அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/20/13

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) பொதுப்பலன்கள்

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


பொதுப்பலன்கள்
2014 -ஆம் ஆண்டு உங்களுடைய விருச்சிக ராசிக்கு 2-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 11-ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் உதயமாகிறது. ஆங்கிலப் புதுவருடம் மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே இந்தப் புதுவருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றமும் பெருமையும் உடைய வருடமாக இருக்கும் என்பதில் எந்த வகையிலும் சந்தேகமே இல்லை.

கடந்த வருடத்தில் அனுபவித்த விரயம், ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் எல்லாம் இந்த வருடத்தில் நிவர்த்தியாகிவிடும். வட்டியும் முதலுமாக சம்பாதித்து, சேமித்து பொருளாதாரப் பற்றாக்குறையை- நெருக்கடியைச் சரிக்கட்டிவிடலாம். தனகாரகனும் தனாதிபதியுமான குரு 8-ல் மறைந்தாலும், தனது ஸ்தானத்தை (2-ஆம் இடத்தையே) பார்ப்பதால் எதிர்பாராத தனப்ராப்திக்கும் இடமுண்டு. உங்களுக்கு வரவேண்டிய அல்லது உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தொகையை இந்த வருட ஆரம்பத்திலேயே அடைந்துவிடலாம்.

மேலும் குடும்பத்தில் திருமணம், புத்திரபாக்கியம் போன்ற யோகங்களையும் இந்த ஆண்டு அடையலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் முன்னேற்றமும் உண்டாகும். மேற்படிப்பு யோகமும் ஏற்படும். 8-ஆம் இடத்து குரு விருச்சிக ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தேகநலமும் ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும். தாயன்பும் பாராட்டும் ஏற்படும். வீடு, மனை பாக்கியமும் எதிர்பார்க்கலாம். வாடகை வீட்டில் குடியிருப்போர் போக்கியத்துக்கு (ஒத்திக்குப்) போகலாம். போக்கியத்தில் இருப்போர் சொந்த வீட்டைக் கிரயம் முடித்துப்போகலாம். அல்லது சொந்த வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடமான பூர்வ புண்ணியஸ்தானத்துக்கு விரயஸ்தானம் 12-ஆம் இடமாகும். என்பதால், பிதுரார்ஜித சொத்துகளை சிலர் விக்கிரயம் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை எனப்படும். அத்துடன் குடும்பத்தில் நேர்ந்துகொண்ட தெய்வப் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றிவிடலாம்.

விருச்சிக ராசிக்கு 11-ஆவது லாபஸ்தானத்தில் கன்னியில் புதுவருட லக்னம்  அமைவதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். வழக்கு வியாஜ்ஜியங்களிலும்  விவகாரங்களிலும் சாதகமான பலனும் வெற்றியும் ஏற்படும். 12-ஆம் இடத்தில் சனியும் ராகுவும் நின்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 2-க்குடைய குருவின் பார்வையைப் பெறுவதால் தன சம்பாத்தியத்துக்காக சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிமாநிலம் போகலாம். சில குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து செயல்படலாம். அரபு நாடுகளுக்கு அல்லது மேற்கத்திய நாடுகளுக்குப் போகலாம். வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள் இந்த ஆண்டு பல வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிவந்து தாயாதி, பங்காளி, உறவினர்களோடு உறவாடி உவகையடையலாம்.  

10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதற்கு திரிகோண ராசியில் புதுவருடம் பிறப்பதால், தொழில் விருத்தியும் தன விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அது சூரியனின் ராசி (சிம்மம்) என்பதால், அரசு வேலை வாய்ப்பும், அரசு வேலையிலிருப்போருக்கு அனுகூலமான பலனும் உண்டாகும். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு பதவி உயர்வு, தேர்தலில் ஜெயம், முக்கியமான கட்சிப் பொறுப்பு போன்ற பலன்களும் உண்டாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். 10-ஆம் இடத்துக்கு தனஸ்தானம் 2-ஆம் இடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், தொழில், சம்பாத்தியம் சிறப்பாக இருப்பதோடு சேமிப்பும் உண்டாகும். நீண்டகால சேமிப்புத் திட்டத்தில் (வைப்புநிதி) முதலீடு செய்யலாம். வாழ்க்கையில் அன்பும் ஆதரவும் பெருகும். குடும்ப ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்.

