அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/25/13

54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம்

இவர் ஸ்ருங்கி ரிஷியாவார். சேலத்தில் கடுபுலதவரு என்னும் கடுபேலாரு தங்களைச் சந்திர மகரிஷி கோத்ரம் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் சந்திர ஜடாதர மூர்த்தியையும் சந்திரனையும் வழிபடும் பழக்கம் கொண்டு இருக்கின்றனர். சந்திரஜடாதரனை; சந்திரன் வழிபடுவதால் தங்கள் ரிஷியும் அவரே என எண்ணி இருக்கலாம். இக்கோத்ர ரிஷி கலைக்கோட்டு மாமுனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்கர் ஆவார்.
மகரிஷியின் வரலாறு ஸ்ருங்கி மகரிஷி கோத்ரத்தில் காண்க. இம் மகரிஷியும் ஸ்ருங்கி ரிஷியும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடுபேலாரு :- கடுப்பு - வயிறு. வயிறு பற்றி வந்த ஒரு பெயர்.
சன்னமொசலிதவரு :- தெலுங்கில் முதலைக்கு மொசலி என்று பெயர். இவர்கள் மகராசனம் இட்டு யோகம் செய்வார்கள்.
கூர்மதவரு :- கூர்மாவதாரத்தை வழிபடுபவர்.
கொஜ்ஜம்தவரு :- கொஜ்ஜனதவரு என்பது மருவி கொஜ்ஜம் என வழங்குகின்றது. ஆந்திராவில் உள்ள கொஜ்ஜனம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தர்மபுரம்தவரு :- அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நந்தவரம்தவரு :- ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் நந்தியால் தாலுக்கா பானியம் புகை வண்டி நிலையத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ள ஓர் ஊர் நந்தவரம்.
" சௌடேஸ்வரி நின்னு சாலபூஜலு சேய " என்னும் தண்டகத்தில் " நந்தவரமந்து நெலெ கொன்ன நைகதாம்ப " என்று நந்தவரம் என்னும் ஊர் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
நரசிம்மதவரு :- நரசிம்மமூர்த்தியை வழிபடுபவர்.
பாரததவரு :- மஹாபாரதத்தில் வல்லவர். பாரதப் பிரசங்கம் செய்பவர்.
பர்வத வஸ்திராலதவரு :- பர்வதம் எனில் ஸ்ரீ சைலம். ஸ்ரீ சைலத்திற்குக் கொடித் துணி நெய்து கொண்டு செல்லும் திருப்பணி செய்பவர்.
குறிப்பு : - ஒரு முழ அகலத்தில் தினம் ஒரு முழமாக நெய்து 365 நாட்களில் 365 முழம் நெய்து முடித்து அதனை எடுத்துக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொடித்துணியாக வழங்குபவர். தேவாங்கரின் ஏழாவது அவதாரம் முதற்கொண்டு இன்றளவும் இத்திருப்பணி நடைபெறுகின்றது.
மாணிக்யதவரு :- மாணிக்க நகை அணிபவர். மாணிக்க வியாபாரம் செய்தவர்.
ருத்திராட்சினவரு :- குடும்பத்தில் ஆண் பெண் இருபாலரும் ருத்திராட்சம் தரிப்பவர்.
ஷடாட்சரிதவரு :- ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பவர். சுப்ரமண்ய சுவாமியை வழிபடுபவர்.
அந்தெலதவரு, அந்தேதவரு, தவனதவரு, துஸ்ஸாதவரு, தூஸெம்தவரு, நுன்காதவரு, பீரதம்தவரு, ஜினகதவரு.

No comments:

Post a Comment