அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/10/13

28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- அகத்தியர், வியாசர், இவர்களுடன் சேர்ந்து இருந்தார். கண்ணன் யாகம் செய்த போது யாகத்தின் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்தார்;இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடகதவரு :- கோடகம்-கர்நாடகத்தில் உள்ள ஓர் ஓர். அவ்வூரைப் பூர்வீகமாக் கொண்டவர்.
கௌசல்யதவரு :- ஸ்ரீ ராமபிரானின் தாயான கௌசல்யைதேவியை வணங்குபவர்.
கௌரவதவரு :- மிக்க கௌரவத்துடன் வாழ்பவர்.
பாலகதவரு :- பாலகருக்குப் பால் வழங்கும் தர்மம் செய்பவர்.
பாவனதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். தம்மைச் சிவமாகப் பாவித்துக் கொள்பவர்.
புக்கராஜூதவரு :- குடும்ப மூதாதையரில் ஒருவர் புக்கராஜூ எனப் பெயர் கொண்டவர். அவர் பெயரையே வம்சமாகக் கொண்டவர். புக்கராஜூ வம்சமாகக் கிளைத்தவர்கள்.
புத்சலதவரு :- புத்சலம் என்பது ஒருவகைக் காய். தமிழில் இது வரிக்குருமத்தங்காய் எனப்படும். இக்காயைக் கொண்டு பலவித வைத்தியங்கள் செய்தவர்.
கம்பதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை விழாக் காலங்களிலும் பிறவிழாக்காலங்களிலும்
கம்பம் நடுதல், பெயர்த்தல் உரிமை பெற்றவர்.
கொடி மரங்கள் தானம் செய்தவர்.
அனைவரையும் வாதில் வெற்றிக் கம்பம் நட்பவர்.
இக் கோத்திரத்தில் காணப்படும் வேறு சில வங்குசங்கள் ரவராதவரு, பௌராவதவரு, சப்பைய்யதவரு.

No comments:

Post a Comment