அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/7/13

தேவலர் மணிமுடி சூடியது

ஆமோத நகரம் சகர நாட்டின் தலைநகரம்.அதைச்சுனாபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன், தேவல முனிவர் தன்னாட்டை நோக்கி வருவதை இறைவன் உணர்த்த உணர்ந்தான். முனிவரை வரவேற்க மந்திரி பிரதானிகளுடன் நர்ப்புறம் போய் நின்றான். முனிவரும் வந்தார். வந்தவரை மன்னன் வரவேற்று 'இந்த நாட்டைத் தாங்களே ஏற்று ஆட்சி செய்ய வேண்டும். இறைவன் திருக்குறிப்பும் அதுவே' என்று வணங்கினான். முனிவரும் இறைவன் திருக்குறிப்பு என்பதை ஓர்ந்து இசைந்தார். ஊர் மக்களும் பிறரும் நல்வரவு கூர மேளவாத்தியம் முழங்க ஆடல் பாடல்கள் நிகழ முனிவரை யானைமீது அமர்த்தி ஆமோத நகரருக்குள் ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. மன்னன் முனிவரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அரியாசனத்தமர்த்தி உபசரித்தான். இரண்டொரு நாட்கள் விருந்து உபசாரங்கள் நடந்தன. பின் மன்னன் தேவலரை மணிமுடி சூடி நாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் இசைந்தார். சுனாபமன்னன் ஒரு நல்ல நாளில் நாட்டை அலங்கரிக்கச் செய்து வாத்தியங்களும் வேத கீதங்களும் முழங்க தேவல முனிவரை அரசுக்கட்டிலில் அமர்த்தி முடி சூட்டி அரசுரிமையை அளித்தான். பின் நாட்டை விட்டுச் செல்ல தேவலரிடம் விடை கேட்டான். அதைக் கேட்ட தேவலர் ' தாங்கள் ஏன் செல்ல வேண்டும்? என்னோடேயே இருக்கலாமே ' என்றார். அதற்குச் சுனாபன் ' நான் பிரிந்து செல்லக் காரணம் உளது ' என்று கூறித் தன் வரலாற்றைக் கூறினான்.

No comments:

Post a Comment