அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/31/13

62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம்

60. சனக சனந்த மகரிஷி கோத்ரத்தில் காணவும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அரவிந்ததவரு :- அரவிந்தம்-தாமரை. தாமரை மலர் கொண்டு பூசிப்பவர்.
அநந்ததவரு :- அநந்த பத்ம நாப சுவாமியையும் அநந்தனையும் பூசிப்பவர். அநந்தன் - ஆதிசேஷன்.
கோரண்டலதவரு :- கர்நாடகத்தில் உள்ள கோரண்டலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சீதாங்கனதவரு :- அங்கன = பெண்; சீதாதேவியை வழிபடுபவர்.
சோமுகதவரு :- சிவலிங்கத்தின் நடுப்பாகத்திற்குச் சோமுகம் என்று பெயர். சோமுகத்தில் லிங்கம் வைத்தோ அ சாளக்கிராமம் வைத்தோ பூசிப்பவர். இது சோமுகத்தட்டம் எனப்படும். இவர்கள் எந்தத் தானம் செய்தாலும் இத்தட்டில் வைத்துத்தான் தானம் செய்வார்கள்.
தப்படிதவரு :- தப்பு என்னும் வாத்தியம் முழங்கப் பூசனை செய்பவர். தாசர்கள் இவ்வாத்தியத்தினைத் தம் கக்கத்தில் வைத்து வாசிப்பர். இவர்கள் தப்பு வாசிக்கும் தாசர்களாக இருக்கலாம்.
அரளம்தவரு, போளெம்தவரு, அலசதவரு, வும்மடிதவரு

No comments:

Post a Comment