உங்களுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ கடந்த ஆண்டு உத்தியோகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி- சஸ்பெண்டு போன்ற வருத்தங்கள் இந்த ஆண்டு நீங்கி, மீண்டும் வேலை வாய்ப்பும் கடமையைச் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். இதுவரை அதற்காக நீங்கள் செய்துகொண்ட பிரார்த்தனைகளுக்கும், கோவில் பூஜைகளுக்கும் இந்த ஆண்டு பலன் கிடைக்கும். சிலர் வழக்குப் போட்டு காத்திருந்தாலும் நல்ல தீர்ப்பும் கிடைக்கும். முழுச்சம்பளத்தொகையும் கைக்குக் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி: இந்த ஆண்டு 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 8-ல் மறைவாக இருந்த குரு 9-ல் கடகத்தில் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். 3-ஆம் இடம், 5-ஆம் இடங்களையும் பார்க்கக்கூடும்.

சகோதர சகாயம், நண்பர்கள் ஆதரவு, குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பு, புதியவர்களின் உதவி, எதிர்காலம் இனிமையாகவும் வளமையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம், தெம்பு ஆகிய பலன்களை குரு தருவார். 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், அதற்குடைய குரு 9-ல் உச்சம் பெற்று 5-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, ஜென்ம ராசி விருச்சிக ராசியையும் பார்க்கப்போகிறார். பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்லுறவும் நட்பும் தொடரும். பிள்ளைகளின் வளச்சியால் பெற்றோர் பெருமை அடையலாம். பெற்றோர் ஆதரவால் பிள்ளைகள் நிம்மதி அடையலாம். திருமணப் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் கூடும். திருமணமான பிள்ளைகள் வகையில் தொல்லைகளும் பிரச்சினைகளும் விலகி நல்லவை நடக்கும். அதாவது சம்பந்திகள் பொருத்தம் சந்தோஷமாகும்.

12-3-2014 வரை குரு வக்ரமாக இருப்பார். போனவருடம் 2013 மார்ச் முதல் குரு வக்ரம். 2014 பிறக்கும்போதே குரு வக்ரம்தான். அடுத்து இரண்டாவது கட்டமாக 27-11-2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். 2015 மார்ச் வரை குரு வக்ரகதி. இந்த வக்ரகதியும் உங்கள் ராசிக்கு 100-க்கு 100 நன்மையும் யோகமும் உடையதாக இருக்கும். நல்ல இடத்தில் இருக்கும் கிரகம் வக்ரம் அடையும்போது நல்ல பலன்களை ஆணித்தரமாகச் செய்யும்; கெட்ட இடத்தில் வக்ரமாகும் கிரகம் கெட்ட பலனையும் கட்டாயம் வலுவாகச் செய்யும்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருப்பார். இக்காலம் குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ- எந்தெந்த இடங்களைப் பார்க்கிறாரோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சினைகளை உருவாக்கி மகிழ்ச்சியைக் கெடுக்கும். சகோதர ஸ்தானம்- புத்திரஸ்தானம் ஆகியவற்றில் சஞ்சலம், கவலை, வருத்தம் ஏற்படலாம். விலகிவிலகிப் போனாலும் வம்புதும்பு, வழக்கு, வில்லங்கம் விரட்டிவந்து துரத்தும்.

கும்பகோணம் அருகில் தேவூர் என்னும் தலம் உள்ளது. குபேரன் வழிபட்ட ஸ்தலம். குருவுக்கு பதவி கிட்டிய ஸ்தலம். அங்குசென்று வழிபட்டால் குருவின் அஸ்தமன தோஷம் விலகும்.

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு 11-ஆம் இடம் கன்னி ராசிக்கும், 6-ல் இருந்த கேது 5-ஆம்  இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள். ஏற்கெனவே இருந்த இடம் பரவாயில்லை. இனி மாறப்போகும் இடமும் பாதகமில்லை. 3, 6, 11 ராகு- கேது யோகம் செய்யும் இடங்கள். 5-ல் கேது- சிலருக்கு புத்திர தோஷத்தை அல்லது புத்திர சோகத்தைக் கொடுத்தாலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு கேதுவைப் பார்ப்பதாலும் கேது குரு வீட்டில் இருப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகும்.

