அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வத்த பத்ரதவரு :- அஸ்வத்த பத்ரம் - அரசமர இலைகள். இவ்விலைகளைக் கொண்டு வழிபடுபவர்.
குறிப்பு :- ஒன்பது கணுக்கள் கொண்ட பச்சைமூங்கிலில் அரசங்கொழுந்து அடங்கிய கொத்தைச் சேர்த்துக் கட்டி, ஸ்தளது கொம்பு என்று பெயரிட்டு மணவறை ஜோடித்துத் திருமணம் புரியும் வழக்கம் இன்றும் உள்ளது. மங்கள காரியங்களுக்கு அரசமர இலைகள் பயன்படுகின்றன.
அஸ்வதவரு :- குதிரைகளைச் செல்வமாகக் கொண்டவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்.
அஸ்வவைத்யதவரு :- அசுவினி தேவர்களைப்போல் வைத்தியத்தில் வல்லவர், குதிரை மருத்துவத்தில் சிறந்தவர்.
காஷ்மீரதவரு :- காஷ்மீர நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பதவரு :- மைசூரில் உள்ள கொப்பம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்பூரம் என்னும் இசைக் கருவி வாசிப்பவர்.
துளசிதளதவரு :- துளசிதளத்தால் வழிபாடு செய்பவர். துளசிச் செடியடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர்.
நரசிம்மதவரு :- நரசிம்ம சுவாமியை வழிபடுபவர்.
மடம்வாரு :- மடாலயங்கள் கட்டித் தர்மம் செய்தவர்.
பாபனபல்லெதவரு :- பாபனபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நரசாபட்டுதவரு :-
ப்ரெண்டதவரு :-
மதிரெதவரு :- வட மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

No comments:

Post a Comment