அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/20/13

121 .பர்வத மகரிஷி கோத்ரம் :

பர்வத மகரிஷி தேவரிஷிகளுள் ஒருவர். நாரதரின் சகோதரியின் புத்திரர். இவர் நாரதமகரிஷியைத் தன் குருவாகக் கொண்டவர். இருவரும் மிக ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்ததால் பர்வத நாரதர் என்று அழைக்கப்பட்டார். 

தேவாங்க சம்பிரதாயத்தில் பர்வதம் என்றால் அது ஸ்ரீ சைலத்தைக் குறிக்கும் - எனவே இவர் ஸ்ரீ சைலத்தில் தவம் செய்தவர் என்றும் கூறப்படுகின்றது. நாரதர் ஒரு முறை பர்வதரைப் பூவுலகில் சுற்றி வரும்படி நியமித்தார். அப்போது பர்வதர் ஸ்ரீ சைலத்தில் தங்கித் தவம் செய்து இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கஞ்சலகுண்டதவரு :- கஞ்சம் = தாமரை. தாமரை வடிவமாக யாககுண்டம் அமைத்து யாகம் செய்வது என்பது ஒருமுறை. 

கோமயத்திற்கு - பசுவின் நீர்; கஞ்சல என்பது பெயர். சுத்திக் கிரமங்கள் செய்வதற்குக் கஞ்சலம் தெளிப்பது முறை. கஞ்சலம் தெளித்து தலசுத்தி முதலியன செய்து யாகம் வளர்த்து ஆசாரசீலர்களாக வாழ்ந்தவர்கள். 
சக்கரதவரு, சக்ராலதவரு :- சங்குசக்ர முத்திரை தரித்துக் கொண்டவர். சமஸ்காரம் செய்து கொண்டவர். இவர்களுடைய சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப் பெறும். 
சங்கரதவரு :- சங்கரனை வழிபடுபவர். 
சப்தகவியவரு :- ஏழுவிதமாகக் கவி பாடுபவர். 
சரபகவியவரு :- சிங்கத்தை வெல்லும் பறவை சரபம் என்பது. எனவே சரபத்தைப் போன்று யாராலும் வெல்ல முடியாத கவிஞர் இவர். 
சஜ்ஜாதவரு :- வெள்ளிப் பெட்டியில் சிவலிங்கம் வைத்துப் பூசிப்பவர். 
ரங்கதவரு :- ஸ்ரீ ரங்கநாதனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். 
மாதனதவரு :- செல்வந்தர்கள். 
சாந்திதவரு :- அமைதியாக வாழ்பவர். 
பெக்லாலதவரு, முப்பனதவரு, முள்ளதவரு, யுர்மனதவரு, அங்கபுதவரு.

No comments:

Post a Comment