அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/24/14

சாமுண்டி பாடல் -(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

 சாமுண்டி பாடல்

சாமுண்டியே நீனு தங்க மொகு அம்மா
நங்கே கொடுபேக்கு நின்னு அருளம்மா

அழகு சாமுண்டியே !
மைசூரு சாமுண்டியே !
பெட்டது சாமுண்டியே !
தேவாங்க சாமுண்டியே !

பா எந்து கூங்கு முந்தே -பந்துடுவே நன்னு தாயே !
பா பா எந்து கூங்கு முந்தே -பந்துடுவே நன்னு தாயே !
கொடு எந்து கேளு முந்தே-கொட்டுடுவே நன்னு தாயே !

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே

கத்தி மொனேலி  நித்து பருவே நன்னு தாயி அம்மா
சிம்மதுமேல பவனி பருவே நன்னு தாயி அம்மா
பெட்டதுமேல காட்சி கொடுவே நன்னு தாயி அம்மா
தொட்டுது எல்லா நெடசி கொடுவே நன்னு தாயி அம்மா

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே

சங்கு சக்ர பில்லு அம்பு கத்தி கப்பு சாட்டை சூலம்
பிரம்பு குங்குமம் உடுக்கை கொண்டவளே நன்னு தாயி அம்மா
சூரன கொந்த வக்கிரகாளி நன்னு தாயி அம்மா

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே


நம்மு குல காத்து ஒள்ளவர கொடுதாயே
ஒந்து சேரி எல்லாருனு கொண்டாடு பேக்கு நன்னு தாயி அம்மா!!!

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே !

திருமதி. ஜானகி ராமசாமி
செங்கல்பட்டு



PHOTO EDITING:(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)





PHOTO EDITING:


ஆதி அந்த எல்லாணு நீனேத்தா நம்மம்மா தேவி சௌடாம்பிகே நீனு உய்யால ஆடுவம்மா அருளுகொட்டு பொருளுகொட்டு நின் ஊமகையெல்லா தாமரை ஊமவாங்க கெம்பு ஆயி அதவம்மா
நின் மக்களு நாவு கூங்க ஒடிபரா அம்மா
நீனே நம் எண்ணுகளு நீனேதாநம்மமா
தேவாங்க மகாிஷியே அருளுகொட்டவம்மா
நீனு பந்து இல்லி உய்யால ஆடுவம்மா
சங்கு சக்கர கதாதாாி சிம்மவாகன ஏராவம்மா
பூலோகதலி தவ இத்த நம்மு அம்மா
நீனே தா நமமு மொகு உய்யால ஆடுவம்மா
தேவி நீனு பந்து உய்யால ஆடுவம்மா
சக்தி சாமுண்டி ஜோதியாங்கா நின்ன நாவு தர்ஷண பாடிாி ஒங்காாி அம்மா நீீனு நம்மு face book ya பாவம்மா



மணி , கருங்கலபட்டி

சக்தி அன்னை வழிபாடு:- முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014

சக்தி அன்னை வழிபாடு:-

பக்திக் கிவரெனப் பார்போற்றும் தேவாங்கர்
சக்திக் கடலே! சரணடைந்தோம் -முக்திக்கு
மூலமாய் நிற்கும் முதல்வியே! இங்குநீ
கோலமாய் நின்னருளைக் கூட்டு



எழுத்து -  சதீஷ் , புலிகுத்தி, சேலம்

ஒய்யார பவனி வரும் சாமுண்டி---(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

ஒய்யார பவனி வரும் சாமுண்டி

வெள்ளைக்குதிரை ஏறி
வெள்ளிக்குடை பிடிக்க
விளையாடி வருபவளே !!

ஹயக்ரீவர் மீதேறி
ஞானம் அருள்பவளே !!


மைசூரு மலைமீது அரசாளும் நாயகி நீ
பெட்டது சவுண்டம்மன் வடிவாக
பேழை மூடியிலே ஜமுதாடு வடிவெடுத்து
வீரமாக ஒய்யார பவனி வரும் சாமுண்டி !!!!!

வரம் தருவாய் தாயே...... (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

என் தாயாக வந்த தாயிற்கு சமர்ப்பனம்...
வரம் தருவாய் தாயே......
என் பாவத்தை போக்குவதற்காக இம்மண்ணில் எனக்காக உருவெடுத்தவளே...
உலகில் உள்ள அனைத்து இன்னல்களையும் எனக்காக தாங்கிக்கொண்டவளே...
பூர்வ ஜென்மத்தில் பாவங்களை செய்து நரகத்தில் தவிக்கும் பொழுது, எமனிடம் மன்றாடி என்னை கருவாக உயிர்பித்தவேளே....
நான் செய்த பாவங்களை ஒவ்வொரு நாளாக சுமந்து கருவறையில் ஒன்பது திங்களில் உருகொடுத்தவளே...
என்பாவத்தினை பாசமாக ஏற்று இந்தபாவியையும் ஈன்றேடுத்தவளே.....
பாசத்தை பாலாக்கி என் பிண்டமெங்கும் பரவச்செய்து பாவத்தை சுத்தம் செய்தவளே....
புதிதாய் உருவம் கொடுத்து என்னை மிளிரச்செய்தவளே...
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தை உன்னால் கழித்தேன் அம்மா,
ஆனால் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கழிக்க முடியாத பாவத்தை செய்து விட்டேன் தாயே.... உன்னை வருத்தி.
இதை கழிக்க உன்னை நான் சுமக்கவேண்டும் என் மகளாக.
வரம் தருவாய் தாயே......




எழுத்து - திரு ஜெயக்குமார், திருப்பூர் 

சாமி அலங்காரப்பாட்டு------- (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)


பாடியவர்கள்
செல்வி. R. பவித்ரா.
செல்வி. S. கீர்த்தனா
இசை – திரு. நித்திஷ் செந்தூர்

சாமி அலங்காரப்பாட்டு

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

தாழை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ போலவே நம்ம சவுண்டம்மா
தலை அலங்காரம் பாருங்கம்மா

நெல்லிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
நெத்தி வரிசையை பாருங்கம்மா

பாத்சரம் மம்மா பாதசரம் – தாயே
பத்து விரலுக்கும் பாதசரம்
பத்து விரலுக்கும் பாதசரம்
இருட்டு நாட்டிலே போட்டு நடந்திட்டா
எங்கும் ஜொலித்திடும் பாதசரம்.

கோவை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பூ போலவே தாயி சவுண்டம்மா
கொண்டை அலங்காரம் பாருங்கம்மா

குறிஞ்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ போலவே நம்மு சவுண்டம்மா
பல்லின் வரிசையைப் பாருங்கம்மா.
மான் கூவும் நல்ல மயில் கூவும் – தாயே
வன்னி மரத்துக் குயில் கூவும்
வன்னி மரத்துக் குயில் கூவும்
கொண்டை பெருத்தவ நம்ம சவுண்டம்மா
கொண்டை மேலே ரெண்டு கிளி கூவும்.

பாகை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
பாத சிலம்பணி பாருங்கம்மா

முல்லை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
முக அலங்காரம் பாருங்கம்மா.

பிச்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூப் போலவே நம்ம சவுண்டம்மா
பின்னல் வரிசையைப் பாருங்கம்மா

தாமரை கொடியை பாருங்கம்மா – தாயே
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் போலவே நம்ம சவுண்டம்மா
தன்னெழில் தோற்றமும் பாருங்கம்மா.

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே