அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/7/13

25.காத்ய காத்யாயன காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம்

குறிப்பு : இம்மூன்று பெயர்களும் ஒரே மகரிஷியைக் குறிக்கலாம்.
1). காத்ய மகரிஷி கோத்ரத்தில் ஸ்தம்பதனவரு என ஒரேயொரு வங்குசம் காணப்படுகின்றது. இவ்வங்குசம் மீண்டும் காத்யாயன மகரிஷி கோத்ரத்திலும் வருகின்றது.
2). காத்யாயன என்னும் பெயர் தவறுதலாக காத்ய என்று அச்சாகி இருக்கலாம்.
3). காத்யாயனரையே காத்யாயனதேவர் என்று மதித்து அழைத்து இருக்கலாம்.
4.) இம்மூன்றும் ஒரே கோத்ரம் எனக் கருதுவதட்கு வங்குசப் பெயர்கள் அனைத்தும் ஒன்றாக இருக்கின்றன.
மகரிஷி வரலாறு ;- காத்யாயன மகரிஷியின் பெயரால் ஒரு ச்ரெளத சூத்திரமும், உபஸ்மிருதியும் விளங்குகின்றன. இவர் மிகச் சிறந்த தவசி. தம் தவவன்மையால் பார்வதி தேவியைத் தம் மகளாகப் பெற்றார். காத்யாயனர் செய்த தவத்தால் அவர் மகளாகப் பிரந்தமையின் தேவி காத்யாயனி என்று திருநாமம் பெற்றாள்.
ஓம்: காத்யாயனய வித்மஹே
      கன்யாகுமாரி தீமஹி
      தன்னோ துர்கிப்ரசோதயாத்
- என்னும் துர்க்கா காயத்ரி மந்திரம் இதற்குச் சான்றாக அமைகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காட்னம் வாரு :- இப்பெயர் காஷ்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவர் மசானத்தில் பெரிய நாயகி அம்மையை வழிபாடு செய்பவர்.
கோணங்கிவாரு :- கோணங்கித்தனம் மிக்கவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
நம்பியவரு :- புரோஷத்தம நம்பியான திருமாலை அவன்றன் திவ்ய தேசங்களில் வழிபாடு செய்பவர்.
பாணதவரு :- வன்னி மரத்தின் மீது பாணம் எய்பவர்கள். இச்செயல் விஜயதசமி அன்று அம்மன் ஆலயங்களில் இன்றும் நடைபெறுகின்றது.
மாசரளதவரு :- ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் மாசரளா என்னும் ஊர் உள்ளது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மூங்கினதவரு :- மூங்கில் குத்துக்களடியில் வழிபாடு நிகழ்த்துபவர். சிவபிரான் மூங்கிலில் பிறந்தார். முருகன் நாணலில் பிறந்தார். என வரலாறுகள் உண்டு. எனவே இவர்கள் மூங்கிலில் சிவபிரானும் முருகனும் இருப்பதாகப் பாவித்து வழிபாடு செய்கின்றனர் என்பது தாத்பர்யம்.
முகதலதவரு :- காரியத்தைப் பொறுப்பாக ஒரே முகமாகச் செய்யக் கூடியவர். விடா முயற்சி உடையவர்.
அரவிந்ததவரு :- அரவிந்தம் - தாமரை. தாமரை மலர்கள் கொண்டு வழிபாடு செய்பவர்.
வ்யசனமவாரு :- ஓயாது கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்.
ஸ்தம்பதவரு :- கொடி மரங்கள் செய்து ஆலயங்களுக்குத் தானம் வழங்கியவர். வெற்றிக் கம்பம் நாட்டியவர். தம் அறிவாற்றலால் அனைவரையும் வாதில் வென்று ஜெயஸ்தம்பம் நாட்டியவர். ஆலயங்களில் கம்பம் நாடும உரிமை, பெயர்க்கும் உரிமை பெற்றவர்.
ஸ்யாமளதவரு :- ஸ்யாமளா தேவியை வழிபட்டவர்.
ஹூகரியதவரு :- கர்நாடகாவில் உள்ள ஹூகரி என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொகரனவரு :- தொகர என்பது பருப்பைக் குறிக்கும் - துவரம் பருப்பு கன்னடத்தில் தொகரெபேளே என்று அழைக்கப்படுகின்றது. பருப்பு பற்றி வந்த ஒரு பெயர்.
ஜாஜியதவரு ; ஜாஜிபுஷ்பம் - ஜாதி மல்லிமலர். இதனால் வழிபாடு செய்பவர்.
கோமளதவரு :- சிருங்காரம் உடையவர். அழகு மிக்கவர். அழகை ரசிக்கும் இயல்புடையவர்.
கோடங்கியதவரு :- இவ்வங்குசமும் முன்கண்ட கோணங்கிவாரு என்பதும் ஒன்றே.
மசானதவரு :- மசானத்தில் மசானருத்திர வழிபாடும் பெரியநாயகி - தொட்டு தேவரு வழிபாடும் செய்பவர்.

No comments:

Post a Comment