அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

11.அரித்ஸ மகரிஷி கோத்ரம்

பன்னிரன்டாவது மன்வந்திரத்துத் தேவர். இத்தெய்வத்தின் பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சௌனகதவரு :- பிரும்மபுத்திரர் சௌனகர். இம்மஹரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர். இஷ்ட தெய்வமாகவும் கொண்டவர்.
ஜோளிகையதவரு :- ஜோல்னாபை என இக்காலத்தில் அழைக்கப்படுகின்றது. தோளில் இந்த ஜோளியைக் கட்டிக்கொண்டு உபாதனம் செய்து அதனால் தெய்வ வழிபாடு செய்பவர். எனவே இவர்களின் பற்றற்ற வாழ்க்கை விளங்கும்.
கேஸனதவரு :- அழகான தலைமுடி உள்ளவர்.
தேஜதவரு :- தவத்தாலும் ஆத்ம ஞானத்தாலும் மிகுந்த ஒளி உள்ளவர்.
உத்தானதவரு :- தானம் எனில் தருமம். உத்தானம் என்பது மிகச் சிறப்பாக உயர்ந்த தானங்களைத் தாராளமாகச் செய்பவர். தனக்கு என எதனையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதை அனைத்தையும் தானம் செய்யும் வள்ளல் தன்மை கொண்டவர்.

No comments:

Post a Comment