அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

43 .கௌதம மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- ரிக் வேதத்தில் பல ரிக்குகளுக்கும் சாம வேதத்தில் பல கானங்களுக்கும் கௌதமர் கர்த்தா ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குத்திதவரு :- பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குத்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குப்பிதவரு :- தும்கூர் மாவட்டத்தில் உள்ள குப்பி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்மளாபுரதவரு :- கர்நாடகாவில் உள்ள கும்மளாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சண்டிகனவரு :- ஸ்ரீ சண்டிகேஸ்வரரை இஷ்ட தெய்வமாக வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
கொண்டிசூலதவரு :- சூலாயுதங்கள் ஒரிலைச்சூலம், ஈரிலைச் சூலம், மூவிலைச் சூலம் எனப்பலவகைப்படும். இவர்கள் ஒரிலைச் சூலம் ஏந்தியவர்கள். இவ்வங்குசம் ஒண்டி சூலதவரு என்று இருக்கவேண்டும்.
சோபனதவரு :- அழகும் மங்களமும் உடையவர். குண அழகும் உடல் அழகும் கொண்டவர்.
கோமுகதவரு :- பசுவின்முகம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.
சௌட வித்யலதவரு :- தம் கல்வித்திறமையால் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு நூல்கள் இயற்றிவர்.
தத்தூரபூலதவரு :- ஊமத்தைப்பூக் கொண்டு வழிபட்டவர். சிவபிரான் மகிழ்ந்த மலர்களுள் ஒன்று ஊமத்தை ஒன்று.
தேவாரதவரு :- மதுரை போடி நாயக்கனூர் அருகில் உள்ள தேவாரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தானபுத்ரதவரு :-
1) சந்தான கோபால கிருஷ்ண பூசனை செய்பவர்.
2) சந்தான லட்சுமி பூசனை செய்பவர்.
3) புத்திர தானமுறையில் - தத்தெடுத்தல் - வந்தவர்.
4) புத்திரனைத்தத்துக் கொடுத்தவர் என்று பல பொருள் கூறுகின்றனர்.

தேவதைதவரு :- ஸ்ரீ தேவியை வழிபடுபவர்.
நில லோகதவரு :- பூவுலகத்தவர். கணக்கற்ற நில புலன்களுடன் வாழ்கின்றவர்.
பசுலதவரு :- பசுக்களுக்கு உணவிட்டு வணங்குபவர்.
குறிப்பு :- தேவாங்கர் தினமும் விருந்தினருடன் உணவு உண்பவர்கள். விருந்தினர் இல்லாத தினங்களில் பசுவையே விருந்தினராகப் பாவித்து " ஓம் கோப்யஸ்ச்ச நம " என்னும் மந்திரத்துடன் உணவு கொடுத்து அதன்பின் உண்பார்கள்.
பச்சலதவரு :- பச்சைக் கற்களான மரகதங்களை விரும்பி அணிபவர். மரகதக்கற்களை வியாபாரம் செய்தவர்.
பச்சாமன்திதவரு :- பச்சை நிற சாமந்திப் பூக்களால் வழிபாடு செய்பவர்.
பன்சலதவரு :- பஞ்ச யக்ஞங்கள் செய்பவர்.
பஞ்சயக்ஞதவரு :- ஐந்து யாகங்கள் செய்பவர்.
பாமுலதவரு :- பாமு - பாம்பு; நாகவழிபாடு செய்பவர்.
பலராமுலுதவரு :- பலராமனை வழிபடுபவர்.
பீரகதவரு :- பீரக - பீர்க்கங்காய். இதனை விரும்பி உண்பவர்.
புஷ்பதந்ததவரு :- தேவாங்க அவதாரங்கள் ஏழனுள் புஷ்பதந்த அவதாரம் ஒன்று. அவரை வழிபடுபவர்.
பொம்மன்சுவாரு :- பொம்மண்ண சுவாமி வழிபாடு உள்ளவர்.
ராமாயணவாரு :- ராமாயண காவியத்தில் வல்லவர். ராமாயண உபந்யாசம் சிறப்பாகச் செய்பவர்.
பாருகத்திதவரு :-
பேரிசெட்டிதவரு :-
சக்குத்திதவரு :-

No comments:

Post a Comment