ்வளவு விலையேற்ற மானாலும், "வாங்கித்தான் ஆகவேண்டும்; வாழ்ந்துதான் ஆகவேண்டும்' என்று சகித்துக்கொண்டு போவார்கள். விலைவாசி உயர்வைப்பற்றி அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வதோடு, போராட்டம் நடத்துவதோடு விட்டுவிடுவார்கள். எந்தப்பயனும் இருக்காது.

நூல் மார்க்கெட் ஜவுளித்துறையில் சில முன்னேற்றமான திருப்பங்கள் தெரியும். அதை நம்பி வாழும் மக்களுக்கும் மறுமலர்ச்சியும் நம்பிக்கையும் உதயமாகும். கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மேலும் பல சலுகைகளை அறிவிக்கும்.

கூட்டுறவு சொசைட்டி வீட்டுக் கடன்களில் அரசு சில தள்ளுபடி சலுகை களை அறிவிக்கலாம். ரேஷன் கடைகளில் சோதனைகள் நடத்தி, ரேஷன் உணவுப் பொருள்களை கடத்தல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையிலும் நீதித்துறையிலும் அதிரடி மாற்றங்களும் புதியவர்களின் நியமனமும் இருக்கும்.

ஆன்மிகத்திலும் இந்து அறநிலையத் துறையிலும், பழைய கோவில்களின் திருப்பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கும். கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை, ஹஜ் யாத்திரை போகும் ஆன்மிக வாதிகளுக்கும் பக்தர்களுக்கும் அரசு பல சலுகைகள் அறிவித்து  உதவிசெய்யும்.