அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/14/14

148 .மநுவாம மகரிஷி கோத்ரம்

மநுவும், மநுவாம மகரிஷியும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்மி பாவாட தவரு :- கம்மிபாவாட என்று அழைக்கப்பெறும் பாவாடை நெய்பவர்கள். ஸ்ரீ சைலத்தில் கொடியேற்றத்திற்காக தேவாங்கர்களால் நெய்யப்படும் பாவாடைக்குக் கம்மிபாவாடை என்று பெயர். 

இப்பாவாடை ஒரு முழ அகலமும், 365 முழ நீளமும் உடையது. இன்றைக்கும் ஸ்ரீ சைலத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து இக்கொடிப் பாவாடையை நெய்து எடுத்துக் கொண்டு தேவாங்கர்கள் வருவார்கள் திருக்கோயில் மரியாதைகளுடன் இவர்கள் எதிர்கொண்டு அழைக்கப்படுகின்றார்கள். 

இரண்டு தறிகளைப் பூட்டிக் கொண்டு ஒன்றில் ஆண்டவன் தொண்டிற்கு நெய்வதும் மற்றொரு தறியில் குடும்ப வாழ்க்கைக்குமாக நெசவு நெய்கின்றனர். தினமும் காலையில் ஒரு தறியில் ஆண்டவனுக்காக ஒரு முழம் நெய்து விட்டு, அதன் பின் மற்றொரு தறியில் குடும்ப ஜீவனத்திற்காக நெய்வதும் இவர்களின் வழக்கம். 

தினம் ஒரு முழமாக நெய்து ஓர் ஆண்டில் 365 முழம் நெய்து, இப்பாவாடையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு வருவர். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சைலம் பிரம்மோற்சவவத்தில் நடைபெறும் காட்சி இது. 

சீராளா, சோமவார்பேட்டை முதலான ஊர்களில் இருந்தும் மற்றும் பல ஊர்களிலிருந்தும் இவ்வூர்வலம் வரும். 

ஸ்ரீ சைல மூலஸ்தான விமான கோபுரத்திலிருந்து வேமாரெட்டி கோபுரம், சிவலிங்கம், நந்தி, துவஜஸ்தம்பம் ஆகியனவற்றில் இப்பாவாடையைச் சுற்றி முடிவில் கொடியாக ஏற்றுவது இன்றளவும் உள்ள ஒரு வழக்கம். 

தேவாங்கர்களுக்கு கொடியேற்றும் கட்டளையாக உள்ள சில திருத்தலங்கள் வருமாறு :- 

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிப் பெருமாள் ஆலயம், மரக்கோட்டை சின்ன திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயம், திருவண்ணாமலை, திருவதிகைவீரட்டானம், ஸ்ரீசைலம் முதலான ஆலயங்கள். 

இன்னும் பல ஆலயங்களிலும் இக்கட்டளைகள் இருக்கலாம். 

கோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சல்யதவரு :- பூமிக்குள் சல்ய தோஷம் என்னும் ஒருவகைத் தோஷம் உண்டு. இத்தோஷத்தைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்யும் ஆற்றலுடையவர். 

சிவக்ஞானதவரு :- சிவஞானம் மிக்கவர். 

தத்துவதவரு :- தத்துவ சாஸ்திரத்தில் வல்லவர். 

தபசுதவரு :- ஜெபதபங்களில் வல்லவர். 

தொடுபுதவரு :- துணையுடன் செல்பவர்கள். 

தொட்டதவரு :- பெரியவர்கள். 

நாகாபரணதவரு :- நாகவடிவில் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிபவர். 

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர். 

பின்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

ப்ரபுதவரு :- மைசூரில் உள்ள ப்ரபு ஸ்வாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். 

வட்டிகாசுலதவரு :- வட்டிக்காசு வாங்கியவர். 

உங்ராலதவரு :- மோதிரம் அணிபவர். 

தபம்தவரு :- தவத்தில் வல்லவர். 

அவினதவரு, கொட்டெம்தவரு, கொஜ்ஜம்தவரு, வைகடகதவரு. 

குறிப்பு :- மநுமகரிஷி கோத்ரம், மநுவாம மகரிஷி கோத்ரம் இரண்டிலும் வங்குசங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. மகரிஷிகளின் பெயர் ஒற்றுமை, மற்றும் வங்குசங்கள் ஒன்றாகவே காணப்படுதல் என்னும் இக்காரணங்களால் இவ்விரண்டு கோத்ரங்களும் ஒன்று எனக் கருத இடம் உண்டு.

No comments:

Post a Comment