அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/5/13

பதஞ்சலி மகரிஷி கோத்ரம்

அத்திரி மகரிஷியின் பத்தினியாகிய அனசூயையிடம் அவதாரம் செய்தவர். இவர் ஆதிசேஷனின் அம்சம்.

தாருகவனத்தில் சிவபிரானின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தார் மகாவிஷ்ணு. அதனால் அவர் திருமேனி புளகாங்கிதம் அடைந்தது. புளகாங்கிதத்திற்கு காரணம் கேட்டார் ஆதிசேஷன் . ஆனந்த தாண்டவ தரிசனம் காரணம் எனப்புகன்றார் மகாவிஷ்ணு. தானும்நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன். அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான்.

பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினர். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். ஆனந்த தாண்டவம் தரிசனம் செய்யும் பாக்கியத்தை வரமாகப் பெற்றார்.

" அனசூயையிடம் குழந்தையையாய் வளர்ந்து சிதம்பரம் அடைவாயாக அங்கே என் நடன தரிசனம் காணத் தவம் செய்து கொண்டு இருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம் " என்று இறைவன் அருள் செய்து மறைந்தனன்.

இவ்வரம் காரணமாக ஆதிசேஷன் ஒருநாள் சிவத்யானத்துடன் கையேந்தி இருந்த அனசூயையின் கைகளில் விழ, அம்மாதரசி பாம்பென்று கையை உதறிவிட அவள் பாதத்தில் விழுந்தான். பாதத்தில் விழுந்ததாலும் அஞ்சலித்த கரங்களில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக்காரணப்பெயர் பெற்றார்.

பின் சிதம்பரம் அடைந்தார் பதஞ்சலி. வியாக்கிர பாதருடன் சேர்ந்தார். திருநடனம் கண்டு மகிழ்ந்தார். இன்றும் தில்லைத்திருத்தலத்தினுள் காணப்படுகின்றார்.

இவர் பாணினி சூத்திரத்திற்குப் பாஷ்யம் - விளக்கவுரை எழுதினார். பதஞ்சலி யோகசூத்ரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சித்துகொள்னேரு ;- சித்த புருஷர் ஒருவரைத் தம் வீட்டுத்தெய்வமாக வணங்குபவர்.

மாலிலாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கும், அம்மன் திரு விழாவிற்கும் பூ மாலை தரும் திருத் தொண்டு செய்பவர்.

அங்கப்பதவரு :- அங்கப்பன் என்ற ஒருவரின் வம்சா வழியினர்.

கர்ணதவரு :- காது பற்றி வந்த ஒரு பெயர்.

கட்கதவரு :- கட்கம்=கத்தி. வாள், கத்தி வைத்து இருப்பவர். கத்தியை வழிபடுபவர்.

கடகதவரு :- ஒரிஸாவில் உள்ள கடக் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

குசுமசித்லூவாரு :- மலர்கள் மொட்டுக்களாய் இருக்கும் போதே; அம்மொட்டுக்களைச் சேகரித்து அவற்றை மாலையாய்க் கட்டித் தெய்வத்திற்குச் சூட்டி மகிழ்பவர்.

குடாரம்தவரு :- துணிக் கூடாரம் பற்றி வந்த ஒரு பெயர்.

கோடூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கோடூர் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோரண்டதவரு :- நாகார்ஜூன மலையை அடுத்துள்ள கோரண்டமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோவூருதவரு :- நெல்லூரை அடுத்து பெண்ணை நதிக்கு வடக்கில் உள்ளது கோவூர். இக்கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சங்குதவரு :- சங்க முழக்கத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்.

சந்தாவாரு :- சந்திரனை வீட்டு தெய்வமாக வணங்குபவர். ஆந்திராவில் இவர்களை சந்திராலுவாள்ளு என்று அழைக்கின்றனர்.

சிருங்காரதவரு :- அழகாகத் தோற்றமளிப்பவர்.

சிந்தனதவரு :- சிந்தனையில் சிறந்தவர்.

தாள்ளதவரு :- கயிறு திரித்தவர். கயிறு விற்றவர்.

தேவனதவரு :- தேவாலய காரியங்கள் நடத்துவதிலும் ஆலய வழிபாட்டிலும் சிறந்தவர்.

நாரிகேளம்தவரு :- தேங்காய் பற்றி வந்தவொரு பெயர்

பதிபக்தினவரு :- பதிபக்தி மிக்க பெண்களை உடைய வம்சமிது.

பாண்யாதவரு :- ஆந்திராவில் உள்ள பாணியம் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பிசனதவரு :- சிக்கனம் மிக்கவர்.

பிச்சுதவரு :- பக்தி வெறிகொண்டவர்.

பிட்சாவதினதவரு :- பிட்சையிட்டு வாழ்ந்தவர்.

புச்சகிஞ்சலதவரு :- புச்சக்காய் என்னும் வரிக்குருமத்தங்காய் கொண்டு பலவகை வைத்தியம் செய்தவர்.

ராகதவரு :- ராகதீபம் எனப்படும் ஜோதி எடுப்பவர்.

மாசிப்பத்ரியவரு :- மாசிப்பத்ரி இலை பற்றி வந்த ஒரு பெயர்.

ஜாஜினவரு ;- வழிபாட்டிற்கு ஜாதிமல்லி மலரைப் பயன்படுத்துபவர்.

இருமனெவாரு :- பெரிய வீட்டுக்காரர்.

காடனதவரு :- தெலுங்கில் ஏர் உழுதலுக்குக் காடன என்பது பெயர். எனவே இவர்கள் உழுது பயிறிட்டு வாழ்ந்தவர்.

ஹொன்னுபுட்டியதவரு :- பெட்டி பெட்டியாகத் தங்கத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

காரணதவரு :- எதற்கும் காரணம் கேட்பவர்.

தாராபுரதவரு :- தாராபுரம் தலத்தைச் சார்ந்தவர்.

மல்லதவரு :- மற்போரில் வல்ல மல்லர்கள்.

சின்னதவரு :- கன்னட மொழியில் சின்னம் என்றால் தங்கம். தங்கமான குணம் கொண்டவர். தங்கம் மிகுதியாகக் கொண்டு வாழ்ந்தவர்.

அன்காபத்திதவரு, அன்காபத்துனிதவரு, ஆகாசவத்துனதவரு, ஆட்ரதவரு, கோவரதவரு, சிச்சுதவரு, தோகுபர்த்திதவரு, தோனபாத்திதவரு, பதிம்தவரு, புசனதவரு, முலிகிதவரு, மோனிபத்ரிதவரு, யெண்டிதவரு, மல்கததவரு.

No comments:

Post a Comment