மன்னார்குடி அருகில் பாமினியில் பழமையான சிவன் கோவில் உண்டு. ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம். அங்கு சென்று வழிபட்டால் ராகு- கேது பெயர்ச்சி அனுகூலமாக அமையும்.

சனிப்பெயர்ச்சி: 16-12-2014-ல் சனிப்பெயர்ச்சி துலா ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக  மாறுவார். இதன் சாதகபாதக பலனை 2015-ல் காணலாம்.

1-3-2014 முதல் 28-6-2014 முடிய சனியின் வக்ரம் 12-ல் இருந்து நடத்துவதால், தவிர்க்க முடியாத செலவுகளும் விரயங்களும் சொத்து பரிவர்த்தனைக்கும் இடமுண்டு. அதை சுபவிரயமாகவும் அல்லது சேமிப்பு முதலீடாகவும் மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

சனியின் அஸ்தமன தோஷ நிவர்த்திக்கு நாமக்கல் ஆஞ்சனேயரையும்,  அருகில் (12 கிலோமீட்டர்) சேந்தமங்கலம் சனீஸ்வரரையும் வழிபடலாம்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


இந்த மாதம் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு சற்று தாமதமாக நடந்தாலும் தேவைகள் நிறைவேறும். பெற்றவர்கள் அல்லது பங்காளிகள் வகையில் ஏற்பட்ட செலவுகள் குறையும். இதுவரை இழுபறியாக இருந்த திருமணம் அல்லது இடம், வீடு போன்ற சுபகாரிய திட்டம் விரைவில் நடந்தேறும். பணியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் கைகூடும். வியாபாரிகளும் புதியதொழில் ஆரம்பம் செய்து லாபம் பார்க்கலாம்.

பிப்ரவரி


இந்த மாதமும் தொடர்ந்து நல்லது நடக்கும். வெற்றியில் ஆனந்தமும், தோல்வியில் மனச்சோர்வும் அடையும் குணத்தை மாற்றிக்கொண்டால் துக்கமில்லை. வேகமும் சோகமும் கலந்த மனப்பாங்கினால் மகிழ்ச்சியும் வருத்தமும் ஏற்படலாம். மனைவி அல்லது குடும்பத்தாருக்காக உங்கள் சொந்த விருப்புவெறுப்புகளை விட்டுக்கொடுத்துப் போவீர்கள். 

மார்ச்


ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முதல் இரண்டு மாத காலம் வக்ரமாக இருப்பார். ஜெனன ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைப்பொறுத்து செவ்வாயின் வக்ரம் உங்களுக்கு நல்லதையோ கெட்டதையோ செய்யலாம். புதுக்கோட்டை அருகில் குமரமலை சென்று பால தண்டாயுதபாணியை வழிபட்டால் நல்லதே நடக்கும். தொடர்புக்கு: ராமு குருக்கள் அலைபேசி:  98424 83217. சனிவக்ரம் சாதகமாக அமையும்.

ஏப்ரல்


ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து வக்ரமாக இருக்கிறார். கன்னியிலும் இருக்கிறார். புதன் மேஷத்தில் பரிவர்த்தனை அடைவதாலும், உச்ச சூரியனுடன் சம்பந்தம் என்பதாலும் எதிலும் தனித்துவமான சிந்தனையும் செயலும் உண்டாகும். பொருளாதாரத்தில் நிறைவும் தாராளமான பணப்புழக்கமும் காணப்படும். வராதிருந்த பணம் வசூலாகும். எழுத்தாளர்கள், கட்டிட காண்ட்ராக்ட்காரர்களுக்கு இது யோகமான காலம்.

மே


எந்த ஒரு சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்துச் செயல்படுவதால் வெற்றி உங்களுக்கே! பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. கடந்த காலங்களில் சந்தித்த சிறுசிறு நஷ்டங்களையும் தோல்வி களையும் இந்த மாதம் சரிப்படுத்தி ஆதாயமும் அனுகூலமும் அடையலாம். கடன்கள் கட்டுக்கடங்கி இருந்தாலும் தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகமா கவே இருக்கும்.

