அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/10/13

தண்டகம் - 1

சக்தி தரும் சிவசக்தி
 சமச் திரிபுரதகனத்தி
 தேனே அழகிய மானே
 அடியவர் தேடும் தர்மத்தி
 கைத்தல மீதில் வைத்த கபாலம்
 கருவில் சூலத்தி காரண சக்தி
 பாலைவனத்தில் கண மகிஷாசூரன் 
 தந்து முடித்தலை அற்று வீழ்ந்திட
 சபையில் புவியதிர
 சபையில் நடமிடும்
 குமரி வராகி சௌடேஸ்வரி உமையே 

கபிஞ்சலன் சாபம் களைந்தது

காடும் மலையும் கடந்து செல்லும் போது ஒரு அடர்ந்த காட்டினிடைக் கொடிய சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டது. தேவலரைக் கண்டதும் அவர் மீது பாய்ந்து தாக்கியது. உடனே தேவலர் சிங்கத்தின் மீது பல அம்புகளை எய்து அதை வீழ்த்தினார். அப்போது சிங்கம் வீழ்ந்த இடத்தில் புனிதமான உடலோடு ஒருவன் ஒரு வானவூர்தியில் ஏறக்கண்டார். அதைக் கண்டு பெரிதும் வியப்புற்ற தேவலர் ' நீ யார்? ' என வினவினார். அவன் நான் குபேரனின் அலுவலரில் ஒருவன். என் பெயர் கபிஞ்சலன் என்பது. ஒரு நாள் நான் வேட்டைக்குப் போனேன். அங்கு அழகான மான் ஒன்றைக் கண்டேன். அதன் மீது அம்பை எய்தினேன். அம்பின் அடிபட்ட மான் காயமுற்று அருகிருந்த ஆசிரமத்திற்குள் பாய்ந்து ஓடியது. அது கௌதம முனிவரின் ஆசிரமம் ஆகும். நான் அடிபட்ட மானைத் துரத்திக்கொண்டு ஆசிரமத்துக்குள் போனேன். அடிபட்ட மானையும் அதைத் தொடர்ந்து என்னையும் கண்ட கௌதம முனிவர் பெரிதும் சினங்கொண்டு என்னைச் சிங்கமாக ஆகுமாறு சபித்தார். சாபத்தைப் பெற்ற நான் அச்சமுற்று முனிவரை வணங்கி மன்னிக்குமாறும் சாபவிமோசனம் அளிக்குமாறும் வேண்டினேன். அவரும் சினந்தணிந்து இரங்கி, தேவலமுனிவரால் உன்சாபம் நீங்கும் என்று அருளினார். சாபத்தால் சிங்கமாய்ப் பல விலங்குகளை அடித்துத் தின்று வந்த நான் இன்று தங்களால் சாபநீக்கம் பெற்றேன். தாங்கள் இக்காட்டின் வடக்கே மூன்று யோசனை தூரத்தில் உள்ள வாலகில்லிய முனிவர் ஆசிரமத்துக்குப் போய் அம்முனிவரை தரிசித்துக் கொண்டு உங்கள் பிரயாணத்தைத் தொடருங்கள். என்று கூறி விமானமேறி விண்ணிடை மறைந்தான்.

தேவலர் கருவிகள் பெற்றது

ஆட்சியை ஏற்று செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திய தேவலர் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தார். உடனே சுபுத்திமான், காரியதக்கன், நீதிவேந்தன், தீர்க்கதரிசனன் என்னும் நான்கு அமைச்சர்களையும் அழைத்து "நான் ஆடைகள் நெய்வதற்கு வேண்டிய கருவிகளை பெறுவதற்காக மயனிடம் செல்கிறேன். நான் வரும் வரை நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்யுங்கள்" என்று பணித்து விட்டு மேரு மலையை நோக்கிப் புறப்பட்டுப் போனார்.

