அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

18 .உபமன்யு மகரிஷி கோத்ரம்

ரிஷி வரலாறு :- வியாக்ரபாத மகரிஷியின் குமாரர் என்பது ஆதித்ய புராணம். த்ருமன்யு என்பவரின் புத்திரர் என்பது சிவ ரகஸ்யத்தின் கருத்து. இவர் பிறந்த பின் தாய்ப்பால் இன்மையால் அரிசி மாவினைச் சர்க்கரை கலந்து ஐந்து வயது வரை ஊட்டினாள் தாய். இவரின் தாய் இவரை எடுத்துக்கொண்டு தன் சகோதரராகிய வசிஷ்ட முனிவர் ஆசிரமம் சென்றாள். அங்கு வஷிஸ்டரின் பத்தினியான அருந்ததி தேவியார் ஓமம் செய்து மீதம் இருந்த காமதேனுவின் பாலைத்தர, அதனை ஒரு மாதம் வரை உண்டு வளர்ந்தார்.

பின் அன்னை; மகனுடன் தம் ஆசிரமம் சென்றாள். அங்கு பழையபடி அரிசி மாவும் சர்க்கரையும் கரைத்துக் கொடுக்க அது வேண்டாம் காமதேனுவின் பாலே வேண்டும் என அழப் பூர்வத்தில் சிவபூசனை செய்தவர்க்கே அது கிடைக்கும் எனத் தாய் சொன்னாள்.

பின் தம் தந்தையிடம் தீட்சை பெற்றுத் திரிகூட மலையில் தவம் மேற்கொண்டார். சிவபிரான் இவருக்குக் காட்சி தந்து பாற்கடலை இவருக்குத் தந்தார்.

ஒரு முறை இவர் அதிதிகளுக்கு உணவு படைத்தது அந்தப் பரிகலத்தை வெளியில் எறிந்தார். அந்த எச்சம் அங்கு சாபத்தினால் பல்லி உருக்கொண்டு இருந்த தம்பதியர் இருவர் தலையில் பட தலை பொன்னுருவம் அடைந்தது. பூர்வ ஞானம் பெற்ற இருவரும் உபமன்யு முனிவரைத் துதித்து அவரால் தீர்த்த யாத்திரை செய்து சாப விமோசனம் பெற்றனர்.

மரிசீ முனிவரால் பேயுரு அடையுமாறு சில முனி குமாரர்கள் சாபம் பெற்றிருந்தனர். அவர்கள் உபமன்யு முனிவரின் தவத்தைக் கெடுக்க வர பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து அவர்களின் பேயுருவை ஒழித்தார்.

இவரைச் சோதிக்க எண்ணிய சிவபிரான் இந்திரன் உருக்கொண்டு வந்து சிவ நிந்தனை செய்ய அகோராஸ்திர மந்திரம் ஜெபித்து விபூதி எடுத்து இந்திரன் உருவின் மீது வீசினார். அதனை நந்தி தேவர் தடுத்தவுடன் வேதனை கொண்டு சிவநிந்தனை கேட்டபின் உயிர்விட முயலுகையில் சிவபிரான் தரிசனம் தந்து வேண்டிய சித்திகளைக் கொடுத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுகமிகயதவரு :- மிக்க சுகபோகங்களுடன் வாழ்ந்தவர்.
சூரியதவரு :- சூரிய வழிபாடு செய்பவர் . சூரியனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
ஹெக்கடியதவரு :- ஹெக்கடி என்னும் வித்தையில் வல்லவர்.
மோடியதவரு :- மோடி போன்ற வித்தையில் வல்லவர்.
சுப்பண்ணதவரு :- சுப்பண்ணன் என்பவரின் வம்சா வழியினர்.
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் வங்குசங்கள் ஜரீகெயதவரு, சஞ்ஜெயதவரு, சூருமெயயதவரு

No comments:

Post a Comment