அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/6/13

101. துர்வாச மகரிஷி கோத்ரம்

அத்ரி மகரிஷிக்கும் அனசூயைக்கும் சிவபிரானின் அம்சமாக உதித்தவர். சாபமிட்டால் மகரிஷிகளின் தவப் பயன் குறையும். ஆனால் இவர் சாபமிட்டால் இவரின் தவப்பயன் வளரும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

புஜங்கதவரு :- நாகபூசனை செய்பவர். 

எடமாலையதவரு :- இடப்புரம் மாலையணிபவர். 

பரட்டெயதவரு :- ஆந்திராவில் உள்ள பரட்டெயம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

ஆலவட்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் உலாவின் போது ஆலவட்டம் பிடிப்பவர். 

மத்தளதவரு :- மத்தளம் வாசித்தவர். 

அலட்டிண்டிதவரு :- அலட்டிண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கபோததவரு :- கபோதபட்சி வடிவில் தெய்வத்தை வழிபட்டவர். 

காசினிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

சந்திரதவரு :- சந்திரனை வழிபடுபவர். பௌர்ணமி பூசனை செய்பவர். 

சண்டிதவரு :- சண்டிகா பறமேஸ்வரியை வழிபடுபவர். 

சாகரம்தவரு :- சமுத்திரக்கரையை ஒட்டிய பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

சிவபூஜைதவரு :- சிவபூசனை செய்பவர். 

சென்னபட்டணதவரு :- தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

செருகூரதவரு :- செருகூர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

திம்மகட்டதவரு :- மைசூரில் உள்ள திம்மகட்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

திலலாஜதவரு :- யாகத்திற்கு எள் மற்றும் நெற்பொரி உபயம் செய்பவர்கள். திலம்-எள்;லாஜம்-பொரி. 

துக்காணிதவரு :- இருகாசு. ஒந்தாணி - ஒரு காசு. து+காணி=இரண்டுகாசுகள். இரண்டு காசுக்காரர்கள் என்று இவர்க்குப் பெயர். 

துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்பவர்கள். 

துர்வாசதவரு :- துர்வாசமுனிவரை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள். 

தோரணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மகர தோரணம் பிடிப்பவர்கள். 

நிம்மனதவரு :- ஏழுமிச்சம்பழம் மந்திரித்துத் தருபவர்கள். 

பகடாலதவரு :- பவளமாலை அணிபவர். 

பலிதவரு :- தேவபூசனை செய்பவர். 

பிட்டலதவரு :- பிட்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

மசானதவரு :- மசான ருத்திரனையும் பெரிய நாயகி அம்மையையும் மசானத்தில் வழிபடுபவர். 

மடதவரு :- மடம் கட்டித் தகுந்தவர். மடத்தில் வசித்தவர். 

மண்டியாதவரு :- மண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

மரளிதவரு :- கொள்ளேகாலம் அருகில் உள்ள மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். மரளி புகழ் பெற்ற சந்தையாகும். 

மத்யானதவரு :- மத்யான பூசனை செய்பவர். 

யடமால்யதவரு :- இடது பூசனை செய்பவர். 

யாதவாரபல்லிதவரு :- யாதவாரபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

அரசணதவரு :- மஞ்சள் நிறம் உள்ளவர். மஞ்சள் தருமம் செய்பவர். 

சும்மானதவரு, சாகரதவரு, பொம்மத்திதவரு, கொட்டேதவரு, பரிட்டிதவரு, கோமிரம்தவரு, புஜங்கதவரு, சகூலதவரு.

No comments:

Post a Comment