அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

20 .கண்வ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த மகள் சகுந்தலை. இச் சகுந்தலையைக் கண்வ முனிவர் கருணையுடன் வளர்த்தார். வேட்டை நிமித்தமாக காட்டிற்கு வந்த துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டான். இருவரும் இதயம் மாறிக் குடியேறினர். கந்தர்வ முறையில் சகுந்தலையைக் கைப்பிடித்தான் மன்னன்.

நாடு திரும்பியவன் சகுந்தலையை மறந்தான். கண்வர் அனைத்தையும் அறிந்தார். அவர்களின் திருமணத்தை அங்கீகரித்தார். சகுந்தலை ஆண் மகவு ஒன்றனைப் பெற்றாள். இக் குழந்தைதான் புகழ் பெற்ற பரதன். இவ்வுத்தமன் பெயராலேயே இந்திய நாடு பரத கண்டம் என்று அழைக்கப்படுகின்றது.

சகுந்தலையை மறந்திருந்த துஷ்யந்தினிடம் அவளையும் மகனையும் முனிவர்கள் புடைசூழ கண்வர் அனுப்பி வைத்தார்; என்பன போன்ற வரலாறுகளை உலகமகா கவியான காளிதாசன் தம் சாகுந்தலம் என்னும் காவியத்தில் கூறியுள்ளான்.

தேவாங்க முனிவரின் ஐந்தாவது அவதாரம் வரரிஷி அவதாரம். இவ்வவதார காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் கவிரத்தினன் என்று பெயர் கொண்ட ஒருவன். வரரிஷி தம் கருணையாலும் காளிதேவியின் வரபலத்தினாலும் கவிரத்தினன் என்ற கல்வியறிவு சிறிதும் இல்லாத அவனை உலக மகாகவியான காளிதாசனாக மாற்றினார். காளிதாசன் வரரிஷியின் சீடன்

" காளிதாசுனகுனு கவுலதார யொசங்கி காசி ரட்சிஞ்சின காளி சரணு....... ஸ்ப்த நகர நிவாஸினி சரணு சரணு சவுடமாம்பிக மமு ப்ரோவு சரணு சரணு " என்னும் தண்டக பத்யம் உணர்த் துவதனைக் காண்க.

கண்வ முனிவர் தவம் செய்கையில் அவரைப் புற்று மூடியது. அப்புற்றிடமாக முனிவரிடம் தவம் அனைத்தும் ஒரு மூங்கிலாக வளர்ந்தது. பிரம்ம தேவன அம்மூங்கிலைக் கொண்டு மூன்று வில் செய்தான்.

1) காண்டீபம் - பிரம்ம தனுசு என்றும்
2) பினுகம் - சிவதனுசு என்றும்
3) சார்ங்கம் - விஷ்ணு தனுசு என்றும் அழைக்கப்படுகின்றன.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஜதவரு :- அஜன் - பிரம்மதேவன்; பிரம்மனை வழிபாடு செய்தவர்.
அங்கம்தவரு :- உடல் அங்கங்கள் வன்மை பெற்றவர்.
அந்தலெதவரு :- அந்தலம் - சிலம்பின் வடிவம் பெற்ற ஒரு வகைக் கழல். இதனை வீரச்சின்னமாக ஒற்றைக் காலில் அணிபவர்.
ஆபரணதவரு :- ஆபரணங்கள் அதிகமாக அணிந்து கொள்பவர்.
இண்டிவாரு :- அநேக வீடுகள் சொந்தமாகக் கட்டிக் கொண்டு வாழ்பவர்.
வஜ்ஜிரதவரு :- வஜ்ஜிரம் பற்றி வந்த பெயர்.
குந்திலவாரு :- குங்குலியவாரு என்பது இவ்வாறு வழங்கப்படுகிறது. பூசனையில் குங்குலிய தூபம் பயன்படுத்துபவர்.
சாரசூத்திரதவரு :- அறுவகைச் சூத்திரங்களில் ஒன்று சாரசூத்ரம் என்பது. இச் சூத்திரத்தில் வல்லவர்.
தூர்வாங்கிரம்தவரு :- தூர்வாங்கிரம்= அருகம்புல். அருகம்புல் கொண்டு பூசனை நிகழ்த்துபவர்.
பந்தருவாரு :- ஆந்திராவில் கிருஷ்ண ஜில்லாவில் உள்ள ஓர் ஊர் பந்தர். அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பெம்பலவாரு 

No comments:

Post a Comment