அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/23/13

அரம்பையின் சாபம்

இனி தேவல முனிவர் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலையை விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினார். திரும்பி வரும் வழயில் எழில் மிகுந்த சோலையும் அதில் பன்னிறப் பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றும் இருக்கக் கண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு களைப்புத் தீர அந்த தடாகத்தில் குளித்து விட்டு அதன் கரை மீது அமர்ந்தார். கயிலையில் தேவலரும் தேவர்களும் கூடியிருந்த தேவசபையில் நாட்டியமாடிய தேவ கன்னியரில் ஒருவளான அரம்பை, தேவலரின் பேரழகில் ஈடுபட்டு மனதைப் பறிகொடுத்திருந்தாள். தேவலரைத் தனிமையில் சந்திக்கக் காலம் எதிர்நோக்கி இருந்தாள். தேவலர் பூஞ்சோலையில் தனித்து இருப்பதை அறிந்து அவர் முன் தோன்றினாள். பக்கத்திற் சென்றாள். அமுதொழுகப் பேசி தன் காதலைப் புலப்படுத்தினாள். இவளது காதலையும் காதற் பேச்சுக்களையும் கேட்ட தேவலர் சிவ சிவ என்று காதுகளைப் பொத்திக் கொண்டார். 'அரம்பையே! நான் ஒரு பிரம்மச்சாரி. காம இச்சை சிறிதும் இல்லாதவன். உன் காதலுக்கு நான் உரியவன் அல்லன். உன்னை நாடும், உன் விருப்பத்திற்கு ஏற்ற தேவேந்திரனும் தேவர்களும் தேவ உலகில் உள்ளனர். அவர்களிடம் போ. மேலும் கணிகையர் உறவு, புகழ், புண்ணியம், அறிவு, மனவுறுதி, குணம், தவம் யாவற்றையும் அழித்து பாவக்கடலில் ஆழ்த்தும். ஆதலால் என்னை விட்டு நீங்கி உன்னை விரும்பும் தேவர்களிடம் போய் உன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்' என்று மொழிந்தார். இதைக் கேட்ட அரம்பை மனம் புழுங்கி, என்னைச் சாதாரண அரம்பை மகளிரில் ஒருவளென எண்ணி என் பெருமையை அறியாதவர் போல் பேசுகின்றீர்கள். பற்பல யாகங்களை முறையாகச் செய்து முடித்த முனிவர்களுக்கே என்னுடைய போக இன்பம் கைகூடும். என்று ஆதிநூல்கள் பகர்வதை அறியீர் போலும். தவத்தின் மிக்க அத்திரி முனிவர் போன்ற தவசிரேட்டா்களெல்லாம் என்னை விரும்பி மோன நிட்டையை விட்டு என்னை அணுகினர். எனினும் நான் அவர்களைக் கூடினேன் அல்லேன். நீரோ வலிய வந்த என்னைப் புறக்கணிக்கின்றீர். இது முறையல்ல என்று வாதிட்டாள். இவ்வாறு அரம்பை கூறிய பேச்சுகளுக்கும் வாதங்களுக்கும் முனிவர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அரம்பை முனிந்து " நீ பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புருவாயாக" என்று சாபமிட்டு அமரருலகம் சென்றடைந்தாள். சாபம் பெற்ற தேவலமுனிவர் இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணி மனங்கலங்காது ஆமோத நகரை அடைந்தார்.

No comments:

Post a Comment