அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/7/13

சுனாபன் வரலாறு

நான் கின்னரரின் அரசன். ஒரு நாள் நான் என் மனைவியோடு கயிலைக்குச் சென்றேன். அம்மை அப்பர் தங்கியிருந்த புனிதமான அழகிய சோலைக்குள் மயக்க உணர்வோடு போனேன். அதன் புனிதத்தைக் கெடுத்தேன். இதை உணர்ந்த சிவபெருமான் சினங்கொண்டு என்னை நிலவுலகில் மனிதனாகப் பிறந்து பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறுமாறு சபித்தார். சாபம் பெற்ற நான் சாப நீக்கம் வேண்டிப் பெருமானைப் பணிந்தேன். சிவபெருமானும் கருணை கூர்ந்து 'என்னுடைய மானதபுத்திரன் தேவல முனிவன் உலகநலங்கருதி அவதாரம் செய்கிறான். அவன் ஆமோத நகருக்கு வருவான். அவனை வரவேற்று அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு. அப்போது உன் சாபமும் நீங்கும்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி நான் இந்நிலவுலகில் பிறந்து இந்நாட்டைப் புரக்கும் மன்னனாக இதுவரை வாழ்ந்து வந்தேன். தங்கள் வரவால் என் சாபம் நீங்கியது. இறைவன் ஆணைப்படி ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் என்னுடய நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு மானிட உடம்பை அங்கேயே கிடத்திவிட்டு, தேவவடிவம் பெற்று அப்போது அங்கு வந்த விமானத்தின் மீது தன் மனைவியோடு வித்தியாதர உலகம் சேர்ந்தான். சுனாப மன்னனும் அவன் மனிவியும் விட்டுச் சென்ற பூத உடம்புகளுக்கு தேவலமுனிவர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தார். பின் ஆமோத நகரை செங்கோன் முறைப்படி நீதி வழுவாது நல்லாட்சி செய்து வந்தார்.

No comments:

Post a Comment