அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/29/13

60. சனக சனந்த மகரிஷி கோத்ரம்

சனக சனந்த, சனத்குமார மற்றும் சனத்து ஜாத ஆகிய இம்மூன்று மகரிஷிகளும் பிரம்மாவின் குமாரர்கள்.

1) சனகர்
2) சனந்தனர்
3) சனத்குமாரர்
4) சந்தஜாதர்

என நால்வரும் பிரம்மாவின் பிள்ளைகள்.இவர்களே சனகாதி முனிவர்கள் என்று அழைக்கப்படுவர். இங்கு 60 எண்ணுள்ள கோத்ரத்தில் சனக சனந்த என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய நூல் ஒன்றில் வந்த பிழை.

இது சனக மகரிஷி கோத்ரம் சனந்தன மகரிஷி கோத்ரம் எனத் தனித்தனியே இருக்க வேண்டும்.

பிரம்ம தேவனின் படைப்பும் பத்து விதங்களாம். அவை;
1) மஹத்
2) அகங்காரம்
3) தன்மாத்திரை
4) இந்திரியங்கள்
5) வைகாரிக தேவதைகள் - மனஸு
6) ஐந்துவகை தாமஸிக சிருஷ்டி
7) தாவரங்கள்
8) மிருகங்கள்
9) மனிதர்
10) குமாரர்கள்
என்பனவாம்.

இந்தத் தாமஸிக சிருஷ்டி பிரும்மாவின் விருப்பப்படி இல்லை. எனவே அவர் தம் மனதைச் சுத்தப்படுத்தித் தியானம் செய்தார். மனத்தூய்மையுடன் பிரும்மா இருந்த போதுதான் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்ஜாதர் என்னும் நால்வரும் உதித்தனர்.

இவர்கள் வினைக்கருமங்களுக்கு உட்படாதவர்களாய் இருந்தனர். இவர்களால் பிரஜா சிருஷ்டி ஏற்படவில்லை. பிரம்மா இவர்களைப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டியும் இவர்களின் மனம் மோட்ச மார்க்கத்திலேயே ஈடுபட்டு விட்டது.

இந்நால்வரும் இயற்கையாகவே மாபெரும் ஞானிகள். ஜீவன்களுடைய புத்தியை ஞானமார்க்கத்திற்குத் திருப்புபவர்கள். மகா யோகிகள் ஸ்வபாவ பிரமச்சாரிகள். இவர்களுக்குத்தான் கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தியாக இருந்து சிவபிரான் சின்முத்திரை மூலமாக ஞானபோதகம் உபதேசித்தார்.

ஒரு காலத்தில் இந்நால்வரும் மஹா விஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். ஏழாவது வாயிலில் ஜயன் விஜயன் என்ற துவார பாலர் தடுக்கவே கோபங்கொண்டு அவர்களைச் சபித்தனர்.

சாபம் பெற்ற ஜயனும் விஜயனும் தான்

1) ஹிரண்ய கசிபு - ஹிரண்யாக்ஷன்
2) இராவணன் - கும்பகருணன்
3) சிசுபாலன் - தந்தவக்ரன்

என்ற மூன்று பிறவிகள் எடுத்துப் பின் பகவானால் சங்கரிக்கப்பட்டு வைகுண்டம் சேர்ந்தனர். சிவபுராணங்களில் துருவாசர் சபித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

கூர்மபுராணம், வான்மீகி இராமாயணம், பாரதம், லிங்கபுராணம் ஆகியனவற்றில் இவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொல்லம்தவரு :- வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள பொல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மங்களம்தவரு :- பெஜவாடா அருகில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பானகாலு நரசிம்ம ஸ்வாமி வீற்றிருக்கும் மலை இம்மலை. ஸ்வாமிக்குப் பானகம் கொண்டு வருவதாக வேண்டிக் கொள்கின்றார். அதனால் பானகாலு நரசிம்மஸ்வாமி என்று திருநாமம்.
சாலமனெயவரு :- தெலுங்கில் தாழ்வாரத்திற்குச் சால என்று பெயர். இது கன்னடத்தில் சாளை என்று வழங்கப்படுகின்றது. இது பற்றி வந்த ஒரு பெயர்.
குபேரதவரு :- முதல் மகனுக்குக் குபேரன், குபேந்திரன் என்ற பெயர் வைப்பவர்கள் வருஷம் இரண்டு முறை குபேரஜயந்தி கொண்டாடுபவர்.
சன்முகியவரு :- பஞ்சமுகங்கள் கொண்ட காயத்ரியுடன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு ஒரு முகமாக ஆறுமுகங்கள் படைத்துப் பூசனை இயற்றுவது இவர்கள் வழக்கம்.

No comments:

Post a Comment