அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/30/14

164 .மைத்ரேய மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி பராசர மகரிஷியின் சீடர். விஷ்ணுபுராணம் முதலானவற்றைப் பராசரர் இவருக்கு உபதேசித்தார். பாண்டவர் வனவாசத்தில் இருக்கும்போது மைத்ரேயர் துரியோதனனிடம் சென்றார். பலவித நீதிகளைத் துரியோதனனுக்கு உபதேசித்தார். அவற்றைத் துரியோதனன் கேட்காததால் கோபம் மிகக்கொண்டு " நீ பீமன் கதையால் தொடைமுறிந்து சாவாய்! " எனச் சபித்தார். இவர் வியாபகவானுக்கு நெருங்கிய நண்பர். நீதிமானாம் விதுரனுக்குத் தத்துவம் உபதேசித்தவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கலாரஞ்சிததவரு :- கலைகளில் ஈடுபாடு கொண்டவர். 
கூனிதவரு :- இவ்வங்குசத்தார் முன்னோர்களில் ஒருவர் கூனராக இருந்து புகழ் பெற்றவர். 
நல்லாதவரு :- நல்லவர் எனப் பெயர் பெற்றவர். 
பரிசுதவரு :- கலைகளிலும் புலமையிலும் வல்லவராய் விளங்கி மன்னர்களிடம் பரிசு பெற்றவர். 
நல்லாதவரு, பரிசுதவரு இவ்விரண்டு வங்குசத்தாரும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். 
பிங்கணதவரு :- கௌரவம் மிக்கவர். பாராட்டு பெறுபவர். 
ஜக்கலதவரு :- ஜக்கல என்னும் ஊரினர். 
பரோபகாரதவரு :- மற்றவர்க்கு உதவி செய்பவர். 
பரசம்தவரு :- பரசு என்னும் கோடாலி தெய்வ ஆயுதங்களுள் ஒன்று. ஆலயத்திற்குப் பரசு செய்து கொடுத்தவர். 
காரவஞ்சிதவரு, குனெதவரு, குனிகாதவரு, கொரவஞ்சதவரு. பிகலதவரு, போலதவரு, ஜக்கிணிதவரு, அல்லானதவரு.

No comments:

Post a Comment