அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/11/13

30 .காலவ மகரிஷி கோத்ரம்

பிரம்மரிஷி பதவியை அடைய வேண்டி விசுவாமித்திரர் கடுந்தவம் செய்தார். திசைதோறும் சென்று பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினார். அப்போது காலவர் அவருக்குச் சீடராய் அமைந்தார். குருவிற்குச் சகலவிதமான சேவைகளையும் செய்தார். விசுவாமித்திரர் தம் சீடரின் சேவையில் மனம் மகிழ்ந்தார். குழந்தாய் ! நீ விரும்பும் இடம் செல்க என்று அனுமதி கொடுத்தார்.
காலவர் தம் குருவிட்குக் குருதட்சிணை கொடுக்க ஆசைப்பட்டார். விசுவாமித்திரர் ஏதும் வேண்டாம் என மறுத்தார். காலவர் வற்புறுத்திக் கேட்கவே; உடல் எங்கும் சந்திரனைப் போல் வெளுத்தும் ஒரேயொரு காது மட்டும் கரிய நிறம் கொண்டு இருக்கும் 800 உத்தம ஜாதிக் குதிரைகள் வேண்டும் என்றார்.
இத்தகைய குதிரைகளை எங்கே சம்பாதிப்பேன் என்று ஏங்கிய காலவர் தன் நண்பன் கருடனின் உதவியாலும் யயாதி மன்னனின் உதவியாலும் 600 குதிரைகளை மட்டும் சம்பாதித்துக் குரு தட்சிணையாகக் கொடுத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கிராணதவரு :- கிரஹணம் என்பது கிராணம் என்று அழைக்கப்படுகின்றது. கிரஹணகாலங்களில் ஜப தபங்கள் செய்பவர்கள்.
கொல்லதவரு :- கொல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சப்ரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குச் சப்பரம் தந்து உதவியர்.
சம்சாரதவரு :- பல மனைவியருடன் வாழ்ந்தவர்.
சரமுலதவரு :- பூமாலை கட்டித் தரும் திருத்தொண்டு செய்பவர்கள்.
சித்ராவதியவரு :-சித்ராவதி நதியோரத்தில் வாழ்ந்தவர். அவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தூர்வாங்குரதவரு :- துர்வா - அறுகு, அறுகம் புல்லால் வழிபாடு செய்பவர்கள்.
பதிகெனதவரு :- குறிசொல்லுவதற்குப் பதிகெ என்று பெயர். குறி சொல்லியவர்கள்.
பிடகதவரு :- பிடகம் - வரட்டி; வரட்டி பற்றி வந்த ஒரு பெயர்.
புராணதவரு :- பதிவெண்புராணங்களில் வல்லவர்கள். புராண பிரவசனம் உபந்யாசம், பிரசங்கம் செய்பவர்.
பூஷணதவரு :- ஆபரணங்கள் அணிந்தவர்.
பேள்ளதவரு :- பேழை - பெடிய முச்சளம் பற்றி வந்த வங்குசப் பெயர்.
மந்திரிதவரு :- அமைச்சராகப் பணியாற்றியவர்.
முனிகிதவரு :- முனீஸ்வரனை வீட்டுத் தெய்வமாக வணங்கியவர்.
யோகதண்டதவரு :- யோகதண்டம் கொண்டு ஜெபதபங்கள் செய்பவர்.
ரகஸ்யதவரு :- ரகசிய சிந்தனை உள்ளவர்.
ராஹசம்தவரு :- அதிக ஆவல் - சாகசம் உள்ளவர்
வாசகதவரு :- பேச்சில் வல்லவர். சொல் ஆற்றல் மிக்கவர்.
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் சில வங்குசங்கள்:
அகசம்தவரு, அகணம்வாரு, அகளதவரு, அங்கதவரு, அசணதவரு, அச்சேணதவரு, அபணதவரு, அருபுதவரு, ஆகள்ளதவரு, ஆகாசதவரு, ஆபரணதவரு, ஆலனதவரு, கமுஜூதவரு, கம்மகடுதவரு, சரஜசாகலதவரு, சாப்பம்தவரு, சாரசதவரு, சாரசூத்ரதவரு, தோகுருதவரு, பாலதாள்ளதவரு, பிடிகெதவரு, பிடிகலெதவரு, புளிலமருதவரு,மவிலதவரு, மைல்தவரு, பெண்ணெயவரு, மந்தககாரரு, சாரஸ்வதவரு.

No comments:

Post a Comment