அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/4/13

66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- எல்லோருடைய பாவங்களையும் நீக்கும் ஒரு விரதம் சாந்திராயண விரதம். இவ்விரதத்தினை உலகினுக்கு எடுத்து ஓதியவர். இம்மகரிஷி. எனவே இவ்விரதம் இவர் பெயராலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. தானும் இவ்விரதத்தை நன்கு அனுஷ்டித்தார்.

சந்திராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறை :- கிருஷ்ணபட்சத்தில் முடிநீக்கிச் சவரம் செய்து கொள்ள வேண்டும். வெள்ளை வஸ்திரம் உடுத்துக் கொண்டு முஞ்சைப்புல் அரைஞாண் கட்டிக் கொள்ள வேண்டும். பிரம்மச்சரிய விரதத்தைக கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். வளர்பிறை பிரதமை முதல் விரதத்தைத் தொடங்க வேண்டும். பலாசமரத்தால் செய்த தண்டத்தை ஏந்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் அக்நியைவைத்து அதில்

1) ஆகாரம்
2) ஆஜ்யபாகம்
3) பிரணவம்
4) வ்யாஹ்ருதி
5) வாருணம்

என்னும் பஞ்ச ஹோமங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின்
1) சத்யம்
2) விஷ்ணு
3) பிரும்மரிஷி
4) பிரும்மா
5) விச்வதேவர்
6) பிரஜாபதி
என்னும் ஆறு ஹோமங்கள் செய்து அதன்பின் பிராயச்சித்தஹோமம் செய்து அதற்கடுத்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்விதம் பதின்மூன்று ஹோமங்களினால் அக்நிகாரியம் செய்து முடித்து, அக்நிஸோமனை வணங்கி ஸ்நாநம் செய்து அனுட்டானங்களை முடித்துக் கொண்டு கைகளைத் தூக்கிச் சூரியனைப் பார்க்க வேண்டும். பின் இருகைகளையும் குவித்துப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ருத்ரசூக்தம் - விஷ்ணு சூக்தம் - பிரம்ம சூக்தம் என்னும் இவற்றில் ஒன்றனையாவது அல்லது வேறு சூக்தங்களில் ஒன்றனையாவது 100 அல்லது 1000 முறை ஜெபிக்க வேண்டும்.

நண்பகலில் பொன் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம், தாமிரப் பாத்திரம், மண் பாத்திரம், அந்திமரப் பாத்திரம் என இவற்றில் ஒன்றில் ஏழு வீடுகளில் மௌனமாய்ப் பிட்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழு உருண்டைகள் செய்து

1) சூரியன்
2) பிரம்மன்
3) அக்நி
4) ஸோமன்
5) வருணன்
6) விச்வே தேவர்கள்

இவர்களுக்குக் கொடுத்து மிகுந்த ஒரு உணவு உருண்டையை வளர்பிறையில் சிறிது சிறிதாகப் பெரிதாக்கியும் தேய்பிறையில் சிறிது சிறிதாகச் சிறிதாக்கியும் உண்ணல் வேண்டும் என்பது இவ்விரத விதியாகும். இது பாவநீக்கத்திற்குக் குறிக்கப்பட்டது.

இவ்விரதம் இம்முனிவர் பெயரால் சாந்திராயண விரதம் எனவும் சந்திரனின் வளர்ச்சி தேய்தல் போல உணவினை வளர்த்தும் சுருக்கியும் செய்யப்படுகிறதாதலின் சாந்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சகுணதவரு :- சகுணம் சொல்வதில் வல்லவர். இதனைச் ச+குணம் எனப்பிரித்தால் நற்குணம் நிரம்பியவர் என்று பொருள்படும்.
ரஜததவரு ;- ரஜதம் = வெள்ளி, வெள்ளி வணிகம் செய்தவர்.
மதஞ்சாராதவரு :- சைவம், வைணவம் என எம்மதத்தையும் சாராமல் அனைத்தையும் சமரசமாகக் கொண்டவர். சகல மதங்களின் சாரத்தை அறிந்தவர்.

No comments:

Post a Comment