அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/10/14

பொன்குல்லுகிகாடு பூளவாடி, தேவாங்க குலம் சித்துகுள்ளார் வம்சம் 60 அண்ணன் தம்பி தாயாதியருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவேங்கடநாத பெருமாள் திருகோவிலில் சிவராத்திரி மகாபள்ளைய பூஜை திருவிழா அழைப்பிதழ்

பொன்குல்லுகிகாடு பூளவாடி, தேவாங்க குலம் சித்துகுள்ளார் வம்சம் 60 அண்ணன் தம்பி தாயாதியருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவேங்கடநாத பெருமாள் திருகோவிலில் சிவராத்திரி மகாபள்ளைய பூஜை திருவிழா.

இதன் சிறப்பு என்னவென்றால் நமது தேவாங்க குலம் சைவமும் வைணவமும் ஒன்றுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம் ... பெருமாள் கோவிலில் சிவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு எல்லாம்வல்ல சௌடேஸ்வரி அன்னை அருள் பெருக...







நன்றி திரு.மணிகண்டன் , திருப்பூர் 

No comments:

Post a Comment