அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/28/13

59 .சவித்திர மகரிஷி கோத்ரம்

காசியப பிரஜாபதிக்கு அதிதி தேவியிடம் அவதரித்த பன்னிருவரில் ஒருவர்.
1). தாதை 2). மித்ரன் 3). அர்யமான் 4). சுக்ரன் 5). வருணன் 6). அஞ்சுமான் 7). பகன் 8). விலச்வந்தன் 9). பூஷன் 10). சவித்திரன் 11). துவஷ்டா 12). விஷ்ணு எனப்பன்னிருவர்.
இவர்கள் ஆதிதேயர் எனவும் ஐயர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
பிரஜைகளைச் சிருஷ்டிப்பதற்காகப் படைக்கப்பட்டு ஆனால் அதில் ஈடுபடாமல் தவத்திலேயே கருத்து செலுத்திய உத்தமர்கள் இவர்கள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கட்டாரியதவரு :- கட்டாரி - குறுங்கத்தி வழிபாடு செய்பவர். கட்டாரியை எப்போதும் தரித்து இருப்பவர்.
கூபதவரு :- கூபம் - கிணறு. கிணறு வெட்டித் தந்தவர். தண்ணீர்த் தானம் செய்தவர்.
ஆலபல்லியதவரு :- ஆந்திராவில் உள்ள ஆலபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

No comments:

Post a Comment