அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

9.அத்திரி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- இம்மகரிஷி கடுமையான தவவிரதம் உடையவர். அசுரர்கள் ஒருமுறை இவரை நெருப்பில் தள்ளி விட்டனர். அசுவினி தேவர்கள் மகரிஷியைக் காப்பாற்றினர்.
ரிக்வேதம் 9-6-7; 10-143 வது ரிக்குகளுக்கும்
ஸாமவேதம் 1-4, 6-4, 8-7 வது சூக்தங்களுக்கும் இவர் கர்த்தா.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கம்தவரு :- பெருத்த வலிமையான உடல் உடையவர்.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவராகி அதனை அனைவருக்கும் கற்பித்தவர்.
கலம்தவரு :- கலம் கலமாக நெல்லைத் தானம் செய்தவர்.
குண்டாவாரு :- உடல் பெருத்து குண்டாக இருப்பவர்.
சம்புடதவரு :- விபூதி சம்புடத்துடன் எப்போதும் காட்சி தருபவர். யாத்ரா தானப் பொருள்களுள் விபூதி சம்புடம் ஒன்று. அதனைத் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
திருமண்வாரு :- திருமண் அணிபவர்.
துண்டாவாரு :- வெட்டொன்று துண்டிரண்டு எனக் கச்சிதமாகப் பேசுபவர்.
பண்டாரம்வாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியின் பிரசாதமான மஞ்சள் ஸ்ரீ பண்டாரத்தைத் தட்டுக்களில் இட்டு ஊர்வலம் கொண்டு வருபவர். இது பண்டாரமெரவணெ என்று அழைக்கப்படுகின்றது.
பிர்ஜாவாரு :- பிர்ஜாவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். ஆந்திராவில் இவ்வூர் உள்ளது.
மல்லிகார்ஜூனதவரு :- மல்லிகார்ஜூன சுவாமியைத் தம் வீட்டு தெய்வமாக வணங்குபவர். இவ் வங்குசத்தார் தம்மூத்த மகனுக்கு மல்லிகார்ஜூனன் என்றும் மூத்த மகளுக்கு மல்லிகா என்றும் பெயர் சூட்டுகின்றனர்.
மால்யம் வாரு :- திருக்கோயிலுக்கும், சுவாமிக்கும் பூமாலை கட்டித் தருவதைத் தருமமாகக் கொண்டவர்.
முடுபுலதவரு :- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம் என்னும் விழா இன்றளவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அவ்வூரிலிருந்து வந்தவர்.
லிங்க தவரு :- லிங்க தீட்சை செய்து கொள்பவர். லிங்க தீட்சை தருபவர். இவ்வங்குசத்தார் ஆண் பெண் பேதம் இன்றி லிங்க தீட்சை செய்து கொள்வர்.
வர்ஜவாரு :- தீமையைத் தள்ளி வாழ்பவர்.
வீரணம்வாரு :- இப்பெயர்தான், வீரண்ணா என்று வழங்குகின்றது. இவ்வங்குசத்தார் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவில் வீரமுஷ்டி வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்.
அந்திலவாரு, சக்கனவாரு, பௌஜூலவாரு, யக்கலவாரு, யத்கலவாரு, யெக்கலவாரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment