அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/21/13

85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பாலேலாரு :- வேணுகோபால சுவாமியை வழிபடுபவர். பாலாபரமேஸ்வரியை வழிபடுபவர். 

பாலேலாருக்குள் சில பிரிவுகள். 

காமாட்சியம்மனை வணங்குபவர் காமாட்சி பாலிலாரு என்றும் 

புளியமரத்தடியில் வீட்டு தெய்வ வணக்கம் செய்பவர் உணிசமர பாலிலாரு என்றும் 

சங்கர நயினார் கோயிலில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர் சக்கர்குடிபாலிலாரு என்றும் சங்கரங்குடிபாலிலாரு என்றும் அழைக்கப்படுகின்றனர். 

இவர்கள் சங்கர நயினார் கோயிலில் அறுபது கூடி வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர். 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வீட்டுத்தெய்வமாக வணங்குபவர் திருச்செங்கோடு பாலிலாரு என்று அழைக்கப்படுகின்றனர். இன்னும் மநுமகரிஷி கோத்திரத்தினுள்ளும் பாலிலாரு என்ற வங்குசம் இருக்கின்றது. மநுமகரிஷிகோத்ர பாலிலாரு சேலத்தில் பலர் வசிக்கின்றனர்.