ஜூன்


13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. குரு உங்களுக்கு 9-ல் வருவதும் உச்சம் பெறுவதும் மாபெரும் யோகம். ராகு 11-ல் கேது 5-ல் வருவதும் குருபார்வை பெறுவதும் நன்மை. மாணவர்களின் மேற்படிப்புத் திட்டம் வெற்றியடையும். விரும்பியபடி சீட்டும் கிடைக்கும். பண உதவியும் அமையும். எந்தப் பிரச்சினையானாலும் நீங்கள் நேரடியாக கவனம் செலுத்தி செயல்பட்டால் 100-க்கு 100 வெற்றி. தான் போகவேண்டிய காரியத்துக்கு தம்பியை அனுப்பினால் ஆகுமா? உடையவர் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை போன்ற பழமொழிக் கவனத்தில் கொள்ளவும். கும்பகோணம் அருகில் அழகன்புத்தூர்கோவிலில் சங்கு சக்கரத்துடன் முருகன் அருள்பாலிக்கிறார். சென்று வழிபடவும்.

ஜூலை


குரு அஸ்தமனமாகிறார். (ஒரு மாதம், 5-8-2014 வரை). சிலசில காரியங்களில் தேக்கமும் தடை, தாமதமும் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்மறையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். பொருளாதாரத்திலும் பற்றாக்குறை காணலாம். ராஜபாளையம் தென்காசிப் பாதையில் வாசுதேவ நல்லூரில் அர்த்தநாரீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: மகேஷ் பட்டர், அலைபேசி: 94892 36186.

ஆகஸ்டு 


இந்த மாதம் உடல் சீராக இருக்கும். உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பும். பொருளாதாரம் போதுமானதாக அமையும். இல்லத்தரசி உள்ளம் குடிகொண்ட மகாலட்சுமி. அவரை அனுசரித்தும் அவர் ஆலோசனையைக் கேட்டும் நடந்தால், வாழ்க்கையின் உயரே  உச்சியில் பறக்கலாம். அக்கறை கொண்ட மக்களும் ஆதரவாக இருப்பார்கள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.

செப்டம்பர்


கோட்சார கிரக நிலைகள் மிகவும் சாதகமாக இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதும் வேண்டியதும் தேடிவரும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதுபோல, எதிலும் பெருந்தன்மையாகவும் அரியதாகவும் எண்ணுங்கள். மனம்போல் வாழ்வு. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

அக்டோபர்


பண்டிகைச் செலவு பட்ஜெட் அதிகம். பற்றாக்குறையும் அதிகம். என்றாலும் உங்கள் முயற்சி வீண்போகாது. தாராளமான பண வரவும் வசதியும் கிடைக்கும். அதனால் கடமைகளை நிறைவேற்றலாம். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். திரு வெள்ளறை புண்டரீகாட்ச பெருமாளை சேவிக்கவும். உத்தராயன வாசல் தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாசல்கள் வழி தரிசனம். மெயின் ரோட்டில், சிவப்பிரகாச சுவாமிகள் சித்தர் பீடமும் உண்டு. அதையும் தரிசிக்கவும். அருகில் வடஜம்புநாதர் குகைக்கோவில் உண்டு.

நவம்பர்


வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். பழைய பாக்கிகள் வந்துசேரும். குடும்பத்தில் சுபமங்கள பேச்சுவார்த்தைகள் எழும். பொருளாதாரப் பிரச்சினை இல்லாமல் இருக்கும். அரசியல்வாதிகள் அல்லது அரசு உத்தியோகஸ்தர்களுக்கு இம்மாதம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம்.