29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம்

தட்சப் பிரஜாபதியின் பெண்கள் இருபத்தேழுபேர் நட்சத்திரப்பதம் பெற்றனர். இவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் தட்சன் மணமுடித்துத் தந்தான். கிருத்திகைப் பெண்கள் அறுவரால் ஆறுமுகப் பெருமான் வளர்க்கப்பட்டான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையின் முருகன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டான். இப்பெருமானின் பெயர் தாங்கிய ஒரு மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மரளேலாரு :- மரளி என்பது கொள்ளே காலம் அருகில் உள்ள ஓர் ஊர்.
மரளி என்பது புகழ் பெற்ற சந்தை கூடும் இடம். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கலகண்டதவரு :- கலகண்டம் - கற்கண்டு. கற்கண்டு போல் பேசக் கூடியவர்.
மசனதவரு :-

28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- அகத்தியர், வியாசர், இவர்களுடன் சேர்ந்து இருந்தார். கண்ணன் யாகம் செய்த போது யாகத்தின் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்தார்;இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடகதவரு :- கோடகம்-கர்நாடகத்தில் உள்ள ஓர் ஓர். அவ்வூரைப் பூர்வீகமாக் கொண்டவர்.
கௌசல்யதவரு :- ஸ்ரீ ராமபிரானின் தாயான கௌசல்யைதேவியை வணங்குபவர்.
கௌரவதவரு :- மிக்க கௌரவத்துடன் வாழ்பவர்.
பாலகதவரு :- பாலகருக்குப் பால் வழங்கும் தர்மம் செய்பவர்.
பாவனதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். தம்மைச் சிவமாகப் பாவித்துக் கொள்பவர்.
புக்கராஜூதவரு :- குடும்ப மூதாதையரில் ஒருவர் புக்கராஜூ எனப் பெயர் கொண்டவர். அவர் பெயரையே வம்சமாகக் கொண்டவர். புக்கராஜூ வம்சமாகக் கிளைத்தவர்கள்.
புத்சலதவரு :- புத்சலம் என்பது ஒருவகைக் காய். தமிழில் இது வரிக்குருமத்தங்காய் எனப்படும். இக்காயைக் கொண்டு பலவித வைத்தியங்கள் செய்தவர்.
கம்பதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை விழாக் காலங்களிலும் பிறவிழாக்காலங்களிலும்
கம்பம் நடுதல், பெயர்த்தல் உரிமை பெற்றவர்.
கொடி மரங்கள் தானம் செய்தவர்.
அனைவரையும் வாதில் வெற்றிக் கம்பம் நட்பவர்.
இக் கோத்திரத்தில் காணப்படும் வேறு சில வங்குசங்கள் ரவராதவரு, பௌராவதவரு, சப்பைய்யதவரு.

27 .காமுக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாகராஜதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். மூத்த மகனுக்கு நாகராஜன் எனவும் மூத்த மகளுக்கு நாகம்மா எனவும் பெயர் சூட்டுவார்கள்.
மாகாந்ததவரு :- மாகந்தம் கிழங்கு வகைகளுள் ஒன்று. இக்கிழங்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ரசாலதவரு :- நவரசங்களில் வல்லவர். நவரசங்களாவன :
வீரம், அச்சம், இனிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்ரம், நகை மற்றும் சமநிலை
என்னும் இவ்வொன்பதும் நவரசங்கள் எனப்படும். இவ்வொன்பான் சுவைகள் மிக்க கவிதைகள் இயற்றியவர்.
யோகதவரு :- யோக மார்க்கத்தில் வல்லவர்கள். சிறந்த யோகிகள்.
சதரின் மேல் தங்க தந்தவரு :-

26 .காபால மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- ஒருமுறை ஜகந்நாத சேத்திரத்தில் இம்மகரிஷி இறந்த பிள்ளையை பெருமாள் முன் கொண்டு சென்றார். பெருமாளைப் பிரார்த்தித்துப் பிள்ளையை உயிர்ப்பித்தார்.
பெருமாளின் அருளினுக்கு மகிழ்ந்தார். மகரிஷி, அங்கு ஸ்வேதமாதவப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். முனிவர் பெயர் இவ்வரலாற்றில் கபால கௌதமரிஷி எனக் குறிக்கப்படுகின்றது.
சிவமூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று காபாலி என்பது.
ஏகாதச ருத்திரர்களுள் ஒருவர் காபாலி என்பவர். இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கங்காவாரு :- கங்கையை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
செங்கணதவரு :- செங்கஞ்செடி அடியில் வீட்டு தெய்வ வழிபாடு செய்பவர்.
முக்திதவரு :- இவ்வங்குசத்தில் முன்னோர் ஒருவர் ஜீவன் முக்தி அடைந்தவர். அவர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ம்ருத்துதவரு :- ம்ருத்து - மண் : இவர்கள் மண்வழிபாடு செய்பவர். பஞ்ச பூதங்களில் பிருதிவியை வழிபடுபவர்.
ஐந்துதவரு :- ஐந்து - சந்திரன் : இவர்கள் பௌர்ணமி பூசனை செய்வர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி என்னும் ஊரினர்.