அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/10/13

26 .காபால மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- ஒருமுறை ஜகந்நாத சேத்திரத்தில் இம்மகரிஷி இறந்த பிள்ளையை பெருமாள் முன் கொண்டு சென்றார். பெருமாளைப் பிரார்த்தித்துப் பிள்ளையை உயிர்ப்பித்தார்.
பெருமாளின் அருளினுக்கு மகிழ்ந்தார். மகரிஷி, அங்கு ஸ்வேதமாதவப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். முனிவர் பெயர் இவ்வரலாற்றில் கபால கௌதமரிஷி எனக் குறிக்கப்படுகின்றது.
சிவமூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று காபாலி என்பது.
ஏகாதச ருத்திரர்களுள் ஒருவர் காபாலி என்பவர். இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கங்காவாரு :- கங்கையை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
செங்கணதவரு :- செங்கஞ்செடி அடியில் வீட்டு தெய்வ வழிபாடு செய்பவர்.
முக்திதவரு :- இவ்வங்குசத்தில் முன்னோர் ஒருவர் ஜீவன் முக்தி அடைந்தவர். அவர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ம்ருத்துதவரு :- ம்ருத்து - மண் : இவர்கள் மண்வழிபாடு செய்பவர். பஞ்ச பூதங்களில் பிருதிவியை வழிபடுபவர்.
ஐந்துதவரு :- ஐந்து - சந்திரன் : இவர்கள் பௌர்ணமி பூசனை செய்வர்.
காருபர்த்திதவரு :- காருபர்த்தி என்னும் ஊரினர்.

No comments:

Post a Comment