டிசம்பர்


மாதக் கடைசியில் சனிப்பெயர்ச்சி! விரயச் சனி ஜென்மச் சனியாக மாறினாலும், கடக குரு உச்சம்பெற்று பார்க்கப் போவதால் உங்களுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லை. சாதகமான பலன்களே நடக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். புதிய முயற்சிகள் கைகூடும். அலைச்சல், எதிர்பாராத பயணம் ஏற்படலாம். கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு பாராட்டும் கௌரவமும் உண்டாகும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது! உங்கள் நட்சத்திரம் விசாகத்திலிருந்து மூல நட்சத்திரம் 4-ஆவது க்ஷேமதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு மிகமிக இனிய வருடமாக அமையும். விசாகம் குருவின் நட்சத்திரம். குருவின் ராசியான தனுசு ராசியில்தான் ஆங்கிலப் புதுவருடம் உதயமாகிறது. குருவும் ஜூன் மாதம் 9-ல் கடகத்தில் உச்சமடைவார். உங்கள் ராசியைப் பார்க்கப்போகிறார். எனவே வருட முற்பகுதியைவிட பிற்பகுதி ராஜயோகமாகவும் மிகமிக மேன்மையாகவும் விளங்கும். உங்களுடைய நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். 

பரிகாரம்: காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகில் நாகநாதசுவாமி கோவிலும், கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோவிலும் அடுத்தடுத்து உள்ளன. அதன் எதிரில் தெப்பக்குளக்கரையில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபடவும். தொடர்புக்கு: சோமு குருக்கள், செல்: 99438 19133.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:


அனுஷ நட்சத்திரம் சனியின் நட்சத்திரம். அதிலிருந்து 2014-ஆம் ஆண்டு பிறக்கும் மூல நட்சத்திரம் 3-ஆவது நட்சத்திரம்- விபத் தாரை. எனவே இந்த வருடத்தில் எதிர்பாராத விபத்து, பிணி, வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். ஜாதகரீதியாக பாதகமான தசாபுக்தி நடந்தால் பாதிப்பு கடுமையாகவே இருக்கும். சாதகமாக இருந்தால் கெடுபலன்களின் கடுமை குறையும். நட்சத்திரநாதன் சனி உச்சம் பெற்று குருபார்வையைப் பெறுவதால் பயப்படத் தேவையில்லை.

பரிகாரம்: மதுரை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். அங்குள்ள பழம்பெரும் சிவன்கோவிலில் சனீஸ்வரருக்கும், அவரது குருநாதர் காலபைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் பக்கத்தில் உள்ளன. அபிஷேகம் செய்து வழிபட்டால் சனியால் வரும் துன்பங்கள் யாவும் கனிவாகிவிடும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:


கேட்டை புதன் நட்சத்திரம். 2014 பிறக்கும் மூல நட்சத்திரம் கேட்டைக்கு 2-ஆவது நட்சத்திரம்- சம்பத் தாரை. எனவே இந்த வருடம் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு எல்லாம் மிக திருப்தியாகவும், வாக்கு நாணயம் தவறாமலும் நடக்கும். வாக்கு வன்மை, எழுத்தாற்றல் பிரகாசிக்கும். பாராட்டும் பரிசுகளும் சாதனையாளர் விருதுகளும் கிடைக்கும். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு செலவு கூடுகிறது- வரவு குறைகிறது என்ற கவலையும் ஆதங்கமும் உண்டாகலாம். இந்த ஆண்டு முதல் "பென்ஷன்' பணத்தோடு வேறு உபதொழில் வருமானமும், ரியல் எஸ்ட்டேட் அல்லது கமிஷன் அடிப்படையில் ஆதாயமும் கிடைப்பதால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான சூழ்நிலை ஏற்படும். வைத்தியச் செலவை விரட்டியடித்து விடலாம். குரு உச்சமாகி 5-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், பிள்ளைகளின் வருமானம் உங்களுக்குக் கைகொடுக்கும். பிள்ளைகளுக்கு சுபமங்கள திட்டமும் உருவாகும்.

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக (திருவைகாவூர் வழி) திருவிஜயமங்கை சென்று, சுவாமி விஜயநாதரை வழிபடவும். இப்பொழுது இது விசங்கி என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனன் வழிபட்டு பாசுபதராஸ்திரம் பெற்ற தலம். சம்பந்தரும், அப்பரும் பாடிய பாடல் பெற்ற தலம். கேட்டது கிடைக்கும். 

No comments:

Post a Comment