அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

21 .கபில மகரிஷி கோத்ரம்

மஹரிஷி வரலாறு :- கர்த்தமப் பிரஜாபதியைப் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யுமாறு பிரம்மா ஆணையிட்டார். ஆணையை ஏற்ற அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் பிந்து ஸரோவரம் என்ற புண்ய தீர்த்தக் கரையில் தவம் செய்தார்.

பகவான் விஷ்ணு அவருக்குத் தரிசனம் தந்தார். நீ ஸ்வாயம்பு மனுவின் பெண்ணான தேவஹூதியை மணம் செய்துகொள். உனக்கு ஒன்பது பெண்களும் ஒரு மகனும் பிறப்பர். நானே உனக்கு மகனாய்ப் பிறப்பேன் என்று வரம் அருளினார். தத்வ வித்தையை உலகினுக்கு உணர்த்த பகவான் கபிலராய் அவதாரம் செய்தான்.

தன் ஒன்பது பெண்களையும் கர்த்தம பிரஜாபதி ஒன்பது ரிஷிகளுக்கு மணமுடித்துத் தந்தார்.

கர்த்தமரின் பெண்கள் - அவர்தம் கணவன்மார்கள்
1) கலா - மரீசிமகரிஷி
2) அனசூயா - அத்ரி மகரிஷி
3) சிரத்தா - அங்கீரஸர்
4) ஹவிர்ப்பூ - புலஸ்தியர்
5) கதி - புலஹர்
6) க்ரியா - கிரது
7) க்யாதி - ப்ருகு
8) அருந்ததி - வசிஷ்டர்
9) சாந்தில - அதர்வர்
கர்த்தமர் மகன் கபிலரைத் தம் மனைவியிடம் ஒப்புவித்துத் தவம் செய்யச் சென்றார்.

தேவஹூதி, மகனே! எனக்கு உத்தமமான ஞானத்தை உபதேசம் செய் என்று வேண்டினாள். கபிலர் தம் தாய்க்குச் சாங்கியம், யோகம் என்னும் மார்க்கங்களையும் அவைகளுக்கும் பக்திக்கும் உள்ள சம்பந்தத்தினையும் விஸ்தாரமாக உபதேசித்தார்.

இவ்வுபதேசத்தினால் அவள் சகல சந்தேகங்களும் நீங்கி பகவானை உபாசித்து முக்தி அடைந்தாள்.

ஸகர சக்ரவர்த்தி அசுவமேத யாகம் செய்தார். அசுவமேதயாகக் குதிரையை இந்திரன் பாதாளம் கொண்டு போய் கபில முனிவருக்குப் பின் கட்டினான். ஸகர புத்திரர்கள் குதிரையின் நிமித்தம் தவம் செய்து கொண்டு இருந்த கபிலரை இம்சிக்க; அவர் கண் திறந்து பார்த்தார். அவர் பார்வையிட்டு அவர்கள் சாம்பல் ஆயினர்.

தவத்தில் அவர் இருந்து கண் விழிக்குங்கால் கபிலரின் முதல் பார்வையில் படுபவர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆவர்.

பின் அம்சுமான் குதிரையை வேண்டி முனிவரிடம் வந்தான். குழந்தாய்! குதிரையைக் கொண்டு செல். சகரனிடம், கொடு. இது இந்திரனின் சூழ்ச்சி என்றார்.

சுவாமி! தங்களுக்குக் குற்றம் இழைத்த இவர்கள் நற்கதி அடைய அருள் செய்யுங்கள் என அம்சுமான் வேண்டினான்.

உன் பேரன் பகீரதன்! ஆகாய கங்கையைப் பூமிக்கு கொண்டு வருங்கால் அதன் நீர்பட்டு இவர்கள் நற்கதி அடைவர் என்று வரமீந்தார் கபிலர்.

கங்கா ஸாகரம் என்னும் இடத்தில் இன்றும் யோக சமாதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இப்பொழுதும் அவ்விடம் யாத்திரைக்குரிய புனிதத்தலமாக விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சுவாரு :- காஞ்சிபுரத்தை ஸ்ரீ கன்சு என்று பெயர். ஆந்திராவிலும் ஸ்ரீ கன்சு என்ற ஊர் இருக்கின்றது. இவ்வூர்களில் ஒன்றினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆரபுவாரு :- ஆராக்கீரை தொடர்பான பெயர்.
உட்ளவாரு :- நீர் ஊற்றினுக்குத் தெலுங்கில் உட்ள என்று பெயர். இயற்கையாய்ப் பெருகும் நீர் ஊற்றின் அருகில் வீட்டுத் தெய்வத்தை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.
சுகுண தவரு :- சு+குணம் = மிக நல்ல குணத்தைக் கொண்டவர்கள்.
கௌரதவரு :- கௌரி தேவியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்கள்.
தக்காவாரு :- செட்டிகாரர், எஜமானர் என்பன போல் ஒரு கௌரவப் பெயர்.
தந்துலதவரு :- நூலுதவரு :- தந்து - நூல்; இரண்டும் நூல் பற்றி வந்த பெயர்.
திரிபுரதவரு :- திரிபுரம் சம்ஹாரம் செய்த சிவபிரானின் மேன்மையை எண்ணி; இச்செயலின் உயர்வால் திரிபுரசம் ஹரமூர்த்தியைப் பூசிப்பவர்.
தவனம்வாரு :- மருக்கொழுந்து போல் வாசனைமிக்க ஒரு வகை இலை. கலச திரவியங்களுடன் இதுவும் ஒன்று. இதனைத் தானம் செய்ததாலோ, வேறு காரணங்களாலோ இப்பெயர் வந்துள்ளது.
நடபுலவாரு :- நடந்து கொண்டே இருப்பவர்.
நூகுலவாரு :- நொய்யரிசிச் சோறு உண்பவர்.
பசுபுலேட்டிவாரு :- பசுபுலேட்டி என்பது ஆந்திராவில் உள்ள ஓர் ஆறு. அவ்வாற்றங்கரையில் வசித்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழிலில் இவ்வாற்றிற்கு மஞ்சள் ஆறு என்று பெயர்.
பச்சலதவரு :- பச்சைக்கல் நகையை அணிபவர்.
பந்தாரிதவரு :- பந்தாரி ஒரு வகைச் செடி. இச்செடி அடியில் வீட்டுத் தெய்வத்தை வணங்குபவர்.
பரடிதவரு :- பரடிபல்லி ஆந்திராவில் கர்நூல் ஜில்லாவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பந்துலுவாரு :- ஆசிரியருக்குத் தெலுங்கில் பந்தலு என்று பெயர். இவர்கள் ஆசிரியராகச் சேவை செய்பவர்.
பேடம்வாரு :- பூசனைச் சாமான்களுள் பேடம் என்பது ஒன்று. ரதம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனைத் தானம் செய்ததால் பெற்ற பெயர்.
முரகலதவரு :- முறுக்கான குணம் கொண்டவர்.
வஜ்ராலவாரு :- வஜ்ஜிரம் - வைரம் ; வைரநகை அணிபவர். வைர வணிகம் செய்தவர்.
பசுபதி :- பசுபதியான பசுபதீசுவரரை வீட்டு தெய்வமாக வணங்கி வருபவர்.
மரகதவாரு ;- மரகத வணிகம் செய்தவர்.
தோள்ளவாரு :-
முருகிவாரு :-
முர்வம்புவாரு :-

No comments:

Post a Comment