அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/30/13

ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா

ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா:

அருப்புக்கோட்டை மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மன் அவதாரத்திருநாள் ஜுலை 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவிலில் இருந்து மகளிர் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், காலை ஸ்ரீ சவுடேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நன்றி : devanga.org


No comments:

Post a Comment